name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஔவையார் பாடல் (02) ஒரு காலடி நாலிலைப் பந்தலடி !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

ஔவையார் பாடல் (02) ஒரு காலடி நாலிலைப் பந்தலடி !

'ஒரு காலடிநாலிலைப் பந்தலடி' !



கம்பர் ஒருமுறை ஔவையாரிடம் ஒரு விடுகதை சொல்கிறேன். புதிரை விடுவியுங்கள் பார்க்கலாம் என்று கூறி 'ஆரை' என்னும் கீரையைக் குறிப்பதாகப் பொருளை உள்ளடக்கி கீழ்க் கண்டவாறு சொன்னார்:-

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

'ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி'
ஒரு கால் அடி நாலிலைப் பந்தல் அடி

------------------------------------------------------------------------------------------------------------

இதை இவ்வாறு பிரித்து அமைத்துப் பொருள் காண்க !
அடி ஒரு கால்; அடி நாலிலைப் பந்தல்.
(பந்தல்) அடி(யில்)  ஒரு கால்; அடி(போன்ற) நாலிலைகள் உடைய பந்தல்

------------------------------------------------------------------------------------------------------------

தாங்கி நிற்கும் வகையில் அடியில் (கீழே)  ஒரு கால் (தூண்) இருக்கும் ! மேலே கால் அடியைப் போல வடிவம் கொண்ட நான்கு இலைகள் உடைய பந்தல் இருக்கும் (அது என்ன ?)

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்;-

ஒரு காலடி = ஒரு கால் இருக்குமடி; நாலிலை = நான்கு இலைகள் உடைய ; பந்தலடி = பந்தல் போன்று இருக்குமடி! (அது என்ன?)
தில் வரும் 'அடி' என்னும் சொல் ஔவையாரை மதிப்புக் குறைவாக விளிக்கும் வகையில் இடக்கராக வைத்துப் புதிரைக் கூறினார்.
ஔவையாரிடமா கம்பரின் இடக்கு செல்லுபடியாகும்? ஔவையார் உடனே பாடினார்:-

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்

------------------------------------------------------------------------------------------------------------

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:- (01)


அடேய் ! அவலட்சணம் பிடித்தவனே ! எருமைக் கடாவே ! கழுதையே !; குட்டி சுவரே !; குரங்கே !; நீ சொன்னது ஆரைக் கீரையைத் தானடா !

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

எட்டு = '' : கால் = '' ; எட்டேகால் லட்சணம் – அவலட்சணம்; எமன் ஏறும் பரி = எருமைக்கடா; மட்டில் பெரியம்மை - மூத்ததேவி என்னும் மூதேவி;  வாகனம் – கழுதை;  மேல் கூரையில்லா வீடு – குட்டிச்சுவர்; குலராமன் தூதுவன் – குரங்கு

------------------------------------------------------------------------------------------------------------

பொருள் :-(02)

விரைந்து நடக்கும் காலழகா ! எம் குலத்தவனே ! வளரும் செல்வமே ! தேவலோகம் போன்றவனே ! உயர்குல வேந்தன் இராமபிரானின் கதையை காவியமாக்கிய கவிஞனே ! ஆரைக் கீரையை உட் பொருளாக வைத்து நீ விடுகதையைச் சொன்னாய் ! ஆனால் என்னை நீ வெல்ல முடியாது !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

எட்டு + கால் = எட்டுக்கால் - எட்டேகால் ; எட்டு = கால்களை எட்டிப் போட்டு நடக்கும், லட்சணமே = அழகனே ! (விரைவாக நடக்கும் வலிமை பொருந்திய கால்களை உடைய அழகனே !) எமன் = எம்முடைவன் (எம் குலத்தவனே !); ஏறும் பரியே = வளரும் செல்வமே !, முட்ட மேல் கூரை இல்லா வீடே = தலையில் முட்டும் அளவுக்குத் தாழ்வான மேற்கூரை இல்லாத ; வீடே (அதாவது தேவலோகம் போன்றவனே !)  குலராமன் = உயர்குலத்தில் பிறந்த வேந்தனான இராமபிரானின்; தூதுவனே = இராமாயணம் என்னும் இராம காதையை இயற்றி, இராமனின் புகழ் பரப்பும் தூதனே ! ஆரை = ஆரைக் கீரையை; அடா = உள்ளடக்கி, சொன்னாய் = என்னிடம் விடுகதையைச் சொன்னாய் ; அடா = அடாது.


------------------------------------------------------------------------------------------------------------
       
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[ தி.: 2050, சுறவம்,4.]
(18-01-2019}
------------------------------------------------------------------------------------------------------------

ஒரு காலிலை நாலிலை



2 கருத்துகள்:

  1. மட்டில் பெரியம்மை வாகனமே இதற்கு பொருள் சொல்லவில்லையே

    பதிலளிநீக்கு
  2. இரண்டு தேவியருள் மூத்தவர் மூதேவி; இளையவர் சீதேவி. மூதேவியின் வாகனம் கழுதை. பெரியம்மை வாகனமே என்றால் கம்பரை நோக்கிக் ”கழுதையே” என்று ஔவையார் விளிப்பதாகப் பொருள் !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .