name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (17) (1968) நீலமுகில் திரைவானில் நீந்தி வரும் ! (அண்ணாவுக்கு அஞ்சலி)

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (17) (1968) நீலமுகில் திரைவானில் நீந்தி வரும் ! (அண்ணாவுக்கு அஞ்சலி)





          கொத்து (01)                                                                                               மலர் (021)
=====================================================
                         காஞ்சித் தலைவன்
                மறைந்த நேரத்தில் எழுதிய 
                                   கவிதை !
                             (ஆண்டு 1968)
=====================================================


            நீலமுகில்  திரைவானில்  நீந்திவரும்  வெண்மதிபோல்,
                நெஞ்சத்    திரைக்கடலில்    நீமிதந்து     ஆடுகிறாய் !
            கோலமிகுத் திருமலரில்  குடியிருக்கும்  தேன்துளிபோல்
                குவளைவிழிக்  கண்மணியில்  கொற்றவன்நீ  ஆடுகிறாய்  !

            ஏட்டினை   எடுக்கையிலே   எண்ணமதில்   ஆடுகிறாய் !
                எழுத்தாகத்   தூவலதின்    கூர்முனையில்   ஓடுகிறாய் !
            பாட்டினை  வடிக்கையிலே  பண்ணமைத்துப்  பாடுகிறாய் !
                பைந்தமிழைப்   பாடுகையில்   நாநுனியில்   பேசுகிறாய் !

            ஏழையுளத்    தாமரையில்   இன்பநடம்    ஆடுகிறாய் !
                இயலிசை  நாடாகமாம்   தமிழ்க்கோயில்   வாழுகிறாய் !
            தாழைமடல்   பூவையிடம்  தங்கையுரு  எய்துகிறாய் !
                தாளாளர்   உள்ளமதில்    தந்தைபணி    ஆற்றுகிறாய் !

            அழுகின்றோர்  நெஞ்சமதில்  அன்னையெனத் தோன்றுகிறாய் !
                அன்புநிறைத்   தம்பியிடம்    அண்ணனுற     வாடுகிறாய் !
            உழுபடையாம்    வேளாளர்     தொழிலாளர்    மாணவர்கள்,
                உள்ளவரை    அண்ணாநீ   ஒளிவிளக்காய்   வாழ்ந்திடுவாய் !


==============================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .