name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 09/01/19

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

ஐந்திறம் (06) மாதங்களின் தூய தமிழ்ப் பெயர்கள் !

சுறவம், கும்பம், மீனம், மேழம் முதலிய தமிழ் மாதங்கள் !


                

                     ---------------------------------------------------------------------
                                 *****மாதங்களின் பெயர்கள்*****
திரிசொல்.....................தமிழ்ச்சொல்............சொல்லின் பொருள்
                     ----------------------------------------------------------------------
                     தை.........................= சுறவம்.................(சுறா மீன்)
                     மாசி.......................= கும்பம்.................(குடம்)
                     பங்குனி................= மீனம்...................(மீன்)
                     சித்திரை...............= மேழம்.................(ஆடு)
                     வைகாசி...............= விடை..................(காளை)
                     ஆனி......................= ஆடவை............. (இரட்டை)           
                     ஆடி........................= கடகம்................. (நண்டு)
                     ஆவணி................= மடங்கல்............ (சிங்கம்
                     புரட்டாசி..............= கன்னி.................(இளம்பெண்)
                     ஐப்பசி....................= துலை..................(தராசு)
                     கார்த்திகை..........= நளி..................... (தேள்)
                     மார்கழி.................= சிலை..................(வில்)

-----------------------------------------------------------------------------------------------------------                        

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 இராசிகளின் அடைப்படையில் தான் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களும் தோன்றின !


பன்னிரண்டு இராசிகளுக்கும் உருவங்களை வைத்தே வடமொழியில் பெயர்கள் தரப்பட்டன. அதாவது மேஷம் என்றால் ஆடு, ரிஷபம் என்றால் காளை, மிதுனம் என்றால் இரட்டை மனிதர்கள், கடகம் என்றால் நண்டு, சிம்மம் என்றால் சிங்கம், கன்னி என்றால் இளம்பெண், துலாம் என்றால் தராசு, விருச்சிகம் என்றால் தேள், தனுசு என்றால் வில், மகரம் என்றால் சுறா மீன், கும்பம் என்றால் குடம், மீனம் என்றால் மீன் எனச் சின்னங்கள் வழங்கி வந்தன !


இந்த இராசிகளை வைத்தே சித்திரை முதலான 12 மாதங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால், இராசியின் பெயரை மாதத்திற்கு வைக்காமல், எந்த நட்சத்திரத்தன்று  பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரப் பெயரை அந்த மாதத்திற்கு வடமொழியாளர்கள் சூட்டினர். இது பற்றிய விளக்கம் எனது முந்தைய பதிவு ஒன்றில் தரபட்டுள்ளது !


சித்திரை மாதம் முழுதும் மேஷ இராசியில் மட்டுமே  சூரியன் காலையில் உதிக்கும். இதனால் தான் சித்திரையை மேஷ மாதம் என்பார்கள். மேஷ இராசியின் சின்னம் ஆடு என்பது உங்களுக்குத் தேரியும். மேஷம் (வடமொழி) என்றாலும் மேழம் (தமிழ்) என்றாலும் அது ஆடுஎன்பதை நினைவில் கொள்ளுங்கள். சின்னத்தின் அடிப்படையிலேயே இம்மாதத்திற்குமேழம்எனத் தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது !


வைகாசி முதல் நாள் சூரியன் ரிஷப இராசியில் உதிக்கும். வைகாசி முழுவதுமே சூரியன் இதே இராசியில் தான் உதிக்கும்.  இதனால் தான் வைகாசியை ரிஷப மாதம் என்பார்கள். ரிஷபம் என்பது தமிழில் விடை (காளை) என்று சொல்லப்படும். ரிஷபத்தின் குறியீடு காளை (விடை)  என்பதை நினைவிற் கொள்ளுங்கள். இந்த அடிப்படையிலேயே வைகாசியைத் தமிழில்விடைஎன்று சொல்கிறோம் !


தை மாதம் முழுவதும் சூரியன் காலையில் மகர இராசியில் மட்டுமே உதிக்கும். மகரத்தின் சின்னம் சுறா மீன். இதைசுறவம்என்றும் சொல்லலாம். இந்த அடிப்படையிலேயே மகர (தை) மாதத்திற்குசுறவம்எனத் தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது !


மகர மாதம் என்று யாரும் சொல்வதில்லையே, தை மாதம் என்று தானே சொல்கிறோம் என்று உங்களுக்கு ஒரு ஐயம் எழும். வடநாட்டில் தை மாதம் என்று சொல்லாமல் மகர மாசம் என்றுதான் சொல்கிறார்கள். தைப் பொங்கலை மகர சங்கராந்தி என்று வடமொழியாளார் சொல்வதைச் சிந்தையிற் கொள்க !


பிற மாதங்களுக்கும் இவ்வாறே விளக்கத்தை ஆய்வு செய்து கொள்க !


சித்திரை முதலான மாதங்களின் வடமொழிப் பெயர்கள் அந்தந்த மாதங்களில் முழுமதி (பௌர்ணமி) வரும் நாண்மீன்கள் (நட்சத்திரங்கள்) பெயர்களின் அடிப்படையில்  பெயர் சூட்டப்பட்டவை !


ஆனால், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் ஆகிய தமிழ் மாதப் பெயர்கள் அந்தந்த மாதங்களில் சூரியன் காலையில் எழும் ஓரை யின் (இராசியின்) பெயர் அடைப்படையில் தோன்றியவை !


இங்கு ஒரு விளக்கம் தர விரும்புகிறேன். பண்டைக் காலத்தில் தமிழ் மாதங்களின் பெயர்கள் வருடை (ஆடு), விடை, இரட்டை (ஆடவை), நண்டு (கடகம்), அரி (மடங்கல்), மடந்தை (கன்னி), துலை, தேள் (நளி), சிலை, சுறா (சுறவம்), குடம் (கும்பம்), மீன் (மீனம்) என்பதாகத்தான் இருந்திருக்கின்றன.  வடமொழி ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு மாதப் பெயர்கள் சித்திரை, வைகாசி.... என ஆகிவிட்டன.  ஐயமிருந்தால், சூடாமணி நிகண்டு போன்ற நூல்களை படித்துப் பாருங்கள். !
-

----------------------------------------------------------------------------------------------------------
        
 ”தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை.

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.ஆ:2050;சிலை,20]
{04-01-2019}

-----------------------------------------------------------------------------------------------------------

ஐந்திறம் (07) மாதங்களின் வடமொழிப் பெயர்கள் !

”சைத்ர” = சித்திரை, “வைகாஸ”= வைகாசி !, ”ஜேஷ்ட”= ஆனி !



பிரபவ,  விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோற்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, வியஜ, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி, குரோதன, அக்ஷய !

இந்த 60 ஆண்டுகளைத் தான் தமிழ்வருஷங்கள்என்று வெட்கமில்லாமல் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதில் எங்கே தமிழ் இருக்கிறது ? தமிழ்ச் சொல்லே இல்லாதவருஷங்கள்”, தமிழ் வருஷங்களா ? இனி, “தமிழன்என்று சொல்லிக் கொள்ளும் யாரும் இவற்றைத்தமிழ் வருஷங்கள்என்று சொல்லக் கூடாது !
------------------------------------------------------------------------------------------------------------------
                        
                       தமிழ் (?)  மாதங்கள் -12
.......(.1).....................................(2)...............................(3)........
சைத்ர...........................சித்திரை...............சித்திரை
வைகாஸ.....................விசாகம்.................வைகாசி
ஜேஷ்ட..........................கேட்டை.................ஆனி.
ஆஷாட.........................பூராடம்..................ஆடி
சிராவண.....................அவிட்டம்...............ஆவணி
பாத்ரபத......................பூரட்டாதி................புரட்டாசி
ஆஸ்வின.....................அஸ்வதி..................ஐப்பசி
கார்த்திக......................கிருத்திகை...........கார்த்திகை
மார்கசிர.......................திருவாதிரை.........மார்கழி.
புஷ்ய.............................பூசம்.........................தை
மாக................................மகம்.........................மாசி
பால்குன.......................உத்ரம்.....................பங்குனி

-------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு:-

வரிசை (1) –ல் தந்திருப்பது மாதத்தின் வடமொழிப் பெயர்
வரிசை (2) –ல் தந்திருப்பது விண்மீன் பெயர்
வரிசை (3) –ல் தந்திருப்பதுதமிழ்மாதப் பெயர்.

சித்திரை விண்மீன் நிலவும் நாளில் வெள்ளுவா (பௌர்ணமி) வந்தால் அந்த மாதத்தின் பெயர்சைத்ர”.- அதாவது சித்திரை !

விசாக விண்மீன் நிலவும் நாளில் வெள்ளுவா வந்தால், அந்த மாதத்தின் பெயர்வைகாஸ” – அதாவது வைகாசி !

கேட்டை விண்மீன் நிலவும் நாளில் வெள்ளுவா வந்தால், அந்த மாதத்தின் பெயர்ஜேஷ்ட” – அதாவது ஆடி !

இப்படியே மற்ற மாதங்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்க !

சைத்ரஎன்பது சித்திரை ஆகிவிட்டால் அது தமிழ்ப் பெயர் ஆகிவிடுமா ? “வைகாஸஎன்பது வைகாசி ஆகிவிட்டால் அது தமிழ் மாதம் ஆகிவிடுமா?

இப்பொழுது சொல்லுங்கள், சித்திரை முதல் நாள் தான் தமிழ் ஆண்டுப் பிறப்பா ?

வடமொழியாளர்களின் மேலாண்மை இன்னும் ஆண்டுப் பெயரிலும் போகவில்லை. மாதப் பெயரிலும் போக வில்லை !

வடமொழிப் பெயரானசைத்ரமாதம், தமிழ்ப் படுத்தல் என்ற வகையில் சித்திரை ஆகியிருக்கிறது. ( ரயில் என்பது இரயில் ஆன கதை தான் ). சித்திரை என்பதே தமிழ்ப் பெயர் இல்லை என்னும் போது சித்திரை முதல் நாள் எப்படி தமிழ் ஆண்டுப் பிறப்பு நாளாகும் ?

1935 –ஆம் ஆண்டு தனித் தமிழ் ஆசான் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதி, கி..பெ.விசுவநாதன், .மு.வேங்கடசாமி நாட்டார், தெ.பொ.மீ, கரந்தை உமாமகேசுரம் பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரனார் போன்ற நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள்  ஒன்று கூடி வரலாற்றுச் சான்று, இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில்தை’” மாதம் முதல் நாள் தான் ஆண்டுப் பிறப்புஅதாவது ஆண்டின் தொடக்க நாள் என்று அறுதியிட்டு அறிவித்தார்கள் !

இதன் அடிப்படையிலேயே தமிழ் ஆண்டின் தொடக்கம்தைமுதல் நாள் தான் என்று திரு. மு. அரசு 2008 –ஆம் ஆண்டில் அறிவித்து ஆணை வெளியிட்டது !

பிறகு வந்த அரசு தமிழ்ப் பகைவர்களுக்குத் துணை போகும் வகையில்சித்திரைமாதமே ஆண்டின் தொடக்கம் என்று 2012 –ஆம் ஆண்டில் மாற்றி அறிவித்து ஆணை வெளியிட்டு இப்போது நடைமுறையில் உள்ளது !

கி.பி 2019 –ஆம் ஆண்டு தொடங்குகிறது. 2019 என்பதுடன் 31 சேர்த்தால் 2050 ஆகிறது. இது தான் திருவள்ளுவர் ஆண்டு. இப்போது நடைபெறுவது தி.பி.2050. அதாவது திருவள்ளுவர் பிறந்து 2050 ஆண்டுகள் ஆகின்றன என்று பொருள் !

இது போதும் நமக்கு ! எதற்குபிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோற்பத்தி.....எல்லாம் ?  வடமொழி ஆண்டுகளுக்கு மாற்றாக தி.பி பயன்படுத்தலாம்; சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி...என்பதற்கு மாற்று என்ன என்று கேட்பீர்கள் ! இதற்கு விடை சொல்லி இருக்கிறார் பாவாணர். இனி, திருவள்ளுவர் ஆண்டையும், தூய தமிழ் மாதப் பெயர்களையும் பயன்படுத்துவோம் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{10-01-2019}

------------------------------------------------------------------------------------------------------------
     
 ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------