name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஐந்திறம் (05) ஆண்டுகளின் தூய தமிழ்ப் பெயர்கள் !

புதன், செப்டம்பர் 04, 2019

ஐந்திறம் (05) ஆண்டுகளின் தூய தமிழ்ப் பெயர்கள் !

தமிழ்ப் பற்றாளர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள் !



       01)   பிரபவ..........................= நற்றோன்றல்
       02)   விபவ...........................= உயர் தோன்றல்
       03)   சுக்கில........................= வெள்ளொளி
       04)   பிரமோதூத...............= பேருவகை
       05)   பிரஜோற்பத்தி........= மக்கட்செல்வம்
       06)   ஆங்கிரச....................= அயல்முனி
       07)   ஸ்ரீமுக..........................= திருமுகம்
       08)   பவ................................= தோற்றம்
       09)   யுவ.................................= இளமை
       10)  தாது...............................= மாழை
       11)  ஈஸ்வர..........................= ஈச்சுரம்
       12)  வெகுதான்ய..............= கூலவளம்
       13)  பிரமாதி........................= முன்மை
       14)  விக்கிரம......................= நேர்நிரல்
       15)  விஷு............................= விளைபயன்
       16)  சித்திரபானு...............= ஓவியக்கதிர்
       17)  சுபானு..........................= நற்கதிர்
       18)  தாரண..........................= தாங்கெழில்
       19)  பார்த்திப......................= நிலவரையன்
       20)  விய................................= விரிமாண்பு
       21)  சர்வசித்து....................= முற்றறிவு யாவுந்திறல்
       22)  சர்வதாரி......................= முழுநிறைவு
       23)  விரோதி.......................= தீர்பகை
       24)  விக்ருதி........................= வளமாற்றம்
       25)  கர...................................= செய்ந்நேர்த்தி
       26)  நந்தன...........................= நற்குழவி
       27)  விஜய.............................= உயர்வாகை
       28)  ஜய..................................= வாகை
       29)  மன்மத..........................= காதன்மை
       30)  துன்முகி........................= வெம்முகம்
       31)  ஹேவிளம்பி................= பொற்றடை
       32)  விளம்பி..........................= அட்டி
       33)  விகாரி.............................= எழில்மாறல்
       34)  சார்வரி...........................= வீறியெழல்
       35)  பிலவ...............................= கீழறை
       36)  சுபகிருது........................= நற்செய்கை
       37)  சோபகிருது...................= மங்கலம்
       38)  குரோதி...........................= பகைக்கேடு
       39)  விசுவாவசு.....................= உலகநிறைவு
       40)  பராபவ...........................= அருட்டோற்றம்
       41)  பிலவங்க........................= நச்சுப்புழை
       42)  கீலக.................................= பிணைவிரகு
       43)  சௌமிய.........................= அழகு
       44)  சாதாரண.......................= பொதுநிலை
       45)  விரோதிகிருது..............= இகல்வீறு
       46)  பரிதாபி...........................= கழிவிரக்கம்
       47)  பிரமாதீச........................= நற்றலைமை
       48)  ஆனந்த............................= பெருமகிழ்ச்சி
       49)  ராட்சஸ...........................= பெருமறம்
       50)  நள......................................= தாமரை
       51)  பிங்கள.............................= பொன்மை
       52)  காளயுக்தி.......................= கருமைவீச்சு
       53)  சித்தார்த்தி......................= முன்னியமுடிதல்
       54)  ரௌத்திரி........................= அழலி
       55)  துன்மதி............................= கொடுமதி
       56)  துந்துபி.............................= பேரிகை
       57)  ருத்ரோத்காரி................= ஒடுங்கி
       58)  ரக்தாட்சி..........................= செம்மை
       59)  குரோதன.........................= எதிரேற்றம்
       60)  அட்சய..............................= வளங்கலன்

------------------------------------------------------------------------------------------------------------

ஆண்டுக்குரிய தமிழ்ச் சொற்கள் இட்டுக் கட்டப்பட்டவை அல்ல. சமற்கிருதச் சொல்லின் பொருள் தமிழில் தரப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,சுறவம்,12.]
{26-01-2019}
-----------------------------------------------------------------------------------------------------------..

“ தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .