name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 10/14/19

திங்கள், அக்டோபர் 14, 2019

நிழற்படம் (03) படமும் கதையும் !


ஒவ்வொரு படமும் ஒவ்வொரு நினைவைப் புதுப்பிக்கிறது !


திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பண்டகக் காப்பாளராகப் பணியாற்றும் போது, திருவெறும்பூர் வந்திருந்த  ப.மா.சு மற்றும் பேபி ஆகியோருடன் எடுத்துக் கொண்ட குழுப் படத்திலிருந்து பகுத்து உருவாக்கப் பெற்ற படம். இஃது எனது 30 -ஆம் அகவையில் (31-5-1974 அன்று) திருவெறும்பூர், கெம்பு நிழற்படக் கலையகத்தில் எடுக்கப்பட்டது.


------------------------------------------------------------------------------------------------------------

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பண்டகக் காப்பாளராகப் பணியாற்றியபோது, மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்வதற்காக விண்ணப்பம் அனுப்புவதற்காக,   எனது 30 -ஆம் அகவையில் (24-6-1974 அன்று)  திருவெறும்பூர் கெம்பு நிழற்படக் கலையகத்தில் எடுத்துக் கொண்ட படம்.


-----------------------------------------------------------------------------------------------------------

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது, திருச்சி வந்திருந்த  தங்கை சுமதி - சிங்காரவேலு இணையருடன் எடுத்துக் கொண்ட குழுப் படத்திலிருந்து பகுத்து உருவாக்கிய படம். என் 30 -ஆம் அகவையில் (23-12-1974 அன்று) திருவெறும்பூரில் எடுத்துக் கொண்ட படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக்  காப்பாளராகப் பணி புரிந்த போது,  எனது  31 -ஆம்    அகவையில்  (9-4-1975 அன்று) திருவெறும்பூரில் , கெம்பு நிழற்படக் கலையகத்தில் எடுத்துக் கொண்ட படம்.


-----------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றியபோது  எனது 31 -ஆம் அகவையில் (15-5-1975 அன்று) அலுவலர்கள் மற்றும் மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட குழுப் படத்திலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப் பட்ட படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

நிழற்படம் (02) படமும் கதையும் !

நினைவுகள் அழிவதில்லை !  கடந்தவையும் திரும்புவதில்லை !

-----------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது,  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி வட்டம், இடும்பவனம் என்னும் ஊரில் உள்ள எனது தங்கை, இரா.கல்யாணி இராமமூர்த்தி வீட்டிற்குச் சென்றிருந்த போது எனது 26 - ஆம் அகவையில் (18-5-1970 அன்று) எடுத்துக் கொண்ட படம்.



-----------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது, எனது 27 -ஆம் அகவையில் (12-2-1971 அன்று) புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்த  ஒரு நிழற்படக் கலையகத்தில்  எடுத்துக் கொண்ட படம். 


-------------------------------------------------------------------------------------------------------------

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், சேரன்குளம் என்னும் ஊரில் உள்ள மாமனார் திரு. அர. இரகுநாத பிள்ளை அவர்கள்  வீட்டின் முன்பாக,  திருமணமான புதிதில் எனது 28 -ஆம் அகவையில் (10-7-1972 அன்று) எடுத்துக் கொண்ட படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது, எனது 28 -ஆம் அகவையில் 2-7-1972 அன்று என் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பின் 15-8-1972 அன்று திருவெறும்பூரில் உள்ள கெம்பு நிழற்படக் கலையத்தில் என் மனைவியுடன் எடுத்துக் கொண்ட படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

எனது திருமணத்திற்குப் பின்  என் 28 -ஆம் அகவையில் (15-8-1972 அன்று ) திருவெறும்பூரில் உள்ள கெம்பு நிழற்படக் கலையகத்தில்  நான் எடுத்துக் கொண்ட நிழற்படம்.


-------------------------------------------------------------------------------------------------------------


நிழற்படம் (01) படமும் கதையும் !

இளமை மீண்டும் திரும்புவதில்லை ! எனினும் பின்னோக்கிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி !


-----------------------------------------------------------------------------------------------------------

திருத்துறைப்பூண்டியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, மாமா வீட்டில் இருக்கையில், ஏதோவொரு விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டி  18 -ஆம் அகவையில் (5-01-1962 அன்று) எடுத்த படம். எங்கோ இருந்த படத்தைத் தேடி எடுத்த போது முகத்தில் சிறிது அழிந்து போயிருந்தது தெரியவந்தது ! இதைச் சீர் செய்ய       இயலாதோ ?


-------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில், கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் இளநிலை ஆய்வாளராகப் பணி புரிகையில், வன்னியர் வாடகை மாளிகை  நண்பர்கள் அம்மாப்பேட்டை திரு.சுந்தரமூர்த்தி (N.M.E.P),  திரு.சக்கரியாசு (PANCHAYAT UNION), ஊராட்சி ஒன்றியக் கணக்கர், துகிலி திரு.காசிநாதன் (N.M.E.P) ஆகியோருடன் எனது   21 -ஆம் அகவையில் (7-1-65 அன்று) எடுத்துக் கொண்ட குழுப்படத்திலிருந்து பிரித்து எடுத்து உருவாக்கப்பட்ட  படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் இளநிலை ஆய்வாளராகப் பணி புரிகையில், தமிழ்நாடு தேர்வாணைக் கழகத்திற்கு விண்ணப்பம்  அனுப்புவதற்காக 22 -ஆம் அகவையில் (20-1-1966 அன்று ) எடுக்கப் பெற்ற படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பண்டகக் காப்பாளராகப் பணி  புரிந்த போது, 24 -ஆம் அகவையில் (15-3-1968 அன்று)  பயிற்சி நிலையத்தின் நிலாமுற்றத்தில் (TERRACE)  நான் நிற்க, மேற்பார்வைப் பயிற்சி அலுவலர், திரு. ஆறுமுகம் அவர்களால் எடுக்கப் பெற்ற  படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது, எனது 24 -ஆம் அகவையில் (15-3-1968 அன்று) அங்குள்ள பெரியநாயகி அம்மன் திருக்குளப் படிக்கட்டில் நான் நிற்க, மேற்பார்வைப் பயிற்சி அலுவலர், திரு.ஆறுமுகம் அவர்களால் எடுக்கப்பட்ட படம்.


-------------------------------------------------------------------------------------------------------------