name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (50) துயிலி ( NIGHTY )

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

புதிய தமிழ்ச் சொல் (50) துயிலி ( NIGHTY )

புதுச்சொல் புனைவோம் !


துயிலி = NIGHTY

------------------------------------------------------------------------------------------------

 

மகளிருக்கான ஆடைகள் பலவுள்ளன ! அவற்றுள் முதன்மை இடம் வகிப்பது சேலைபண்டைக் காலத்தில் வழங்கி வந்த “சீரை” என்ற சொல்லே இக்காலத்தில் “சீலை” என்றும் “சேலை” என்றும் வழங்கப் பெறுகின்றன. “சேலையைப் “புடைவை” என்றும் அழைக்கிறோம் !

 

மகளிரின் பிற ஆடை வகைகளுள் ”நைட்டி” (NIGHTY) என்பதும் ஒன்று ! இரவில் துயிலறையில் அணிந்து கொள்வதற்காக இது உருவாக்கப் பெற்றதுஇறுக்கமின்றித் தளர்வாக இருக்கும் இவ்வாடையை மகளிர் பகல் நேரத்திலும் அணிந்து கொள்வதைப் பார்க்கிறோம் !

 

துயிலறையில் அணிந்து கொள்வதற்காகத் தோன்றியுள்ள  இந்த ஆடையைத் “துயிலி” என்று அழைப்போமே ! ”துயிலி” என்பதற்குத் தமிழ் அகரமுதலி  சொல்லும் பொருள் “ஒரு வகை ஆடை” என்பதே !

 

எனவேஇனி நாம் NIGHTY என்று சொல்லாமல் “துயிலி” என்றே சொல்லிப் பழகுவோம் !

 

-------------------------------------------------------------------------------------------------

                                              NIGHTY = துயிலி

-------------------------------------------------------------------------------------------------

 ------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்,10]

{27-08-2019}

 

-------------------------------------------------------------------------------------------------

 


துயிலி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .