name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 09/04/19

புதன், செப்டம்பர் 04, 2019

ஐந்திறம் (01) சித்திரையில் புத்தாண்டு, பிறப்பதில்லை !

எந்த மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு,  பிறக்கிறது ?  



தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம்தையா ? “சித்திரையா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணி மன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தைமுதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது.

இந்த நிலையில் நாளை, “சித்திரைபிறக்கிறது. முந்தைய  வழக்கத்தின் அடிப்படையில் சிலர்புத்தாண்டுவாழ்த்துத் தெரிவிக்கக் கூடும். ”தைமாதமே புத்தாண்டு பிறந்து விட்டது. எனவே இப்போதுவாழ்த்துக் கூற வேண்டிய தேவை எழவில்லை. இதன் தொடர்பாக வானறிவியல் விளக்கம், படத்துடன் தரப்படுகிறது.

01.  வான் அறிவியலின்படி (ASTRONOMY) , டிசம்பர் 21 அன்று, உலக உருண்டையின் தென்பகுதியில் (SOUTH HEMISPHERE)  23-1/2 பாகையில் உள்ள சுறவக் கோட்டிலிருந்து (மகர ரேகை) சூரியன், வடக்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்த வடக்கு நோக்கிய நகர்வை, (பயணத்தை) ”பஞ்சாங்கம்வடமுகச் செலவு (உத்தராயணம்) என்று சொல்கிறது. டிசம்பர் 21 என்பது சிலை (மார்கழி) மாதத்தின் 5 –ஆம் நாள். 

02. வான் அறிவியலின் (ASTRONOMY) படி சிலை (மார்கழி) மாதம் 5 –ஆம் நாளில் தொடங்கும் வடமுகச் செலவை (உத்தராயணத்தை) பஞ்சாங்கம் சுறவம் (தை) மாதம் முதல் நாளில் தொடங்குவதாகக் குறிப்பிடுகிறது. இது ஒரு முரண்பாடு.

03. வடக்கு நோக்கிய நகர்வில் இருக்கும் சூரியன் மார்ச் 21 அன்று நில நடுக் கோட்டை (பூமத்திய ரேகையை) அடைகிறது. மார்ச் 21 என்பது மீனம் (பங்குனி) மாதத்தின் 7-ஆம் நாளுக்குச் சமம்.

04.  தொடர்ந்து வடக்கு நோக்கிய நகர்வில் இருக்கும் சூரியன் சூன் 21 அன்று, உலக உருண்டையின் வடபகுதியில்  (NORTH HEMISPHERE)  23-1/2 பாகையில் உள்ள கடகக் கோட்டைத் தொட்டுவிட்டு, வந்த வழியிலேயே எதிர்த் திசையான தெற்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்த தெற்கு நோக்கிய நகர்வை (பயணத்தை) “பஞ்சாங்கம்தென்முகச் செலவு (தட்சிணாயணம்) என்று சொல்கிறது. சூன் 21 என்பது ஆடவை (ஆனி) மாதத்தின் 6 –ஆம் நாள்.

05.  வான்  அறிவியலின் (ASTRONOMY)  படி ஆடவை (ஆனி) மாதம் 6 –ஆம் நாளில் தொடங்கும் தென்முகச் செலவை (தட்சிணாயணத்தை) பஞ்சாங்கம் கடகம் (ஆடி) மாதம் முதல் நாளில் தொடங்குவதாகக் குறிப்பிடுகிறது. இதுவும் ஒரு முரண்பாடு.

06.  தெற்கு நோக்கிய நகர்வில் இருக்கும் சூரியன் செப்டம்பர் 23 அன்று நில நடுக் கோட்டை (பூ மத்திய ரேகையை)  அடைகிறது.  செப்டம்பர் 23 என்பது கன்னி (புரட்டாசி) மாத்த்தின்  6 –ஆம் நாளுக்குச் சமம்.

07 தெற்கு நோக்கிய நகர்வில் இருக்கும் சூரியன் டிசம்பர் 21 அன்று  சுறவக்கோட்டை (மகர ரேகை) அடைந்து மீண்டும் தன் வடமுகப் பயணத்தைத் தொடங்குகிறது. இந்தச் செய்தியின் விரிவு, மேலே பத்தி 1 –ல் தரப்பட்டுள்ளது. அதைக்காண்க !


வான் அறிவியலின் (ASTRONOMY)  படி சிலை (மார்கழி) மாதம் 5-ஆம் நாளே வடமுகச் செலவு (உத்தராயணம்) தொடங்கிவிடுகிறது  ஆனால் பஞ்சாங்கத்தின் படி, மேலும் 23 நாள் சென்ற பின்பு, சுறவம் (தை) மாதம் முதல் நாளில் தொடங்குவதாகச் சொல்லப்படுகிறது.

இது போன்றே, ஆடவை (ஆனி) மாதம் 6 –ஆம் நாள் தென்முகச் செலவு (தட்சிணாயணம்) தொடங்குகிறது. ஆனால் பஞ்சாங்கத்தின் படி மேலும் 25 நாள் சென்ற பின்பு, கடகம் (ஆடி) மாதம் முதல் நாளில் தொடங்குவதாகச் சொல்லப்படுகிறது.

வான் அறிவியலின் (ASTRONOMY)  படி, சூரியச் செலவின் (பயணத்தின்) சிறப்பு நாள்கள்  என்பவை சிலை (மார்கழி) 5-ஆம் நாள், மீனம் (பங்குனி) 7-ஆம் நாள், ஆடவை (ஆனி) 6 –ஆம் நாள், கன்னி (புரட்டாசி) 6 –ஆம் நாள் ஆகியவையே. இதில் மேழம் (சித்திரை) முதல் நாள் எங்கிருந்து வந்து சேர்ந்தது ? சித்திரை முதல் நாளில் புத்தாண்டு எப்படித் தொடங்கும் ?

வடமொழியார் வகுத்துள்ள வானியல் கணிப்புக்கும் அறிவியலார் வகுத்துள்ள வானியல் கணிப்புக்கும் வேறு பாடு உள்ளது. சூரியச் செலவை (நகர்வை) தவறாகக் கணித்து, அதன் அடிப்படையில் ஏற்படுத்தப் பெற்றமேஷம்”, “ரிஷபம்”, “மிதுனம்”........”மீனம்முதலான மண்டிலங்கள் (இராசிகள்) தவறாக அமைகின்றன. எனவே இந்த தவறான கணிப்பின் அடிப்படையில், சூரியன்மீனம்மண்டிலத்திலிருந்துமேஷம்மண்டிலத்தில் நுழையும்சித்திரைமுதல் நாளே புத்தாண்டு நாள் என்று வடமொழியார் வகுத்துள்ள விதி பொருத்தமற்றது.

ஆகையால், “சித்திரைமுதல் நாள் புத்தாண்டின் தொடக்கமும் அன்று; அதைக் கொண்டாட எவ்விதக் காரணமும் இல்லை ! சில திங்கள் முன்பு தமிழ்ப் பணி மன்றத்தில் அறிவித்திருந்த படி சுறவம்” (தை) முதல் நாளே புத்தாண்டு நாள் ! சுறவம் திங்களே புத்தாண்டின் தொடக்க மாதம் !

ஆகவே, நண்பர்களே ! “சித்திரைமுதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டு ஒருவர்க்கொருவர் வாழ்த்துச் சொல்லிக் கொள்வதைக் கைவிடுவோம் !

--------------------------------------------------------------------------------------------------------

[ அறிவியல் கோட்பாட்டின்படி, சூரியன் ஒரே இடத்தில் நிலையாக இருக்கிறது. அது வடக்கு நோக்கியோ, தெற்கு நோக்கியோ நகர்வதில்லை. ஆனால் வடமொழியார் வகுத்துள்ள பஞ்சாங்கத்தின் படியும், அவர்கள் ஏற்படுத்தியுள்ள சோதிடக் கலையின் படியும் பூமி நிலையாக ஒரே இடத்தில் நிற்கிறது; சூரியன் தான் நகர்கிறது. கட்டுரையைப் படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்பாக, சூரியன் வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் நகர்வதாகத்  தெரிவிக்கப் பட்டுள்ளது. ]

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம்,30]
{13-04-2019}

-----------------------------------------------------------------------------------------------------------

     “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------



ஐந்திறம் (02) தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? ”சித்திரையா” ?


சித்திரையில்  புத்தாண்டு பிறப்பதில்லை  !



தமிழ்ப் புத்தாண்டுசித்திரையில் தான் தொடங்க வேண்டுமா ? “தையில் தொடங்கக் கூடாதா ? இதைப் பற்றி நாம் சற்று ஆய்வு செய்வோமே !


கணக்கீட்டு வசதிக்காக, பூமிக் கோளமானது குத்துக் கோடுகள் (LATITUDE) மற்றும் கிடைக் கோடுகளாக (LONGITUDE) நிலஅறிவியல் அறிஞர்களால் பகுக்கப்பட்டுள்ளது. கிடைக் கோடான 0 (சுழி) பாகை என்பது, இந்திய வரை படத்தைப் பொறுத்த வரையில்  இலங்கைக்குத் தெற்கே  கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இதற்கு நில நடுக்கோடு (EQUATOR) என்று பெயர் !


இலங்கையின் உள்ள கொழும்பு நகர், நில நடுக்கோட்டுக்கு வடக்கில் (கவனிக்கவும்வடக்கில், தெற்கில் அல்ல ) ஏறத்தாழ 7 பாகை அளவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி 8 பாகை வடக்கில் உள்ளது. சென்னை 13 பாகை வடக்கில் உள்ளது. கல்கத்தா 22-1/2பாகை வடக்கில் உள்ளது. இந்தியாவின் வடகோடியில் உள்ள ஸ்ரீநகர் 34 பாகை வடக்கில் உள்ளது !


மகர ரேகை (CAPRICORN), என்பது நில நடுக்கோட்டுக்கு 23-1/2 பாகை தெற்கே (அதாவது 3,313 கி.மீ தெற்கே) கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கடக ரேகை என்பது (CANCER) நில நடுக்கோட்டுக்கு 23-1/2 பாகை வடக்கே, அதாவது கல்கத்தாவுக்கு சற்று வடக்கில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது !


செப்டம்பர் 22-ல் நில நடுக்கோட்டுக்கு நேர் மேலே உச்சி வானத்தில் இருக்கும் சூரியன் சிறிது சிறிதாக  தெற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 22-ல் 23-1/2 பாகை தெற்கில் உள்ள மகர ரேகையை அடைகிறது. நாம் வாழும் இடம் சென்னை என வைத்துக் கொள்வோம். டிசம்பர் 22 அன்று சென்னையிலிருக்கும் நமது உச்சந்தலைக்கு நேர் மேலே உள்ள வானத்திலிருந்து  தெற்கில் ஏறத்தாழ 6150 கி.மீ தள்ளி சூரியன் இருப்பதால், நாம் இந்தக் காலப்பகுதியில் மிகுதியான குளிரை உணர்கிறோம். சூரியன் அருகில் இருந்தால் வெப்பம் மிகும்; தொலைவில் செல்லச் செல்ல வெப்பம் குறைந்து குளிர் மிகும்  என்பதை நினவிற் கொள்ளுங்கள் !

--------------------------------------------------------------------------------------------
சூரியன் இருக்கும் இடம், [பாகை அளவில்]
---------------------------------------------------------------------------------------------

செப்டம்பர் 22..... = புரட்டாசி 6-ஆம் தேதி. [ 0 பாகை]
டிசம்பர் 22..............= மார்கழி 7-ஆம் தேதி....[23-1/2* தெ]
மார்ச்சு 21...............= பங்குனி 8-ஆம் தேதி.....[ 0 பாகை]
ஜூன் 21..................= ஆனி 7-ஆம் தேதி.............[23-1/2* ]

-------------------------------------------------------------------------
[ 0 பாகை = நில நடுக்கோடு என்று பொருள்]
-------------------------------------------------------------------------

மகர ரேகையை  அடையும் சூரியன் பின்பு டிசம்பர் 22-ல் வடக்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. வடக்கு நோக்கிய இந்த நகர்வுக்குஉத்தராயணம்என்று பெயர். வான் அறிவியலின் (ASTRONOMY) படி உத்தராயணம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22-ல் அதாவது, மார்கழி 7 () 8-ல் தொடங்குகிறது. ஆனால் பஞ்சாங்கத்தின் படி தை முதல் நாளில் தான் உத்தராயணம் தொடங்குகிறது !


சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச்சு 21 –ல் (பங்குனி 7 () 8) நில நடுக்கோட்டை அடைகிறது. நில நடுக்கோட்டிலிருந்து சூரியன் வடக்கு நோக்கி நகரும் (உத்தராயணம்) இந்த நாளைத் தானே (அதாவது, பங்குனி 7 () 8) புத்தாண்டாக அறிவித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், சோதிடக் கலையின் அடிப்படையில், மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சூரியன் நகரும் நாளான சித்திரை ஒன்றாம் தேதியை ஆண்டுப் பிறப்பாகவும் உத்தராயணத் தொடக்கமாகவும்  அறிவித்திருப்பது முரண்பாடானது அல்லவா ?


இதிலிருந்து ஒன்று உங்களுக்கு விளங்கி இருக்கும்.  அதாவது, சித்திரை மாதம் முதல் தேதியன்று இப்போது கொண்டாடப்படும் தமிழ் (?) வருடப்பிறப்பு அறிவியல் அடிப்படையில் சரியன்று ! சோதிட அடிப்படையில் மட்டுமே சரி ! சோதிடம் என்பது அறிவியல் அளவுகோலின்படி மெய்ப்பிக்கப்பட்டது அல்லவே ?


வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்குத் தை மாதம் என்பது அறுவடை மாதம். உழைத்துப் பாடுபட்டதற்கு ஊதியத்தைக் காணும் மாதம். தனது உழைப்பினால் விளைந்த நெல்லைக் குத்தி அரிசியாக்கி, சர்க்கரைப் பொங்கல் செய்து வேளாண்மைக்கு உதவி செய்த சூரியனுக்கு விழா எடுக்கும் நாள். இந்த நல்ல நாளே வேளாண் மக்களுக்குத் திருநாள். இந்த நல்ல நாளில் திருவள்ளுவர் ஆண்டும் தொடங்குவதால், தை முதல் நாளே தமிழர்களுக்குப் புத்தாண்டு நன்னாள் !


எதிர்வரும் (15-01-2019) தை முதல் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு நன்னாள். திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பும் இந்நாளே ! தமிழர்கள் அனைவரும் இந்த நன்னாளைத் தமிழ்ப் புத்தாண்டு நாளாகவும், திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு நாளாகவும், பொங்கல் திருநாளாகவும் கொண்டாடி மகிழ்வோம் ! புத்தாண்டு வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வோம் !


-------------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற்குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 22]
 (06-01-2018) 

-------------------------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு:-
----------------------

அறிவியலின்படி பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. ஆனால், சோதிடக் கலையின் படி சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது. படிப்பவர்களுக்கு எளிதில் புரிவதற்காக, இந்தப் பதிவில், சூரியன் நில  நடுக் கோட்டிலிருந்து வடக்கும் தெற்குமாக நகர்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கருத்திற் கொள்க ! 


------------------------------------------------------------------------------------------------------------



  






ஐந்திறம் (03) நாண்மீன்களின் தமிழ்ப் பெயரும் வடிவமும் !

ஒவ்வொரு விண்மீன் கூட்டமும் எந்த வடிவில் இருக்கிறது ?


 அசுவதி.....................= புரவி (அசுவதி நாள்)
 பரணி.......................= அடுப்பு (பரணி நாள்) 
  கார்த்திகை............= ஆரல் (கார்த்திகை நாள்)
  ரோகிணி................= சகடு  (ரோகிணி நாள்)
  மிருகசீரிடபம்.......= மான்றலை (மிருகசீரிடப நாள்)
  திருவாதிரை.........= மூதிரை (திருவாதிரை நாள்)
  புனர்பூசம்..............= கழை (புனர்பூச நாள்)
  பூசம்.........................= காற்குளம் (பூச நாள்)
  ஆயில்யம்..............= கட்செவி (ஆயில்ய நாள்)
  மகம்..........................= கொடுநுகம் (மகநாள்)
  பூரம்..........................= கணை (பூரம் நாள்))
  உத்தரம்...................= உத்தரம் (உத்தர நாள்)
  அஸ்தம்....................= கை (அத்த நாள்)
  சித்திரை..................= அறுவை (சித்திரை நாள்)
  சுவாதி......................= விளக்கு (சுவாதி நாள்)
  விசாகம்...................= முறம் (விசாக நாள்)
  அனுஷம்..................= பனை (அனுட நாள்)
  கேட்டை...................= துளங்கொளி (கேட்டை நாள்)
  மூலம்........................= குருகு (மூலநாள்)
  பூராடம்....................= உடைகுளம் (பூராட நாள்)
  உத்தராடம்.............= கடைக்குளம் (உத்தராடம் நாள்)
  திருவோணம்.........= முக்கோல் (திருவோண நாள்)
  அவிட்டம்.................= காக்கை (அவிட்ட நாள்)
  சதயம்.......................= செக்கு (சதயநாள்)
  பூரட்டாதி.................= நாழி (பூரட்டாதி நாள்)
  உத்தரட்டாதி..........= முரசு (உத்தரட்டாதி நாள்)
  ரேவதி........................= தோணி (இரேவதி நாள்

-------------------------------------------------------------

விண்ணில் இருக்கும் மீன்களை நாம் எப்படி அடையாளம் காண்பது ?  

அசுவதி. பரணி எனப் பெயரிடப் பட்டுள்ள மீன்களுள்,  ஒருசில மட்டுமே ஒற்றை மீன்கள்; ஏனையவை ஒன்றுக்கு மேற்பட்ட மீன்கள் அடங்கிய கூட்டங்கள். எடுத்துக் காட்டாக அசுவதி என்பது 6 மீன்கள் கொண்ட கூட்டத்தின் பெயர். இவை ஆறும்  சேர்ந்த உருவம், குதிரைத் தலை வடிவத்தில் இருக்கும். வடிவத்தை வைத்து இதற்கு வடமொழியில் “அஸ்வம்” என்று பெயரிட்டனர். நாம் “அசுவதி” ”அசுவினி”, “அசுபதி” என்றெல்லாம் நம் விருப்பம் போல்  சொல்கிறோம். தமிழில் “புரவி” என்று பெயர் !  “புரவி” என்றால் “குதிரை” என்று பொருள் !

பரணி என்பது மூன்று மீன்கள் கொண்ட கூட்டம். இம்மூன்றும் அடுப்புக் கொண்டை வடிவத்தில்  அருகருகே அமைந்துள்ளன. வடமொழியில் இதை “பரணி” என்கின்றனர். தமிழில் “அடுப்பு” என்று பெயர். பூமியிலிருந்து இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்தால். தமிழில் உள்ள “ஃ” எழுத்தைப் போல, விறகு அடுப்பின் கொண்டை போலக் காணப்படும் மூன்று மீன்களுக்கு நம் முன்னோர் “அடுப்பு” எனப் பெயரிட்டுள்ளனர்.

கார்த்திகை என்பது பல மீன்கள் கொண்ட கூட்டம். நெருப்பு கொட்டிக் கிடப்பது போன்ற வடிவத்தில் இவை விண்ணில் அமைந்துள்ளதால், இக்கூட்டத்திற்கு நம் முன்னோர் “ஆரல்” என்று பெயரிட்டுள்ளனர். ஆரல் என்றால் “நெருப்பு” என்று பொருள்.

ஒவ்வொரு விண்மீனுக்கும் இவ்வாறே அவற்றின் உருவத்தை வைத்துப் பெயர் இடப்பட்டுள்ளன.  தமிழ்ப் பெயர்களை மறந்து விட்டு, வடமொழிப் பெயர்களை மட்டும் நினைவிற் கொண்டிருக்கிறோம் !

இரவு நேர வானத்தின் வெவ்வேறு பகுதிகளை எவ்வாறு அடையாளம் காண்பது  என்பதைச் சிந்தித்த நம் முன்னோர்,  விண்மீன்கள் இடம் பெயராமல் நிலையாக ஒரே இடத்தில் இருக்கின்றன  என்பதை  முதலில் அறிந்தனர்.  அடுத்து ஒருசில மீன்களைக் கற்பனையாக இணைத்துப் பார்க்கையில் அதில் ஒரு உருவம் அடங்கி இருப்பதைக் கண்டனர் !

இவ்வாறு 27 விண்மீன்களுக்கும் வெவ்வேறு உருவங்களைக் கண்டறிந்து  அவற்றுக்கு  ஏற்றாற்போல் பெயர்களையும்  இட்டனர் !
 
இரவு நேரத்தில் வானத்தில் காணப்படும் மீன்கள் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி  இடம்பெயர்வது போல நமக்குத் தோன்றும். உண்மையில் மீன்கள் இடம்பெயர்வதில்லை.  பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கிறது என்பதை பள்ளிப்பாடங்களில் படித்திருக்கிறோம். இந்தச் சுழற்சியின் காரணமாகத்தான், மீன்கள்  மெல்ல மெல்ல மேற்கு நோக்கி இடம்பெயர்வது போல்  நமக்குத் தோன்றுகிறது !


தமிழர்கள் தமிழ்ப் பெயர்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம். வடமொழிப் பெயர்களை மறப்போம் !


----------------------------------------------------------------------------------------------------------

ஐயமிருப்போர், கழகத் தமிழ்தமிழ் அகராதி, சூடாமணி நிகண்டு ஆகியவற்றை ஆய்வு செய்து தெளிவு பெறுக !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 3.]
(17-01-2019)

----------------------------------------------------------------------------------------------------------
     
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------