name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (26) (1969) நீலத் திரை வானில் நீந்தி ! (திருஞானசம்பந்தம்)

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (26) (1969) நீலத் திரை வானில் நீந்தி ! (திருஞானசம்பந்தம்)




          கொத்து (01)                                                                                                   மலர் (042)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு இடமாற்றாலாகிச்
 செல்கின்ற அலுவலக உதவியாளர்
 கு..திருஞான சம்பந்தத்திற்கு அளிக்கப்பெற்ற தேனீர்
 விருந்தில் நான் ஆற்றிய உரை !
(ஆண்டு 1969)
------------------------------------------------------------------------------------------------------------

        நீலத்             திரைவானில்     நீந்திவரும்           ஆழியவன்
        நிலமடந்தைக்   கண்மணியாம்   நீள்கடலை           மாலையிட்டான்.
        கோலத்          திருமழலைக்     கொண்டலதைச்     சேயாக்கி ,
        குடகுமலை    மாளிகையில்    கொண்டுவிட்டான்   கண்மலர !

        காலைக்          கருக்கலதில்     கட்டவிழும்         மொட்டிதழாம்
        காவிரியாள்      கடலாடக்         கீழ்த்திசையில்     பாய்ந்தோட ,
        ஓலைச்           சருகாக           உலர்ந்துவிட்ட     ஞாலமலர்
        உயிரூட்ட         வந்தவளை       உரைத்திடுவார்    பொன்னியென !

        மாலைப்          பிணியுற்று       மயக்கமுற          சோழனவன்
        மருத்துவனாய்   வந்திட்டான் ;  மகிழ்ந்திட்டாள்  திருவரங்கில் !
        பாலகராம்        ஐவரினைப்       பரிசாக்கி            வரலாடும்
        பைங்கூழின்     சிறுசாலில்     பசுமணியாள்     வாழுகிறாள் !

        சீலமுறு          செல்வங்கள்     சிலம்பனையக்     காவியமாய்
        சிந்துபலப்        பாடிவர           சிலுசிலுத்து       ஓடுகிறார் !
        ஆலைக்          கரும்புகளும்     அருங்கதலிப்      பைங்கமுகும்
        ஆடுதுறை        ஏடிடீ              இருபத்து          ஏழுகளும்

        சாலைகளின்     ஓரமெலாம்       சதிராட            ஓடுகிறார் !
        சந்தித்து          உரையாட         நம்மவரும்        ஓடுகிறார் !
        பாலை            வனத்திடையே   பல்லாண்டு        பாடிவிட்டு   
        பசுமைச்          சிறைதேடி         பைங்குயிலார்    ஓடுகிறார் !  

        சேலைத்          துணைநாடி      சிறுபறவை        செல்கிறதோ ?
        சீராடும்           ஐயாற்றில்        நீராடச்             செல்குதுவோ ?
        வாலை           நினைவூற்றில்   வட்டமிடும்        வான்குருகு,
        வாழியநீ          பல்லாண்டு !     வாழியநீ           வாழியவே !


-----------------------------------------------------------------------------------------------------------

               இப்படித்தான்      வாழவேண்டும்    என்றநல்லோர்
                     இயல்பான       வறைமுறைக்குக்      கட்டுப்பட்டு !
               செப்பனிட்ட       பாதையிலே       தடம்மாறாமல் ,
                     சீராகச்           செலுத்திடுக !          வாழ்க்கைத்தேரை !
               ஒப்பரிய          உத்தமர்தம்         கொள்கைச்சாலை ,
                     உறுதியுடன்      செல்வதுடன்          கடமையாற்றி ,
               செப்பரியக்       கண்ணியத்தைக்    காத்துப்போற்றி ,
                     சிறப்புடனே       கட்டுப்பா             டாகவாழ்ந்து ,
               வாழ்வினிலே    மென்மேலும்         நலன்கள்பெற்று ,
                     வாழ்ந்திடுக !      வாழ்த்துகிறோம் !   வாழி ! வாழி !!

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .