name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 10/03/19

வியாழன், அக்டோபர் 03, 2019

இலக்கணம் (02) பதற்றமா ? பதட்டமா ? சொற்களின் சரியான வடிவம் எது ?


                   பிழையின்றி எழுதுவோம் !


                      பிழை-----------------------திருத்தம்

                     அடமழை...................அடைமழை
                     அடமானம்.................அடைமானம்
                     அதுகள்.........................அவை
                     அமக்களம்..................அமர்க்களம்
                     அருவாமணை..........அரிவாள்மனை
                     அருகாமை................அருகு
                     அலமேலு...................அலர்மேலு
                     அழும்பு........................அழிம்பு
                     அவைகள்....................அவை
                     அவைகளை...............அவற்றை
                     வினாயகன்................விநாயகன்
                     இகழ்ட்சி......................இகழ்ச்சி
                     இடது.............................இடம்
                     இடதுகை.....................இடக்கை
                     இமையமலை............இமயமலை
                     உடமை.........................உடைமை
                     உத்திரவு.......................உத்தரவு
                     ஊரணி...........................ஊருணி
                     எண்ணை.....................எண்ணெய்
                     என்னமோ...................என்னவோ
                     ஒண்டியாய்.................ஒன்றியாய்
                     ஒத்தடம்.......................ஒற்றடம்
                     ஒருக்கால்.....................ஒருகால்
                     ஒருவள்.........................ஒருத்தி
                     கடகால்..........................கடைக்கால்
                     கடப்பாறை...................கடப்பாரை
                     கட்டிடம்........................கட்டடம்
                     (கட்டு + அடம் = கட்டடம்)
                     கண்ட்ராவி..................கண்ணராவி
                     கருவப்பிலை..............கறிவேப்பிலை
                     கருப்பட்டி.....................கருப்புக்கட்டி
                     கறடுமுறடு..................கரடுமுரடு
                     கறுமை..........................கருமை
                     காக்கா............................காக்கை
                     கிடா.................................கடா
                     கிராணம்........................கிரகணம்
                     குஞ்சி..............................குஞ்சு
                     குடுத்து...........................கொடுத்து
                     கேழ்வி...........................கேள்வி
                     கைமாறு.......................கைம்மாறு
                     கெடிகாரம்....................கடிகாரம்
                     கோடாலி.......................கோடரி
                     கோதும்பை..................கோதுமை
                     கோமியம்......................கோமயம்
                     கோர்த்து........................கோத்து
                     கோர்வை.......................கோவை
                     சந்தணம்........................சந்தனம்
                     சமயல்...........................சமையல்
                     சாய்ங்காலம்...............சாயுங்காலம்
                     சிகப்பு..............................சிவப்பு
                     சிக்கணம்.......................சிக்கனம்
                     சிலது...............................சில
                     சிலவு...............................செலவு
                     சிறுவாடு........................சிறுபாடு
                     சுந்திரம்...........................சுந்தரம்
                     சுவற்றில்........................சுவரில்
                     சுவற்றை........................சுவரை
                     தடுமாட்டம்..................தடுமாற்றம்
                     தலகாணி.......................தலையணை
                     தவக்களை.....................தவளை
                     தேவலை.......................தாழ்வில்லை
                     தாவாரம்........................தாழ்வாரம்
                     திருவாணி....................திருகாணி
                     தீவாளி...........................தீபாவளி
                     துகையல்......................துவையல்
                     துகை...............................தொகை
                     துடப்பம்..........................துடைப்பம்
                     துடை...............................தொடை
                     துளிர்...............................தளிர்
                     தொப்புள்.......................கொப்பூழ்
                     நஞ்சை...........................நன்செய்
                     நல்லெண்ணை..........நல்லெண்ணெய்
                     நேத்து............................நேற்று
                     பட்டிணி........................பட்டினி
                     பதட்டம்.......................பதற்றம்
                     பயிறு............................பயறு
                     பலது.............................பல
                     பல்லாங்குழி.............பன்னாங்குழி
                     (பதினான்கு குழி என்று பொருள்)
                     பாவக்காய்..................பாகற்காய்
                     புஞ்சை.........................புன்செய்
                     புடவை.........................புடைவை
                     புட்டு..............................பிட்டு
                     புழக்கடை...................புழைக்கடை
                     புழுக்கை.....................பிழுக்கை
                     மகிட்சி.........................மகிழ்ச்சி
                     மணத்தக்காளி..........மணித்தக்காளி
                     மறுவீடு........................மருவீடு
                     முடுக்கு........................மிடுக்கு
                     முயற்சித்தான்..........முயன்றான்
                     மோர்ந்து......................மோந்து
                     முகர்ந்து......................மோந்து
                     ரம்பை...........................அரம்பை
                     ரம்பம்............................அரம்பம்
                     ராகம்..............................இராகம்
                     ராமன்.............................இராமன்
                     அலமாறி.......................அலமாரி
                     முயற்ச்சி......................முயற்சி
                     ரூபாய்............................உருபா
                     ரெட்டை.........................இரட்டை
                     ரேகை.............................இரேகை
                     ரொம்ப............................நிரம்ப
                     ரோமம்...........................உரோமம்
                     லட்சம்............................இலட்சம்
                     வடவம்...........................வடகம்
                     வயறு..............................வயிறு
                     வலது..............................வலம்
                     வலதுகை......................வலக்கை
                     வாய்வு...........................வாயு
                     விரால் மீன்.................வரால் மீன்
                     விரை.............................விதை
                     விளார்...........................வளார்
                     வெங்கலம்..................வெண்கலம்
                     வெண்ணை.................வெண்ணெய்
                     வெய்யல்.....................வெயில்
                     வென்னீர்......................வெந்நீர்
                     வேக்குரு......................வேர்க்குரு
                     வேணும்.......................வேண்டும்
                     வேண்டாம்..................வேண்டா
                     வேஷ்டி..........................வேட்டி
-----------------------------------------------------------------------------------
                           ஆக்கம் + இடுகை,
                          வை.வேதரெத்தினம்,
                               ஆட்சியர்,
                          தமிழ்ப் பணி மன்றம்
                               [19-12-2018]
--------------------------------------------------------------------------------
                       ”தமிழ்ப் பணி மன்றம்” 
      முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
                                 கட்டுரை !
---------------------------------------------------------------------------------

இலக்கணம் (01) பத்தாம் வகுப்பு நிலை !

தமிழ் இலக்கணம்  !

                                       எழுத்து இயல்

                                                  (பகுதி (01)

01.எழுத்து (பக்.22) :-எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை:- (1) முதலெழுத்து (2) சார்பெழுத்து.

02.முதலெழுத்து (பக்.22) :- அ முதல் ஔ வரையிலான உயிர் எழுத்துகள் 12 மற்றும் க் முதல் ன் வரையிலான மெய்யெழுத்துகள் 18 ஆக மொத்தம் 30 எழுத்துகளும் முதலெழுத்துகள் ஆகும். உயிர்மெய் முதலான சார்பெழுத்துகள் தோன்றுவதற்குக் காரணமாக 12 உயிர் எழுத்துகளும் 18 மெய் எழுத்துகளும் இருத்தலால், அவை முப்பதும் முதலெழுத்துகள்  எனப்பட்டன. (பக் 22)

03.சார்பெழுத்து (பக் 22.):- முதலெழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பெழுத்துகள் ஆகும். உயிர்மெய்யெழுத்து (, கா, கி, கீ போன்றவை) ஆய்த எழுத்து () உயிரளபெடை (உடுப்பதூஉம்), ஒற்றளபெடை (ண்ண்ண்டான்), குற்றியலுகரம் (வந்து), குற்றியலிகரம் (வரகியாது),  ஐ காரக் குறுக்கம், ஔ காரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகிய பத்து வகை எழுத்துகளும் சார்பெழுத்துகள் ஆகும்.. (பக் 22)

04. ஐகாரக் குறுக்கம் (பக் 22.):- ஐ எனும் தனி நெட்டெழுத்து இரண்டு மாத்திரை அளவில் நீண்டு ஒலிக்கும்.  ஆனால் சொல்லின் முதலில் வரும்  ஐ என்னும் எழுத்து (எடுத்துக் காட்டு = ம்பது, யர், யா, ந்நூறு, ங்குறு நூறு) இரண்டு மாத்திரை அளவுக்கு நீண்டு ஒலிக்காமல் ஒன்றரை மாத்திரை அளவாகக் குறுகி ஒலிக்கும். இவ்வாறு ஐகாரம் (அதாவது ஐ எனும் எழுத்து) குறுகி ஒலிப்பதற்கு காரக் குறுக்கம் என்று பெயர். (பக் 22)

05. ஐகாரக் குறுக்கம் (பக் 22.)ம் :- சொல்லின் இடையில் வரும் ஐ காரமும் (எடுத்துக் காட்டு = லைவன், லைஞர், சிலைகள், லையடிவாரம், லைஞர்) இரண்டு மாத்திரை அளவுக்கு நீண்டு ஒலிக்காமல் ஒரு மாத்திரை அளவுக்குக் குறுகி ஒலிக்கும். இதுவும் ஐ காரக் குறுக்கம் ஆகும்.(பக் 22)

06. ஐகாரக் குறுக்கம் (பக் 22) :-சொல்லின் ஈற்றில் (அதாவது கடைசியில்) வரும் ஐ காரமும் (எடுத்துக் காட்டு = கடலை, விடலை, சுடலை, குடலை, புடலை) இரண்டு மாத்திரை அளவுக்கு நீண்டு ஒலிக்காமல் ஒரு மாத்திரை அளவுக்குக் குறுகி ஒலிக்கும். இதுவும் ஐ காரக் குறுக்கம் ஆகும் (பக் 22)

07. ஐகாரம் இரண்டு மாத்திரை அளவுக்கு நீண்டு ஒலித்தால் மட்டுமே அது முதலெழுத்து என்று கருதப்படும். ஒன்றரை மாத்திரையாகவோ ஒரு மாத்திரையாகவோ குறுகி ஒலித்தால் அது சார்பெழுத்து என்று தான் கருதப்படும்.

08. ஔகாரக் குறுக்கம் (பக் 22) :-ஔ என்னும் தனி நெட்டெழுத்து  இரண்டு மாத்திரை அளவில் நீண்டு ஒலிக்கும். ஆனால் சொல்லின் முதலில் வரும் ஔ காரம் (எடுத்துக் காட்டு = வையார், வௌவால், கௌதாரி, பௌவம் = கடல், மௌவல் = மல்லிகை மொட்டு) இரண்டு மாத்திரை அளவுக்கு நீண்டு ஒலிக்காமல் ஒன்றரை மாத்திரை அளவுக்குக் குறுகி ஒலிக்கும். இதற்கு ஔ காரக் குறுக்கம் என்று பெயர். (பக் 22)

09. காரமானது எந்தச் சொல்லிலும் இடையிலோ, ஈற்றிலோ (அதாவது கடைசியிலோ) வராது. முதலில் மட்டுமே வரும். (பக் 22)

10. மகரக் குறுக்கம் (பக் 23) :-ம என்னும் குறிலெழுத்து ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும். மகரக் குறுக்கம் என்றால் ம என்னும் குறிலெழுத்து ஒரு மாத்திரை அளவிலிருந்து குறுகி ஒலிப்பது என்று பொருள் அல்ல. மகர மெய்யாகிய ம் என்னும் எழுத்து தனது அரை மாத்திரை அளவிலிருந்து குறுகி கால் மாத்திரை அளவாக ஒலிப்பதே  மகரக் குறுக்கம் ஆகும். எடுத்துக் காட்டு;- போல்ம், போன்ம் (போலும் என்று பொருள்), மருண்ம் (மருளும் என்று பொருள்) செய்யுளில் மட்டுமே இது போன்ற சொற்கள் வரும். உரைநடையிலும், பேச்சு வழக்கிலும் இது போன்ற சொற்கள் வராது. (பக் 22)

11.மகரக் குறுக்கம் (பக் 23) :-போலும், மருளும் என்ற மகர ஈற்றுச் சொற்களில் ( ம் கடைசியாக  வரும் சொற்களில்) ஈற்றயல் உகரம் கெட்டு ( கடைசி எழுத்துக்கு முந்திய எழுத்தில் வரும் உகரம் ( ) மறைந்து ) போன்ம், மருண்ம் என்று திரியும் (அதாவது மாற்றம் அடையும்) இவ்வாறு திரிபடைந்த ன், ண் ஆகிய எழுத்துகளை அடுத்து வரும்  ம் என்னும் எழுத்து தனது அரை மாத்திரை அளவிலிருந்து குறுகி கால் மாத்திரை அளவில் மட்டுமே ஒலிக்கும். இதற்குப் பெயர்தான் மகரக் குறுக்கம். (பக் 23)

12. மகரக் குறுக்கம் (பக் 23) :-மகர ஈற்றுச் சொல் ( ம் கடைசியாக வரும் சொல்) தமிழில் பல உண்டு. வரும், தரும், பெரும் போன்றவை அவற்றுள் சில. வரும் + வண்டி என்பதில் வரும் என்பது நிலை மொழி (முன் சொல்)  வண்டி என்பது வருமொழி அல்லது முதல் மொழி (பின் சொல்). வரும் + வண்டி என்ற இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேரும் போது வரும் வண்டி என்றே புதிய சொல் உருவாகும். இவ்வாறு இரண்டு சொற்கள் சேரும் போது நிலை மொழி ஈற்றில் ம் என்ற எழுத்தும் வரு மொழி முதலில் வகரமும் (வ என்னும் எழுத்து) வந்தால் உருவாகும் புதிய சொல்லில் (வரும் வண்டி) வரும்  ம் என்னும் எழுத்து தனது அரை மாத்திரை அளவிலிருந்து குறுகி கால் மாத்திரை அளவுக்கே ஒலிக்கும். இவ்வாறு குறுகி ஒலிப்பதற்குப் பெயர் மகரக் குறுக்கம் ஆகும். (பக் 23)

13.ஆய்தக் குறுக்கம் (பக் 23) :-கல் + தீது இரண்டும் சேரும் போது  கஃறீது என்று ஆகும். அதுபோல் முள் + தீது இரண்டும் சேரும் போது முஃறீது என்று ஆகும். நிலை மொழி ஈற்றில் வரும் கர, கரம் ( ல், முள் )  வருமொழி முதலில் வரும் கரத்துடன் (தீது) சேரும் போது    என்னும் ஆய்த எழுத்தாக மாறும். இவ்வாறு தோன்றும் ஆய்த எழுத்து தனது அரை மாத்திரை அளவிலிருந்து குறுகி கால் மாத்திரை அளவாக ஒலிக்கும்.  இவ்வாறு ஆய்த எழுத்தானது குறுகி ஒலிப்பதற்குப் பெயர் ஆய்தக்குறுக்கம் என்று பெயர்.

       ********************************************************************

                                தமிழ் இலக்கணம் (பகுதி (02)
                                                 2. சொல் (பக்.48) 
........................................................................................................................................
01.  சொல் (பக் 49) :- ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது சில எழுத்துகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டாகவோ ஒரு பொருளை உணர்த்தினால் அது சொல் எனப்படும்.

02.  பதம் என்றாலும், மொழி என்றாலும், கிளவி என்றாலும் பொருள் ஒன்றே. (பக்.48)

03.  பதம் இரண்டு வகைப்படும். அவை (1) பகுபதம் (2) பகாப்பதம்.

04.  பகுபதம் (பக் 49) :-ஒரு சொல்லை இரண்டாகவோ பலவாகவோ பகுக்க முடிந்தால் அது பகுபதம் எனப்படும். (பகுத்தல் = பிரித்தல்)

05. பகுபதம் (பக் 49) :-உண்டான் என்பதை உண்+ட்+ஆன் எனப் பகுக்க முடியும்.எனவே இது பகுபதம். (-டு) 1. படிக்கிறான் 2. நடந்தாள் 3. கண்டறிந்தார்.

06.  பகாப்பதம் (பக் 49) :-அம்மா என்பதை எவ்வழியிலும் பகுக்க முடியாது. எனவே இது பகாப்பதம். (-டு) 1. மரம் 2. கடல் 3. பறவை.

07.  மொழி மூன்று வகைப்படும்.(பக் 49):- அவை;- 1. தனிமொழி 2. தொடர் மொழி 3. பொதுமொழி.

08. தனிமொழி (பக். 49) :-ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளை உணர்த்தினால் அது தனி மொழி எனப்படும். (-டு)  1. படி 2. உயரம் 3. பெருமை 4. பார்த்தான்.

09.  தொடர்மொழி (பக் 48) :-இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்தினால் அது தொடர்மொழி எனப்படும்.  (-டு) 1. பாடம் படித்தான்  2. பசு தோட்டத்தில் புல் மேய்கிறது.

10.  பொதுமொழி (பக். 48) :-ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், இரண்டாகவோ பலவாகவோ பிரிந்து நின்று வேறு ஒரு பொருளையும் உணர்த்தினால் அது பொதுமொழி எனப்படும்.  (-டு) (1) அந்தமான் = இந்தியாவைச் சேர்ந்த ஒரு தீவுக் கூட்டம்; அந்த + மான் = அங்கு நிற்கும் மான். (2.) பலகை = மரப்பலகை; பல + கை =பல கைகள். (3.) வைகை = ஒரு ஆறு ; வை + கை = கையை (அதில்) வை. (4) தாமரை = ஒரு வகைப் பூ;    தா + மரை = தாவும் மான். (5) வேங்கை = புலி; ஒரு வகை மரம். வேகு + கை = வேகும் கை = தீயினால் வெந்து போன கை.

11.  சொற்களில் ஓரெழுத்துச் சொல், பல எழுத்துச் சொல் என இரு வகை உண்டு.(பக்48)

12.  ஓரெழுத்துச் சொற்கள் சில வருமாறு ;- (1) = பசு  (2) = தின் பண்டங்களின் மீது  மொய்க்கும் ஒரு வகை உயிரினம். (3) கா = சோலை (4) கூ = கூவுதல் (5) கை = கரம் (6) கோ = அரசன் (7) தா= கொடு  (8) தீ = எரியும் சுடர் (9) பா = பாட்டு (10) பூ = மலர் (11) பை = துணிப்பை.

13.  பல எழுத்துச் சொற்கள் சில வருமாறு ;- (1) நாள் (ஈரெழுத்துச் சொல்) (2) மலர் (மூவெழுத்துச் சொல். (3) நெருப்பு (நான்கெழுத்துச் சொல்) (4) புறநானூறு (ஐந்தெழுத்துச் சொல்)

14.  வினைச்சொல் (பக் 49.) :-செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொல், வினைச் சொல் (Verb) எனப்படும். (-டு) 1. நடந்தான்  2. பறக்கிறது  3. மலர்ந்தன.(பக்.49)

15.  வினைமுற்று (பக். 49) :-வினைச் சொல் உணர்த்தும் பொருள் முற்றுப் பெற்றிருந்தால் அந்த  சொல் வினை முற்று அல்லது முற்றுவினை எனப்படும். (-டு) குகன் நடந்தான். இதில் குகன் செய்த செயல் அல்லது வினை நிறைவடைந்தது என்று திட்டவட்டமாக உணர்த்தப் படுவதால் நடந்தான் என்பது வினைமுற்று ஆகும்.

16.  நடந்தான் என்பதைப் பிரித்தால் நட + த் (ந்) + த் + ஆன். எனப் பிரியும். இதில் நட என்பது பகுதி. வளவன் என்ற சொல் ஒரு மனிதனைக் குறிப்பதால் அது உயர்திணை.  ஆண்மகனைக் குறிப்பதால் ஆண் பால். வளவன் என்பது தனி ஒருவனைக் குறிப்பதால் ஒருமை; வளவன் என்ற பெயர் சுட்டும் இடம் படர்க்கை . எனவே ஆன் என்பது உயர்திணை ஆண்பால் ஒருமை, படர்க்கை விகுதி எனப்படும். த் என்பது சந்தி. த் (ந்) ஆனது விகாரம். அடுத்து வரும் த் இறந்த காலத்தைக் குறிக்கும் இடைநிலை.

17.  வினைமுற்று என்பது எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என்னும் வரிசையில் பயனிலையாய் அமையும். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றுள் ஒன்றான காலத்தைக் காட்டும். (பக். 49)

18.  வினைமுற்றானது குறிப்பு வினைமுற்று, தெரிநிலை வினைமுற்று என இரண்டு வகைப்படும். (பக். 49)

19. தெரிநிலை வினைமுற்று (பக்.49) :-உழுதான் என்ற சொல் தெரிநிலை வினை முற்று ஆகும். இச்சொல்லானது  குறிப்பிட்ட செயலைச் செய்பவன் யார் (உழவன்) என்பதையும், எந்தக் கருவி (கலப்பை) கொண்டு செய்கிறான் என்பதையும், எந்த நிலம் (அல்லது இடம்) (வயல்) என்பதையும், செய்த  செயல்  (உழுதல்) என்ன என்பதையும், செய்த காலம் (இறந்த கலம்) யாது என்பதையும், அச்செயலால் விளையும் பயன், அதாவது செய்பொருள்  (புழுதியாதல்) என்ன என்பதையும் தெரிவிக்கும் வகையில் அமைந்திருக்கும். இவ்வாறு செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினையும் தெரிவித்து செயல் நிகழ்ந்த காலத்தை வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்றுச் சொல்லே தெரிநிலை வினை முற்று ஆகும். (பக். 49)

20.  குறிப்பு வினைமுற்று  (பக்.50);- பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறினையும் அடிப்படையாகக் கொண்டு, முன் பத்தியில் சொல்லிய செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறினுள் கருத்தா (செய்பவன்) ஒன்றை மட்டும் தெரிவித்து, காலத்தைக் குறிபாகக் காட்டுவது குறிப்பு வினைமுற்று ஆகும். (பக்.50)

21.  எச்சம்:- பொருள் முற்றுப் பெறாத வினைச் சொற்கள் எச்சம் எனப்படும். இதை வேறு வகையாகச் சொன்னால், விகுதி குறைந்து நிற்கும் வினைச் சொற்களே எச்சமெனப்படும். அவை இரு வகைப்படும். (1) பெயரெச்சம்  (2) வினையெச்சம்.

22.  பெயரெச்சம் (பக்.50):- ஓர் எச்சவினை அடுத்து வரும் ஒரு பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் ஆகும். படித்த கயல்விழி என்னும் சொற்றொடரில் படித்த என்னும் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் அது  பொருள் முற்றுப்பெறாத ஒரு வினைச் சொல் ஆகும். படித்தாள் என்ற சொல்லில் படித்தவள் ஒரு பெண் என்று வெளிபடையாகத் தெரிவதால் பொருள் முற்றுப்பெற்று விட்டதுஅதாவது பொருள் முழுமை அடைந்து விட்டது.  ஆனால் படித்த என்ற சொல்லில் படித்த பாடமா?, படித்த மனிதனா?, படித்த புத்தகமா? என்பது எதுவும் விளங்கவில்லை. இங்கு படித்த சொல்லுக்கான பொருள் கயல்விழி என்னும் பெயரைச் சார்ந்து இருக்கிறது. எனவே படித்த கயல்விழி என்னும் சொற்றொடரில் படித்த என்பது பெயரெச்சமாகும்.

23.  பெயரெச்ச எடுத்துக் காட்டுகள் :-  (1) உண்ட  சோறு  (2) ஒடிந்த கிளை  (3) எரிந்த காடு (4) படிக்கின்ற கயல்விழி   (5) அலையும் கடல்  (6) வீசு தென்றல்  (7) துள்ளிய கன்று  (8) எழுதிய கட்டுரை  (9) சென்ற வகுப்பு.

24.  தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம், எதிமறைப் பெயரெச்சம், எனப் பெயரெச்சங்கள் பல வகை உண்டு. (பக். 51 காண்க)

25.  தெரிநிலைப் பெயரெச்சம் (பக்.51):- உண்ட மாதவி. இதில் காலமும் செயலும் வெளிப்படையாகத் தெரிகிறது. [ உண்ட என்பது  இறந்த காலத்தில் நிகழ்ந்தது என்பதைக் காட்டுகிறது.; உண்ட என்ற சொல் உண்ணுதல் என்னும் செயல் நிகழ்ந்ததைக் காட்டுகிறது.  எனவே காலமும் செயலும் வெளிப்படையாகத் தெரிகிறது..] ஆனால் உண்ட என்னும் சொல்லிலிருந்து செய்பவன், கருவி, நிலம், செய்பொருள் ஆகியவை வெளிபடையாகத் தெரியவில்லை. இவ்வாறு வருவது தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும். (பக். 51)

26.  உண்ட மாதவி என்பது [ இறந்தகால ] தெரிநிலைப் பெயரெச்சம்.   உண்கின்ற மாதவி என்பது [ நிக்ழ்கால ] தெரிநிலைப் பெயரெச்சம்.     உண்ணும் மாதவி என்பது [ எதிர்கால ] தெரிநிலைப் பெயரெச்சம்.   உண்ட மாதவி என்பது உடன்பாட்டு [ positive ] தெரிநிலைப் பெயரெச்சம்.   உண்ணாத மாதவி என்பது எதிர்மறை(Negative ) தெரிநிலைப் பெயரெச்சம். உண்ணா மாதவி என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். உண்ணாத என்ற சொல்லில் ஈற்றெழுத்தான என்பது கெட்டு [மறைந்து] உண்ணா என்று நிற்பதால் உண்ணா மாதவி என்பது ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.

27.  குறிப்புப் பெயரெச்சம் (பக்.51):- காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்புப் பெயரெச்சம் ஆகும். (-டு) நல்ல பையன். இதில் நல்ல என்ற சொல் காலத்தைக் காட்டுவதில்லை; செயலைக் காட்டுவதில்லை. ஆனால் நல்ல என்ற பண்பினை (அதாவது குணத்தை) மட்டும் உணர்த்துவதாக அமைந்து பெயர்ச் சொல்லாகிய பையன் என்பதைக் கொண்டு முடிந்திருப்பதால் நல்ல பையன் என்பதில் வரும் நல்ல என்ற சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும். (பக். 51)

28.  நல்ல மாணவன் = உடன்பாட்டு (Possitive) குறிப்புப் பெயரெச்சம்.        தீய மாணவன் = எதிர்மறை  (Negative) குறிப்புப் பெயரெச்சம்.

29. வினையெச்சம் (பக்.51) :- முற்றுப் பெறாத வினைச் சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினை முற்றைக் கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும். (பக். 51) (-டு) படித்து வந்தான். இதில் படித்து என்பது முற்றுப் பெறாத வினைச்சொல். வந்தான் என்பது முற்றுப் பெற்ற வினைச் சொல். முற்றுப் பெறாத படித்து என்னும் வினைச்சொல், முற்றுப் பெற்ற வந்தான் என்னும் வினைச்சொல்லைக் கொண்டு முடிந்திருப்பதால் படித்து வந்தான் என்பதில் உள்ள படித்து என்னும் சொல் வினையெச்சம் ஆகும். (-டு) ஆடி மகிழ்ந்தான்  (2) எழுதி அழித்தான்  (3) உருண்டு ஓடியது  (4) நிறைந்து வழிந்தது (5) வெந்து மடிந்தனர்  (6) பறந்து சென்றன.  (7) அமர்ந்து உண்டான்  (8) மென்று விழுங்கினான்  (9) வாரிக் குவித்தான்  (10) கலைந்து சென்றனர்.

30.படித்து வந்தான் இறந்தகால வினையெச்சம்  படித்து வருகிறான். = நிகழ்கால வினையெச்சம்  படித்து வருவான்  = எதிர் கால     வினையெச்சம்.

31. வினையெச்சம் இரண்டு வகைப்படும்  . அவை (1) தெரிநிலை வினையெச்சம் (2) குறிப்பு வினையெச்சம்.

32. தெரிநிலை வினையெச்சம் (பக்.52):-  வினை நிகழும் காலத்தையும் செயலையும் வெளிப்படையாக உணர்த்தி, வினை முற்றைக் கொண்டு முடியும் எச்ச வினைக்கு தெரிநிலை வினையெச்சம் என்று பெயர்.  (-டு) (1) படித்துத் தேறினான்  . இதில் படித்து என்பது இறந்த காலத்தைச் சுட்டுகிறது. படித்தல் என்னும் செயலை நிகழ்த்தியதையும் சுட்டுகிறது. எனவே இது தெரிநிலை வினையெச்சம்.

33.  குறிப்பு வினையெச்சம் (பக்.52);- எச்ச வினைச் சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை  மட்டும் உணர்த்தி வினை முற்றைக் கொண்டு முடிந்தால்  அது குறிப்பு வினையெச்சம் ஆகும்.   (-டு) மெல்லப் பேசினான். இதில் மெல்ல என்னும் எச்ச வினை காலத்தை வெளிப்படையாக உணர்த்துவதில்லை. ஆனால் பண்பை உணர்த்துகிறது (மெல்ல என்பது ஒரு பண்பு). எனவே இது குறிப்பு வினையெச்சம் ஆகும். (-டு) (1). விரைந்து சென்றான்.  (2) அழுத்தி ஊன்றினான்  (3) தத்தித் தாவியது.  (4) சீவி முடித்தாள்  (5) எழுந்து நடப்பான்.  (6) குளித்து வருகின்றனர்.  (7) விழுந்து வணங்குவோம். (8) தைத்து முடித்திட்டார்  (9) முறிந்து விழுந்தது. (10) ஓடி மறைந்தன.

34.  முற்றெச்சம்  (பக் 52):-  ஒரு வினை முற்றுச் சொல்  எச்சப்பொருளில் வந்து வேறொரு வினை முற்றைக் கொண்டு முடிந்தால் அது முற்றெச்சம் ஆகும். கோமதி வழியில் ஒரு பாம்பினைக் கண்டனள் நின்றாள். இதில் கண்டனள் என்னும் வினைமுற்று கண்டு என்னும் எச்சப் பொருளில் வந்து நின்றாள் என்னும் வினை முற்றைக் கொண்டு முடிந்திருப்பதால் இது முற்றெச்சம் ஆகும். (எடு) (1) மாலதி  வந்தனள் சென்றாள்.   (2) அரசு நேற்று ஓடினன் வீழ்ந்தான்.  (3) தென்னை மரம் காற்றில் ஒடிந்தது வீழ்ந்தது.  (4) கப்பல் கடலில் கவிழ்ந்தது அமிழ்ந்தது.
   
*****************************************************************

                10-ஆம் வகுப்பு, தமிழ் இலக்கணம் (பகுதி (03)
                                                       (3) பொது.


01.  வெளிப்படை (பக் 79) :- ஒரு சொற்றொடரில் வரும் ஒரு சொல் வெளிப்படையாக ஒரு பொருளைக் குறித்தால் அதை வெளிப்படை என்று குறிப்பிடுவர் (பக்.79)  (-டு) தமிழ்நாட்டிலேயே ஓசூர்தான் மலர் விளைச்சலில் தலை சிறந்து விளங்குகிறது. இத் தொடரில் வரும் ஓசூர் என்னும் சொல் வெளிப்படையாக இடத்தைக் குறிப்பிடுவதால் இதை வெளிப்படை என்று கூறுவர்.

02.  குறிப்பு (பக் 79) :- பூப்பந்து விளையாட்டில் தஞ்சாவூர் முதலிடம் பெற்றது. இதில் வரும் தஞ்சாவூர் என்பது ஆகுபெயராய் தஞ்சாவூர் விளையாட்டு வீர்ர்களைக் குறிக்கிறது. இதில் வரும் தஞ்சாவூர் என்னும் சொல்லுக்கு முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும் குறிப்பால் தஞ்சாவூர் விளையாட்டு வீரர்களைக் குறிப்பதால் இதைக் குறிப்பு என்று சொல்லுவர்.
03.  குறிப்புச் சொற்கள் (பக் 79) :-  குறிப்புச் சொற்கள்  எட்டு வகைப்படும். அவை;- (1) ஒன்றொழி பொதுச்சொல்  (2) விகாரச் சொல்  (3) தகுதி வழக்குச் சொல்  (4) ஆகுபெயர்.  (5) அன்மொழித் தொகை  (6) வினைக் குறிப்புச் சொல்  (7) முதற் குறிப்புச் சொல் (8) தொகைக் குறிப்பு சொல். (பக். 79)

04.  ஒன்றொழி பொதுச் சொல் (பக்.79):- ( உயர் திணையில் )ஒரு தொடரில் வரும் ஒரு சொல் முன்னும் பின்னும் வரும் சொற்களின் தொடர்பாலும், குறிப்பாலும் ஒரு பாலை (Gender) நீக்கி மற்றொரு பாலை (Gender) உணர்த்தி நிற்கும். இத்தகைய சொல்லுக்கு ஒன்றொழி பொதுச் சொல் என்று பெயர்.  (-டு)  (1) வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர், இதில் வரும் ஐவர் என்னும் சொல், அதற்கு முன்னும் பின்னும் வரும் சொற்களின் குறிப்பால் ஐந்து பெண்கள் என்று உணர்த்துகிறது. (2) போர்க் களத்திற்கு ஐவர் சென்றனர். இதில் வரும் ஐவர் என்னும் சொல், அதற்கு முன்னும் பின்னும் வரும் சொற்களின் குறிப்பால் ஐந்து ஆண்கள் என்று உணர்த்துகிறது. முன்னதில் வரும் ஐவர் பெண்பாலைக் குறிக்கிறது. பின்னதில் வரும் ஐவர் ஆண்பாலைக் குறிக்கிறது.(பக் 79)

05.  ஒன்றொழி பொதுச் சொல் (பக் 80) :- (அஃறிணையில்) (1) இம்மாடு வயலில் உழுகிறது  (2) இம்மாடு பால் கறக்கிறது. முன்னதில் மாடு என்னும் பொதுச் சொல் உழுகிறது என்னும் வினைக் குறிப்பால் காளை மாட்டையும் பின்னதில் கறக்கிறது என்னும் வினைக் குறிப்பால் பசு மாட்டையும் குறிப்பிடுகின்றது.  இவ்வாறு ஒரு பொதுச்சொல் முன் பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால்  ஆண்பாலையோ, பெண்பாலையோ உணர்த்தி வருவது ஒன்றொழி பொதுச் சொல் ஆகும்.

06.  உயர்திணை, அஃறினை இரண்டிலும் இத்தகைய ஒன்றொழி பொதுச் சொற்கள் வரும். (பக் 79)

07.  இனங் குறித்தல் (பக் .80):-  ஒரு சொல், தன் பொருளையும் குறித்து, தனக்கு இனமான மற்ற பொருளையும் / பொருள்களையும் குறிப்பிட்டு நின்றால் அதற்கு இனங்குறித்தல் என்று பெயர். (-டு)  இனியன் வெற்றிலை தின்றான். இத் தொடரானது இனியன் வெற்றிலையை மட்டும் தின்னவில்லை, வெற்றிலையோடு அதன் இனமான பாக்கு, சுண்ணாம்பு முதலியவற்றையும் சேர்த்துத் தின்றான் என்பதைக் குறிக்கிறது. இப்படி ஒரு சொல் அமைவதற்கு இனங்குறித்தல் என்று பெயர்.

08.  அடுக்குத் தொடர் (பக் 80) :- அசைநிலைக்கும், விரைவு, சினம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள் நிலைக்கும், செய்யுளில் இசையை நிறைவு செய்ய வேண்டியுள்ள இடத்திலும் ஒரு சொல்லானது இரண்டு, மூன்று, நான்கு எனச் சிலமுறை  அடுக்கி வரும். இதற்கு அடுக்குத் தொடர் என்று பெயர்.  (-டு):- (01) அன்றே அன்றே  (அசை நிலை) (செய்யுளில் மட்டும் வரும்.) (02)  போ போ (விரைவு வெளிப்படுத்தும்  இடங்களில் வரும்)  (03)  எறி எற (சினத்தை வெளிப்படுத்தும் இடங்களில் வரும்) (04) வருக வருக (மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடங்களில்) (05) தீ தீ தீ (அச்சம் வெளிப்படுத்தும் இடங்களில் வரும்) (06)  நொந்தேன் நொந்தேன் (துன்பம் வெளிப்படுத்தும் இடங்களில் வரும்) (07)  கோடி கோடி கோடியே (செய்யுளில் இசை நிறைக்கும் இடங்களில்) 

09.  அடுக்குத் தொடர் (பக் 80) :_ அடுக்குத் தொடரில் இரட்டித்து அல்லது மூன்று, நான்காக வரும் சொற்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்தாலும் அச்சொல் பொருள் கொடுப்பதாக அமையும்.

10.  இரட்டைக் கிளவி (பக் 81.):- இரட்டித்து நின்று ஒரு பொருளை உணர்த்தும் சொற்கள் இரட்டித்தே வரும். பிரித்தால் பொருள் தராது.  இத்தகைய சொற்களை இரட்டைக் கிளவி என்று சொல்வர். (கிளவி என்பதற்கு சொல் என்று பொருள்.) (-டு)     
   (01) குறிஞ்சி பட படவெனப் பேசினாள். 
   (02) அவள் கல கலவெனச் சிரித்தாள்.
   (03) தண்ணீர் சல சலவென ஓடிக்கொண்டிருக்கிறது.
             (04) எறும்புகள் சாரை சாரையாய் செல்கின்றன.
             (05) கற்கள் சட சடவென உருண்டன.
             (06) இராமு குறு குறுவெனப் பார்க்கிறான்.
             (07) கலியன் மள மளவென மரத்தில் ஏறினான்.
             (08) குழந்தை குடு குடுவென ஓடி வந்தது.
             (09) தலைமுடி கரு கருவென வளர்கிறது.

11.  அடுக்குத் தொடரில் சொற்கள் தனித் தனியே நிற்கும். (பார் பார்)
 இரட்டைக் கிளவியில் சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்  (சலசல)
                அடுக்குத் தொடரில் சொற்களைப் பிரித்தாலும் பொருள் தரும். (தீ                             தீ ) இரட்டைக் கிளவியில் சொற்களைப்பிரித்தால் பொருள் தராது                             (சலசல)அடுக்குத்தொடரில் சொற்கள் 2, 3அல்லது 4 முறைஅடுக்கி                           வரும்.(தீ தீ தீ)இரட்டைக் கிளவியில் சொற்கள் இரட்டித்தே வரும்                                 (படபடஅடுக்குத் தொடரில் சொற்கள் விரைவு, அச்சம், வெகுளி                               (சினம்), மகிழ்ச்சி முதலிய பொருள்களில் வரும்.இரட்டைக் கிளவி                              யில் சொற்கள் இசை, குறிப்பு, பண்பு பற்றியதாக வரும்.
     

                
       
                                    
       *************************************************************
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[28-12-2018]

         ------------------------------------------------------------------------------------------
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில்
                       வெளியிடப் பெற்ற                       
 கட்டுரை !
            
                       ------------------------------------------------------------------------------------------