name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஏப்ரல் 2021

புதன், ஏப்ரல் 28, 2021

புதிய தமிழ்ச் சொல் (61) காலிகை (CALENDAR)

புதுச் சொல் புனைவோம் !


காலிகை = CALENDAR

--------------------------------------------------------------------------------------

எந்தவொரு நிகழ்வையும் நினைவில் வைத்துக் கொள்ள நமக்குத் தேவை அஃது எப்பொழுது நிகழ்ந்தது என்பதை  அடையாளப்படுத்தும்  ஒரு குறியீடு !  இந்தியா எப்பொழுது விடுதலை பெற்றது ? இதை நமக்கு நினைவுபடுத்துவது 1947 என்னும்  ஆண்டுக் குறியீடு !

 

எந்த மாதத்தில் விடுதலை பெற்றது ?  இதை அடையாளப் படுத்துவது ஆகத்து என்னும் மாதக் குறியீடு !  எந்த நாளில் விடுதலை பெற்றது என்பதை அடையாளப் படுத்துவது 15 என்னும் நாள் குறியீடு !

 

நான் எப்பொழுது வீட்டிலிருந்து அலுவலகம் புறப்பட்டேன் ?  இதற்கு விடை சொல்வதுகாலைஎன்னும் வேளைக் குறியீடு !  அலுவலகம் எப்பொழுது இயங்கத் தொடங்குகிறது ? இதற்கு விடையளிப்பதுமணிஎன்னும் சிறுகால் (சிறிய காலப்பகுதி) குறியீடு !

 

இத்தகைய குறியீடுகள் தான் மனிதனின் நினைவுகளைக் குழப்பத்திலிருந்து மீட்கின்றன ! இந்தக் குறியீடுகளை எழுத்து வடிவில் வைத்துக் கொண்டால் அவை நிலைத்து நிற்கும் என்பதை அறிந்த மனிதன் அதற்கு வாய்ப்பாக வடிவமைத்துக் கொண்டது தான்காலண்டர்” (CALENDAR) !

 

நடைமுறையில் உள்ளகாலண்டர்கள் இரண்டு வகைப்படும். அவை (1) அன்றாடம் நாளையும் கிழமையையும்  காட்டும்நாள்காட்டிஎன்னும் “DAILY SHEET” (2) மாதப்பெயரையும், அம்மாதத்தில் உள்ள நாள்களையும், அந்த நாள்களுக்கு உரிய கிழமைகளையும் காட்டும்மாதங்காட்டிஎன்னும் மதிகாட்டி” “MONTHLY SHEET” ! (மதி என்பதற்குப் பிற பொருள்களுடன்மாதம்என்னும் பொருளும் உண்டு)

 

காலண்டர்என்பதைநாள்காட்டிஎன்னும் சொல்லால் அழைக்கிறோமே தவிரமதிகாட்டிஎன்னும் சொல் வழக்கில் வரவில்லை.  படித்தவர், படிக்காதவர்  என்ற வேறு பாடு  இன்றி, அனைவரது வாயிலும் புகுந்து புறப்படும் சொல்காலண்டர்” !

 

ஆங்கிலேயர் அகன்றுவிட்டாலும், அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம் மட்டும் இன்னும் அகலவில்லை. சரி ! காலண்டர் என்பதைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ?

 

 கால்என்பதற்குத் தமிழில் பிற பொருள்களுடன்காலம்என்னும் பொருளும் உண்டு. ’காலண்டர்என்பதுகாலம்உரைக்கும் ஒரு கருவியல்லவா ? ”இகைஎன்றால்கொடுஎன்று  பொருள். காலத்தை அல்லது காலத்தின் உட்கூறுகளை  நமக்குச் செய்தியாகக் கொடுக்கும் கருவியை கால் + இகை = காலிகை என்று கூறுதல் தவறில்லையே !

 

நாம் பார்க்கும் அந்த நொடியில் அற்றைநாள் (அன்றைய நாளில்) , அல்லது பிற்றைநாள் (பின்னொரு நாளில்) நிலவும் நாண்மீன் (நட்சத்திரம்), பிறை நிலை, கதிர்மதி நிலை (திதி),  கிழமை, மாதம் முதலிய காலப் பகுதிகளைச் செய்தியாக நமக்குக் கொடுக்கும்   கருவி என்பதால் இதைக்காலிகைஎன்று அழைத்தல் பொருத்தமானது !

 

உலகிலுள்ள ஒவ்வொரு பொருட்கும், மக்கள் உள்ளத்தில் எழும் ஒவ்வொரு கருத்திற்கும்  ஒவ்வொரு சொல் தோன்றுவது இன்றியமையாததாகும். ஆயினும், ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு புதுச்சொல் அமைவது இயலாது. ஆதலால், பழஞ் சொற்களினின்றே புதுச் சொற்கள் திரித்துக்  கொள்ளல் வேண்டும். கருத்துகள் பல்கப் பல்கச் சொற்களும் பல்க வேண்டி இருப்பதால், ஒரு மொழி முழு வளர்ச்சி அடைவதற்குப் பல்லாயிரக் கணக்கான திரிசொற்கள் தேவையாயுள்ளன.  (பக்.90.பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் நூல்)

 

பாவாணரின்  வழிகாட்டுதலுக்கு இணங்ககால்”(காலம்) என்னும் சொல்லிலிருந்துகாலிகைஎன்னும் புதிய சொல்லைத் திரித்து அதை ஆங்கிலத்தில் வழங்கப்பெறும்  CALENDAR  என்னும் சொல்லுக்கு இணையான சொல்லாக அறிமுகப்படுத்துகிறேன் !

 

ஒரு புதிய சொல் உருவாக்கப்படும் போதுஅதிலிருந்து பல கிளைச் சொற்களை உருவாக்கும்  வாய்ப்புள்ளதாக  அச்சொல் நெகிழ்ச்சித் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.  CALENDAR  என்பதற்கு இணையானதாக  “நாட்காட்டியை இருத்திக் கொண்டால்  CALENDAR YEAR என்பதை நாட்காட்டி ஆண்டு என்று சொல்ல வேண்டி வரும். இச்சொல் பொருத்தமானதாக இல்லை.

 

எனவே கிளைச் சொற்களை உருவாக்க எந்தவகையிலும் இடையூறு தராத  காலிகைஎன்னும் சொல்லை நாம் புழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் ! “காலிகையிலிருந்து உருவாகும் கிளைச் சொற்கள் அடியில் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பலுக்கிப் பாருங்கள் !

 

காலிகைஎன்னும் சொல் முற்றிலும் புதியது என்பதால் அதை ஏற்றுக் கொள்ளச் சிலருக்குத் தயக்கம் இருக்கும். தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும்; போகப் போகப் பழகிவிடும். முற்றிலும் புதிய சொல்லான “CORONA”வை நாம் தயக்கமின்றி ஏற்கவில்லையா ? சுனாமியை (TSUNAMI ) ஏற்கவில்லையா ?  “காலிகையை ஏற்பதிலும் அத்தகைய  நெகிழ்ச்சித் தன்மையை  நாம் காண்பிக்க வேண்டும் !

 

காலிகைஎன்னும் சொல் வடிவில் சிறியது; பொருளில் பொலிவுடையது; ஓசையில் இனியது ! எனவேகாலிகையை . இனி நாம் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் !

-----------------------------------------------------------------------------------------

 

CALENDAR......................................= காலிகை  

DAILY CALENDAR.........................= அற்றைக் காலிகை

DAILY  SHEET..................................= அற்றைக் காலிகை

MONTHLY  CALENDAR..............= மாதக் காலிகை

MONTHLY  SHEET........................= மாதக் காலிகை

CALENDAR MONTH....................= காலிகை மாதம்

CALENDAR YEAR..........................= காலிகை ஆண்டு

 

 -----------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி.2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

-------------------------------------------------------------------------------------------



 

 

 

வெள்ளி, ஏப்ரல் 23, 2021

பாக்கள் (04) வஞ்சிப் பாவும் அதன் இனமும் !

வஞ்சிப்பாவும் அதன் இனமும்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 

சீர்கள்

(01)       ஈரசைச் சீர் நான்கும் = ஆசிரிய உரிச்சீர் (.22)

(02)       ஈரசைச் சீருக்கு இயற்சீர் என்றும் பெயர். அக்.23)

(03)       நேரசை இறுதியாகிய மூவசைச் சீர் (காய்ச்சீர்) நான்கும் = வெண்பா உரிச்சீர்! (.24)

(04)       நிரையசை இறுதியாகிய மூவசைச் சீர் (கனிச்சீர்) நான்கும் = வஞ்சி உரிச்சீர் (.24)

(05)       ஈரசை  கூடியசீர்  இயற்சீர்   அவை

ஈரிரண்  டென்பர்  இயல்புணர்ந்தோரே !

மூவசைச் சீர் உரிச் சீர் இருநான்கினுள்

நேரிரு நான்கும்  வெள்ளைஅல்லன,

பாவினுள்  வஞ்சியின்  பாற்பட்  டனவே !

நாலசைச்  சீர்பொதுச்  சீர்பதினாறே,

ஓரசைச்  சீருமஃ  தோரிரு  வகைத்தே ! (பக்.23. யாப்பு)

 

(06)       நாலசைச் சீர் 16-ம்............ = பொதுச்சீர் (.24)

(07)       ஓரசைச் சீர்  இரண்டும் = அசைச்சீர் (.24)

(08)       நாலசைச் சீர் செய்யுளில் பொதுவாக வராது. ஆனால் அருகி வரும் (.25)

(09)       தண்பூ, நறும்பூ என்று முடியும் நாலசைச்  சீர்கள் எட்டும், அசை பிரிக்கையில் காய்ச் சீராகக் கொள்ளப்படும் (.25)

(10)       தண்ணிழல், நறுநிழல் என்று முடியும் நாலசைச் சீர்கள் எட்டும் அசை பிரிக்கையில் கனிச் சீராகக் கொள்ளப்படும் (.25)

(11)       ஆசிரியப் பாவினுள்  குற்றுகரம் வந்துழி அன்றி நாலசைச் சீர் வாரா (.26)



தளை (30)

  

(12)       மாமுன் நேர்  (நேர் முன் நேர்)..............= நேரொன்றாசிரியத் தளை

(13)       விளமுன் நிரை (நிரை முன் நிரை).....= நிரையொன்றாசிரியத் தளை

(14)       மாமுன் நிரை ( நேர் முன் நிரை).........= இயற்சீர் வெண்டளை

(15)       விளமுன் நேர் (நிரை முன் நேர்)..........= இயற்சீர் வெண்டளை

(16)       காய்முன் நேர்  (.....................................).......= வெண்சீர் வெண்டளை

(17)       காய்முன் நிரை (....................................)......= கலித்தளை

(18)       கனிமுன் நிரை (.....................................)......= ஒன்றிய வஞ்சித்தளி

(19)       கனிமுன் நேர்  (.....................................).......= ஒன்றாத வஞ்சித்தளை

 

வஞ்சிப்பாவும் அதன் இலக்கணமும் (பக்.121) (பக்.434.நன்னூல்)

 

(01)       வஞ்சிப்பா

(02)       வஞ்சித் தாழிசை

(03)       வஞ்சித்துறை

(04)       வஞ்சி விருத்தம்

 

வஞ்சிப்பா இலக்கணம்

(05)       இரு சீரடிகளாலும், முச்சீரடிகளாலும் வருவது வஞ்சிப்பா. அடி வறையறையால், குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என இரு வகையாம். வஞ்சிப்பா தனிச் சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் முடியும் (பக்.433, 434. நன்னூல்)

     (06)       வஞ்சிப்பாவில் குறளடி அல்லது சிந்தடி இயன்று வரும்

(07)       வஞ்சிப் பாவிலுள் குற்றுகரம் வாராதேயும் நாலசைச் சீர் வரும் (.26)

(08)       வஞ்சிப் பாவினுள் இரண்டு நாலசைச் சீர் ஓரடியுள் அருகி நெருங்கி நிற்கவும் பெறும் (.26). இரண்டு வரினும் நெருங்கி நில்லா ! (.26)

(09)       வஞ்சிப் பாவினுள் பெரும்பான்மையும் ஓரடியுள் நாலசைச் சீர் ஒன்று மட்டுமே வரும் (.26)

(10)       நிழல் என்னும் சொல் இறுதியாகிய நிரை ஈற்றுப் பொதுச் சீர் எட்டும் வஞ்சிப் பாவில் அல்லாது வேறு எதிலும் வாரா (.26)

 

வஞ்சிப்பா

 

கொடி,யவா,லன   குரு,நிறத்,தன   குறுந்,தா,ளன

வடி,வா,ளெயிற்   றழ,லுளை,யன   வள்,ளுகி,ரன

பணை,யெருத்,தின   இணை,யரி,மா   னணை,யே,றித்

துணை,யில்,லாத்   துற,வுநெ,றிக்   கிறை,வனா,கி

எயி,னடு,வண்   இனி,திருந்   தெல்,லோர்க்,கும்

பயில்,படு,வினை   பத்,திய,லாற்   செப்,பினோன்

            புணை,யெனத்

திரு,வுறு   திருந்,தடி   திசை,தொழ

வெரு,வுறு   நாற்,கதி   வீ,டுந,னி   யெளி,தே.

 

(01)       இச் சிந்தடி (முச்சீரடி) வஞ்சிப்பாபுணையெனஎன்னுந் தனிச் சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இற்றுள்ளது. (பக்.124. யாப்பு)

(02)       இப்பாடலில் (ஒன்றிய 6, ஒன்றா .2) வஞ்சித்தளை 8 , கலித்தளை 8, வெண்டளை 5, ஆசிரியத்தளை 3 ஆகியன வந்துள்ளன.

                           ****

மண்,டிணிந்,   நில,னும்

நில,னேந்,திய   விசும்,பும்

விசும்,புதை,வரு   வளி,யும்

வளித்,தலை,இய  தீ,யும்

தீ,முர,ணிய    நீ,ரும்

 

(03)       இக்குறளடி (இருசீர் அடி) வஞ்சிப் பாவில் வெண்சீரும், வஞ்சிச் சீரும், நேர் ஈற்று இயற்சீரும் வந்து, வெண்டளையும், வஞ்சித்தளையும், கலித்தளையும், ஆசிரியத் தளையும் மயங்கி வந்துள்ளன(பக்.142. யாப்பு) (மயங்கி வந்துள்ளன என்றால் எல்லாத் தளைகளும் தனித்தனிக் குழுவாக வராமல் ஒன்றோடொன்று கலந்து வந்துள்ளன என்று பொருள்.)

(04)       இப்பாடலில் வஞ்சித்தளை 4-ம், கலித்தளை 1-ம், இயற்சீர் வெண்டளை 3-ம், (நேரொன்று) ஆசிரியத்தளை 1-ம் வந்துள்ளன.

 

புன்,காற்  புணர்,மரு,தின்

போ,தரும்,பிய  புனல்,தா,மரை

தேன்,தாழ்  தீங்,கரும்,பின்

பூந்,தாட் புனற்,றா,மரை

வார்,காற்  செங்,கழு,நீர்

 

(05)       இக்குறளடி (இருசீர் அடி) வஞ்சிப் பாவில் வெண்சீரும், வஞ்சிச் சீரும், நேர் ஈற்று இயற்சீரும் வந்து, வெண்டளையும், வஞ்சித்தளையும், கலித்தளையும்ஆசிரியத் தளையும் மயங்கி வந்துள்ளன(பக்.142. யாப்பு)

(06)       இப்பாடலில் 3 வஞ்சித் தளைகளும், 4 வெண்டளைகளும், 2 ஆசிரியத் தளைகளும், கலந்து வந்துள்ளன.


வஞ்சித்தாழிசை (பக்.121)

 

      (          (01).     இரு சீரடி (இரு சீர்களை உடைய அடி) நான்கு நான்காக ஒரு

                              பொருண்மேல் மூன்றடுக்கி வருவன வஞ்சித்தாழிசை ஆகும். (பக்.121.

                               யாப்பு)

(02)      மூன்றடுக்கி வருமே தவிர வேறு வகையில் வாரா (பக்.122.யாப்பு)

 

மடப்,பிடி,யை    மத,வே,ழம்

தடக்,கை,யான்   வெயின்,மறைக்,கும்,

இடைச்,சுர   மிறந்,தார்க்,கே

நடக்,குமென்   மன,னே,காண்.

 

பே,டை,யை   இரும்,போத்,துத்

தோ,கை,யான்   வெயின்,மறைக்,கும்,

கா,டக   மிறந்,தார்க்,கே

,டுமென்   மன,னே,காண்.

 

இரும்,பிடி,யை   இகல்,வே,ழம்

பெருங்,கை,யான்   வெயின்,மறைக்,கும்,

அருஞ்,சுர   மிறந்,தார்க்,கே

விரும்,புமென்   மன,னே,காண்.

 

(03)       இப்பாடலில் 13 கலித்தளையும், 6 (நிரையொன்று) ஆசிரியத் தளையும், 4 வெண்சீர் வெண்டளையும் வந்துள்ளன.


வஞ்சித்துறை


(01)       இருசீரடி  (இரு சீர்களை உடைய அடி) நான்காய் ஒரு பொருண்மேல் ஒன்றாய் வருவது வஞ்சித்துறை ஆகும் (பக்.122. யாப்பு)

 

மை,சிறந்,தன   மணி,வரை

கை,சிறந்,தன   காந்,தளும்

பொய்,சிறந்,தனர்   கா,தலர்

மெய்,சிறந்,திலர்   விளங்,கிழாய்.

 

(02)       இப்பாடலில் 2 வஞ்சித்தளை, 2 கலித்தளை, 3 இயற்சீர் வெண்டளை ஆகியவை வந்துள்ளன 

 

வஞ்சி விருத்தம்


(01)       முச்சீரடி (மூன்று சீர்களை உடைய அடி) நான்காய் வருவது வஞ்சி விருத்தம். (பக்.123. யாப்பு)

 

சோ,லை  யார்ந்,  சுரத்,திடைக்

கா,லை  யார்,கழ  லார்ப்,பவும்

மா,லை மார்,பன்  வரு,மா,யின்

நீ,  வுண்,கண்  இவள்,வா,ழுமே.

 

(02)       இது சிந்தடி (மூன்று சீர் அடி) நான்காய் வந்தமையான் வஞ்சி விருத்தம் ஆகும். (பக்.123. (யாப்பு)

(03)       இப்பாடலில் (நேரொன்று) ஆசிரியத்தளை 4 –ம், இயற்சீர் வெண்டளை 6-ம், வெண்சீர் வெண்டளை 1-ம் வந்துள்ளன.

 --------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

--------------------------------------------------------------------------------------------------------