name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ் (09) தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

தமிழ் (09) தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் !


ஓரெழுத்து ஒருமொழி; தமிழில் அறுபதுக்கும் மேல் உள !


ஒற்றை எழுத்தே ஒரு சொல்லாக நின்று , அதற்கு ஒன்றோ பலவோ  பொருளாக  அமைவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும்.உலக மொழிகளில்  தமிழில் மட்டுமே ஓரெழுத்துச் சொற்கள் நிரம்பவும் உள்ளன, என்பது நம் மொழியின் சிறப்பு !

******************************************************************************************

- அழகு, சிவன், திருமால், திப்பிலி
ஆ -  மாடு, அற்பம், மறுப்பு, துன்பம்
இ – அண்மைச் சுட்டு
  -  அம்பு, அழிவு, ஒரு சிற்றுயிர், கொடு
உ – சுட்டெழுத்து, சிவன், உமை, நான்முகன்
ஊ - ஊன்இறைச்சிஉணவு, திங்கள், தசை
எ – வினாவெழுத்து, 7 என்பதன் குறி
- ஏவுதல், அம்பு,  இறுமாப்பு, மேல் நோக்கல்
– நுண்மை அழகுஅரசன், இருமல், குரு, கோழை
– ஒழிவு, மதகுப் பலகை,  கொன்றை, உயர்வுநினைவு
நிலம், விளிப்பு, கடிதல்,
- நெருப்பு ,அரசன், நான்முகன், காற்று, காமன், மனம்
கா - சோலை, காத்தல், காவடி, வருத்தம், வலி, துலை
கு - பூமி, குற்றம், சிறுமை, தடை, நிறம், நீக்கம்
கூகூவு, நிலம், பூமி
கை - கரம், இடம், உடனே, ஒழுக்கம், சேனை, ஆள், ஆற்றல்
கோ - அரசன்அம்பு, ஆண்மகன், கண், எருது, பசு, பூமி, கோத்தல்
கௌ - 'கௌவு' என்று ஏவுதல்கொள்ளு, தீங்கு
சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல், பேய், சோர்தல்
சீ அடக்கம், அலட்சியம், ஒளி, கலைமகள், பெண், விந்து, துயில்
சூ சுளுந்து, வாண வகை, விரட்டும் ஒலிக்குறிப்பு, நாயை ஏவுதல்
சே - சிவப்பு, இடபராசி, அழிஞ்சில் மரம், எருது, காளை,
சோ - மதில்அரண், உமை, வாணாசுரன் நகர்
ஞா கட்டு, பொருந்து
குபேரன், நான்முகன்
தாகொடு, அழிவு, குற்றம், கேடு, தாண்டு, பகை, வலி,
தீ - நெருப்பு, அறிவு, இனிமை, கொடுமை, சினம், நஞ்சு
துஎரித்தல், கெடுத்தல், வருத்தல், வளர்தல், ”உண்என ஏவல்
தூ – தூய்மைதசை, பகை, பற்றுக்கோடு, வெண்மை, வலிமை
தே கடவுள், அருள், கொள்ளுகை, நாயகன், தெய்வம்
தை - தைத்தல், தை மாதம், பூச நாள், மகர இராசி, ஒப்பனை
இன்மைப் பொருள், மிகுதிப் பொருள் உணர்த்தும் எழுத்து
நா - நாக்கு, அயல், அயலார், திறப்பு, பொலிவு, சுவாலை
நீ - முன்னிலை ஒருமைப் பெயர்
நு தோணி, நிந்தை, நேரம், புகழ்
நூ - எள், யானை, அணிகலன், தள்ளு, தூண்டு, அசை,
நேஅன்பு, அருள், நேயம்
நை – நைதல், கெட்டுப்போதல், வருந்துதல், நசுங்குதல், வாடல்
நொதுன்பம், நோய், வருத்தம், தளர்வு, நொய்ம்மை
நோ – வலி, சிதைவு, துக்கம், துன்பம், நோய், வலுவின்மை
நௌ - மரக்கலம்கப்பல்.
காற்று, பெருங்காற்று, சாபம், 1/20 - என்பதன் குறி
பா - பாடல்அழகு, நிழல், பரப்பு, பரவு, தூய்மை, பாம்பு
பி - அழகு.
பீ மலம், தொண்டி அச்சம்.
பூ மலர், அழகு, இடம்இலை, கூர்மை, பூமி, பொலிவு, மென்மை
பே – அச்சம், நுரை, மேகம், இல்லை எனும் பொருள் தரும் சொல்
பை - பசுமை, அழகு, இளமை, நிறம், பாம்பின் படம், பொக்கணம்,
போ - 'செல்' என்று ஏவுதல்.
இயமன், காலம், நிலா, சிவன், நஞ்சு, நேரம்
மா - ஒரு மரம், அழகு, அளவு, அறிவு, ஆணி, மாவு, மிகுதி, வயல்
மீ - ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம்
மூ – மூன்று, மூப்பு,
மே -  மேன்மை, மேம்பாடு, அன்பு
மை - இருள், எழுது மை, கறுப்பு, குற்றம், நீர், மலடி, மேகம்
மோமூக்கினால் மோந்து பார்த்தல்
யா - 'யாவை' , ஐயம், அகலம், கட்டுதல், பாடல் யாத்தல்
வா - 'வா' என்று அழைத்தல்.
வி - விசை, அதிகம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவைஅழகு
வீ பறவை, நீக்கு, கொல், பூ, விரும்பு, போதல், பூந்தாது
வே – (கூரை) வேய்தல், வேவு பார்த்தல்
வை - 'வை' என்று ஏவுதல், வைக்கோல், கூர்மை, வையகம்

---------------------------------------------------------------------------------------------------------
         
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை.

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம்,

[தி.: 2050, சுறவம், 23.]

{06-02-2019}

----------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .