name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (15) (1968) தீந்தமிழ்ச் சுவைநாடித் திரிகின்ற ! (மாணவர் கதிரேசனுக்கு )

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (15) (1968) தீந்தமிழ்ச் சுவைநாடித் திரிகின்ற ! (மாணவர் கதிரேசனுக்கு )


              கொத்து (01)                                                                                                  மலர் (07)
-----------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை 
அரசினர் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்
 திரு.கதிரேசன், என் நெஞ்சக் குடிலில் இடம் கேட்டார் !   
நானோ
சங்கத் தமிழின் நிலை சொன்னேன் !
(ஆண்டு  1968)
----------------------------------------------------------------------------------------------------------

            தீந்தமிழ்ச்    சுவைநாடித்     திரிகின்ற   தம்பி !
   
                   தேனூறும்    தொழிற்கல்வி    மலரூதும்   தும்பி !

            வெந்தழலாம்  இந்தியதன்  வேதனையால்  கும்பி,
       
                   வெந்தழிய   அன்னையுனை   நாடுகிறாள்   நம்பி !

            சட்டமெனும்  காவலுடன்  சிறைக்கதவின்  கம்பி !
   
                   செந்தமிழின் உரிமைதனைச்  சாய்ப்பதுவோ  இந்தி !

            கொட்டமதை  அடக்கிடுவோம்  குமுறியெழு ! நெம்பி,
    
                  கொடுவிலங்கு அறுத்திடுவோம்  குறுங்களிறே வாராய் !!

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

----------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .