name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஔவையார் பாடல் (01) வான் குருவியின் கூடு ! வல்லரக்கு !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

ஔவையார் பாடல் (01) வான் குருவியின் கூடு ! வல்லரக்கு !


யார் பெரியவர் ?

-----------------------------------------------------------------------------------------------------------
[ஔவையார் அருளிய தனிப்பாடல்]
------------------------------------------------------------------------------------------------------------
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
 
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------------------------
வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான்
தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால்  - யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் !
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது !
-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப் படும் வலிமையான இயற்கைப் பசை,   தேன்அடை,  சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய  புலனங்களே  ஆனால்  இந்த  அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா? 

ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !


அதாவது இந்த உலகத்தில் ஆற்றிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும்  இருக்கவே  செய்கின்றன  என்பதை இடித்துக் காட்டி,  வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற  உயிர்களிடத்தும் நாம் சமத்துவ   உணர்வு கொண்டிருக்க  வேண்டும்  என்பதை  எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !


யாம் பெரிய வல்லாளன்என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாதுஎன்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார் !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:

வான் குருவி = தூக்கணாங் குருவி ; வல் அரக்கு = ஒரு வகைக் குளவி யால் சேகரித்து  உருவாக்கப்படும் அரக்கு ;  தொல் கரையான் = பழங் காலம் முதல் இருந்து வரும் கரையான் உருவாக்குகின்ற மண் புற்று ; தேன் =  தேனீக்கள் பூக்களிலிருந்து துளித் துளியாகத் தேனைச்  சேகரித்து சேர்த்து வைக்கும் அறுகோண வடிவ சிற்றறைகள் கொண்ட தேனடைகள் ; சிலம்பி = சிலந்தி வலை ; (ஆகியவை) யாவர்க்கும் = எந்த மனிதருக்கும் ; செய்யரிதால் = செய்ய முடியாதவை ; யாம் பெரிதும் வல்லோம் = நான் எதையும் செய்ய வல்லவன் ; என்று வலிமை சொல வேண்டாம் = என்று ஆணவம் கொள்ள வேண்டாம் ; காண் = அசைச்சொல் (இதற்கு இவ்விடத்தில் பொருள் ஏதும் இல்லை) ;

------------------------------------------------------------------------------------------------------------
          ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மீனம்,10]
{24-03-2019}

-------------------------------------------------------------------------------------------------------------


வான்குருவியின் கூடு


16 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்...
    தொடரட்டும் உமது சேவைகள்

    பதிலளிநீக்கு
  2. மேலும் பல பாடல்களின் விளக்க உரை தங்களிடம் எதிர்பார்க்கிறோம்.. உங்கள் அரப்பணிக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  3. Thank you last three year I ti search but I get my more valuable new year gift today

    பதிலளிநீக்கு
  4. மனிதனை விட மற்ற உயிரினங்கள் மதிநுட்பம் வாய்ந்தவை. அவை அனைத்தும் இயற்கையின் வாட்டத்தில் வாழும் தன்மை கொண்டவை.

    பதிலளிநீக்கு
  5. Excellent briefing on Avaiyar Padal. Thanks. Good luck in your endeavours. God bless.

    பதிலளிநீக்கு
  6. எதேச்சையாக பார்த்தேன். அருமையான விளக்கவுரை. வலைதளமும் எடுப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .