name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கவிதை (29) (1970) பால்நிலவு கார்முகிலில் பதுங்கி ! (ஓவியத்துக்கு ஒரு பாட்டு)

வியாழன், அக்டோபர் 10, 2019

கவிதை (29) (1970) பால்நிலவு கார்முகிலில் பதுங்கி ! (ஓவியத்துக்கு ஒரு பாட்டு)


           கொத்து (01)                                                                               மலர் (029)
=========================================================================
     குமுதத்தில் வெளிவந்த கடல் புறா தொடர்கதைக்காக 
     வரையப்பட்ட ஓவியத்தை மையமாக வைத்து 
   எழுதப்பட்ட ஓர் கவிதை !
                                      (ஆண்டு 1970)
==============================================

            பால்நிலவு    கார்முகிலில்  பதுங்கிவிளை   யாடும் ! – அதன்
                பார்வைதனில்  நின்வதனம்  பவளநிறம்  வீசும் !
            கோலமயில்  சோலைதனில்  தோகைவிரித்   தாடும் ! – உன்
                குவளைவிழிப்  பூமலர்ந்து  கோடிமொழி  பேசும் !
            குமுதமலர்    ஓடைதனில்   நீர்த்திரையி    லாடும் !  - நின்
                கொவ்வையிதழ்  ஏக்கமுறக்  கூம்பிமுகம்  வாடும் !
            அமுதமொழிப்  பைங்கிளியே !  ஆழ்கடல்நல்  முத்தே ! – நின்
                ஆசைமுகம்  காணவுளம்  அலைந்திடுதல்  ஏனோ ?

            காரணத்தை    நானறியேன்    கனிமொழியே !  நின்பால்
                கருணைகொண்ட   எனதுநெஞ்சு   கலங்கிதடு    மாறி !
            ஆரணங்கு    நின்னிதயப்      பூங்குடிலில்      ஏறி !
                அன்புகாண    ஏங்குவதேன் ?     ஆருயிரே      கூறு !
            கூறுவதைக்   கூறுநின்   குயில்மொழியாற்     கூறு !
                கொன்றைமலர்  மேனியளே !     கூறுவதைக்    கூறு !
            நாறுகின்ற   நறுமுல்லை   மல்லிகையைப்     போல !
                நகைமுறுவல்   காட்டுகின்ற      நங்கையேநீ    கூறு !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .