name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 12/18/15

வெள்ளி, டிசம்பர் 18, 2015

புதிய தமிழ்ச் சொல் (30) பின்னீடு (REFILL)

புதுச்சொல் புனைவோம் !


REFILL = பின்னீடு

---------------------------------------------------------------------------------------------------------

 

தமிழ்ப் பணி மன்ற நண்பர்களில் எத்தனை பேர் கிராமப் புறங்களைச் சார்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. 

 

ஆனால், இப்போது நகர்ப்புறங்களில் வாழ்ந்தாலும் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமத்தில் தான்என்று சொல்லிக் கொள்ளும் வகையில் பெரும்பான்மையான நண்பர்கள் இருக்கக் கூடும் என்று கருதுகிறேன். 

 

கிராமப் புறங்களில் தான், தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. 

 

கிராமத்தில் ஒரு கூரை வீடு. வீட்டுத் திண்ணையில் ஒரு தாயும் மகளும் உரையாடுகிறார்கள். உரையாடலைப் பேச்சுத் தமிழில் சொல்லாமல், எழுத்துத் தமிழில் தருகிறேன். 

 


ஏனடி தாமரை ! அடுப்பில் இட்டலி ஊற்றி வைத்திருந்தேனே ! எடுத்துவிட்டாயா?”

 

எடுத்துவிட்டேனம்மா ! ஆமாம் ! எத்தனை ஈடு ஊற்ற வேண்டும் ?”

 

இரண்டு ஈடு ஊற்றினால் போதும் ! அதற்குமேல் ஊற்றாதே !

 

இந்த இடத்தில், நண்பர்களுக்கு ஒரு கேள்வி ! ஈடுஎன்றால் என்ன ?

 

இடுஎன்னும் சொல்லின் திரிபு தான் ஈடு”. இலக்கணத்தில் இதை நீட்டல் விகாரம் என்று சொல்வார்கள். 

 

இட்டலித் தட்டில் மாவு இட்டு, பானைக்குள் வைத்து, அடுப்பில் ஏற்றுகிறார் தாய். இது முதலாவது ஈடு”.முதல் என்றால் முந்தி நிற்பது”, “முன்னணியில் நிற்பது”, “முதலாவதாக நிற்பதுஎன்று பொருள். [ஒப்பு நோக்குக:- முதலமைச்சர், முதல் நாள்] எனவே முதல் ஈடு என்பது, முன்மை + ஈடு = முன்னீடு என்று அமையும்.

 

வேகவைத்து எடுத்த பின், இரண்டாவது முறையாக மாவைத் தட்டில் இடுகிறாள் மகள். இது இரண்டாவது ஈடு”. வெந்த இட்டலிகளை எடுத்து விட்டு, அதற்குப் பின்னதாக இட்டலித் தட்டில் மீண்டும் மாவை இடுவதால், இரண்டாவது ஈடு என்பது பின்னீடு [பின்மை + ஈடு + பின்னீடு]

 

நகரத்திற்கு வாருங்கள் ! காப்புக் குடுவைக்குள் [THERMOS FLASK] இருக்கும் கண்ணாடிக் கலன் உடைந்து விட்டது. கடைக்குச் சென்று ரீபில்” [REFILL] கொடு என்று கேட்கிறோம். அதற்குத் தமிழில் என்ன பெயர் ?

 

மணி(முனை)த் தூவலில் [BALL POINT PEN] மை தீர்ந்து விட்டது. கடைக்காரரிடம் ரீபில்தருமாறு கேட்கிறோம். ரீபில்என்பதைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ? சிந்திக்க மறந்து விட்டோமே !

 

ரீபில்என்றால் என்ன ? ஒன்று இருந்த இடத்தில் அதை எடுத்துவிட்டு மற்றொன்றை மாற்றி இட்டால் அதுதான் ரீபில்”. மாற்றாக இடுவதால் அதை மாற்றீடு என்றும் சொல்லலாம்.

 

ஆலையில் காப்புக் குடுவையைத் {THERMOS FLASK] தயாரிக்கும் போது, வெப்பத்தை வெளியே விடாத உள்ளீடற்ற இரட்டைச் சுவர் அமைந்த கண்ணாடிக் கூடு [SHELL] ஒன்று குடுவைக்குள் வைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதற்கு ஷெல்என்று பெயர். 

 

இந்த ஷெல்உடைந்து விட்டால், உடைந்ததை எடுத்துவிட்டு புதிய ஷெல்ஒன்றைக் கடைக்காரர் குடுவைக்குள் பொருத்தித் தருகிறார். 

 

முன்பு இருந்த ஷெல்லுக்கு மாற்றாக இதைப் பொருத்துவதால் இதற்கு ஆங்கிலத்தில் ரீபில்என்று பெயர்.

 

ரீபில்என்பதன் நேரடி மொழி பெயர்ப்பு மாற்றீடுஎன்பது. நேரடி மொழி பெயர்ப்புத் தான் செய்ய வேண்டுமா ? அப்படி எந்தவொரு கட்டாயமும் கிடையாது. 

 

ஆலையில் முதலாவதாகப் பொருத்தப் பெற்ற ஷெல்உடைந்து போய்விட்டால் அதை எடுத்துவிட்டுப் பின்னதாகப் பொருத்தப் பெறும் ஒவ்வொரு ஷெல்லுமே பின்னீடுதான். 

 

பின்னதாக இடப் பெறுவது பின்னீடு”. அவ்வளவு தான் ! ஆங்கிலத்தில் இதை ரீபில்என்கிறார்கள். நாம் இதை பின்னீடுஎன்போமே !

 

மாற்றீடுஎன்பதைவிடப் பின்னீடுஎன்பது சிற்றுருச் சொல். பொருள் நயமும் ஒலி நயமும் இருக்கின்றன ! 

 

எனவே ஆங்கிலத்தில் ரீபில்என்பதை இனி தமிழில் பின்னீடுஎன்றே சொல்வோம் ! பின்னீடுடன் இணைந்து உருவாகும் வேறு சில சொற்களையும் அறிந்து கொள்வோமே !

 

==============================================================


REFILL


=  
பின்னீடு

THERMOS FLASK REFILL

=  குடுவைப் பின்னீடு

BALL POINT PEN REFILL

=  மணித் தூவல் பின்னீடு

HARLICKS REFILL PACK

=  ஆர்லிக்சு பின்னீடு

REFILL PACK

பின்னீட்டுப்பொதி

 

==============================================================

 

BALL POINT................................ = மணி முனை 

PEN................................................ = தூவல்

BALL POINT PEN........................= மணித்தூவல்*


*சுருக்கமாக மணித்தூவல்.

==============================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல். 

{18-12-2015}

============================================================== 


     

புதிய தமிழ்ச் சொல் (29) அளகை ( BANK)

புதுச்சொல் புனைவோம் !



BANK = அளகை

----------------------------------------------------------------------------------------------------

வங்கிக் கணக்கு இல்லாத மனிதனை, இப்போது காண்பது அரிது. நடுவணரசின் சில திட்டங்களால் வங்கிக் கணக்கு எண்ணிக்கையும் வங்கிகளின் செயல்பாடும் மிகுந்து விட்டன.

 

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள், தனியார் வங்கிகள், நாட்டுடைமை வங்கிகள், அயல் நாட்டு வங்கிகள் என வங்கிகளின் வகையும் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிவிட்டன. 

 

பேங்க்என்ற ஆங்கிலச் சொல் தமிழில் எவ்வாறெல்லாம் மொழி பெயர்க்கப் பட்டது தெரியுமா ? முதலில் ”BANK ” என்பதை பேங்க்என்றனர். 

 


 

பின்பு அது பாங்குஆயிற்று. இப்போது வங்கிஎன வழங்கப்படுகிறது .(வங்கி என்றால் கோணல் என்று பொருள்) 

 

இவை எதுவுமே பேங்க்என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் அன்று. மூளை முடக்கம் பெற்றவர்களின் மொழி பெயர்ப்பு இவை !

 

வங்கியின் பணிகள் யாவை ? சுருங்கச் சொன்னால், பணத்தைப் பெறுதல், தருதல், அவ்வளவே ! 

 

ஆதாயம் ஈட்டும் எண்ணத்துடன் இது ஒரு தொழிலாகச் செய்யப் படுகிறது. எனவே இது ஒரு வணிகம் தான்! என்ன வகையான வணிகம்? பண வணிகம் !

 

பணவணிகம்என்ற அடிப்படையில், வங்கியின் பணிகள் விரிவு அடைகின்றன !  ”நகைக் கடன்”, “வீட்டு அடைமானக் கடன்” ,”நில அடைமானக் கடன்” - இப்படி நிறைய உள்ளன ! 

 

கடனுக்கு ஆதாயமாக வட்டி பெறுவதனால், வங்கி ஒரு வணிக நிறுவனம்ஆகிறது. சேவை நிறுவனம்அல்ல !

 

தமிழகத்தில் ஒரு காலத்தில் பணவணிகம்செய்வதில் செட்டியார்கள்முன்னணியில் இருந்தனர். 

 

இவர்களுக்கு அளகையர்என்று பெயர். அளகையர்என்றால், ”செட்டியார்”, ”பணவணிகர்என்று பொருள் உரைக்கிறது கழகத் தமிழ் அகராதி”.

 

முன்பு செட்டியார்கள் செய்து வந்த பண வணிகத் தொழிலைத்தானே இப்போது வங்கிகள் செய்து வருகின்றன. அப்படி இருக்கையில் வங்கியை அளகைஎன்று சொல்வது பொருத்தம் தானே !

 

வேறொரு செய்தியையும் இந்த இடத்தில் இணைத்துப் பாருங்கள்.நிதிக் கடவுளான குபேரனின் தலை நகரின் பெயர் அளகைஎனப்படும் அளகாபுரி ! 

 

நிதி புழங்கும் இடமான வங்கிக்கு நாம் சூட்டும் பெயரும் அளகை” !. என்ன பொருத்தம் பாருங்கள் !

 

எனவே நாம் இனிமேல் வங்கிஎன்னும் பொருத்தமற்ற சொல்லைத் துறப்போம் ! 

 

பொருள் ஆழமும், சுருங்கிய வடிவும், ஒலி நயமும் உடைய அளகைஎன்னும் சொல்லைப் புழக்கத்தில் கொண்டு வருவோம் ! 

 

அளகைஎன்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !

 

=========================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

{18-12-2015}

=====================================================