name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ்
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 29, 2020

தமிழ் (31) நமது பெயர்கள் வடமொழிப் பெயர்களாக இருப்பது ஏன் ?

தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைத்துக் கொள்ளல் அருகிவிட்டது ஏன் ?

------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்கள் பொதுவாகசங்க கால இலக்கியங்கள்என்றும்சங்கம் மருவிய கால இலக்கியங்கள்என்றும் வகைப் படுத்தப்படுகின்றன.  சங்க காலம் என்பது கி.மு 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி,பி 2 ஆம் நூற்றாண்டு வரை விரிந்து நிற்கும் காலம். சங்கம் மருவிய காலம் என்பது கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டு கி.பி 7 ஆம் நூற்றாண்டு வரை விரிந்து நிற்பவை !


எட்டுத் தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை சங்ககால நூல்களாகக் கருதப்படுபவை ! இவை கி.மு 500 தொடங்கி கி,பி 200 வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவை என அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளன !

 

கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே ஆரியர்களின் வருகை தமிழ்நாட்டுக்குள்  நிகழ்ந்திருக்கிறது என வரலாற்று அறிஞர்கள் கணிக்கின்றனர். சங்க கால இலக்கியங்களில் உள்ள பாடல்களில் ஒரு சில ஆரியர் வருகையையொட்டி இயற்றப்பட்டிருக்கலாம். அதனால் தான் அதன் தாக்கம் புறநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து   மற்றும் கலித்தொகைப் பாடல் வரிகளில் எதிரொலிக்கிறது !

 

 ஒரு சில பாடல் வரிகளைக் காண்போம் !

 ----------------------------------------------------------------------------------------------------

(01)      ஆலமர் கடவுள் அன்ன நின் செல்வம் (புறநானூறு198)

(02)     ஆவும்  ஆன் இயல் பார்ப்பன மாக்களும் (புறநானூறு.9)

(03)      ஈப்பாய் அடுநறாக் கொண்டது இவ்யாறெனப்

       பார்ப்பார் ஒழிந்தார் படிவு. (பரி.திர.2:59)

(04)      ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய 

             (புறநாநூறு.2)

(05)      உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் (புறம்.182)

(06)      ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறைய (புறம்.367)

(07)      ஐந்தலை சுமந்த வேக வெந்திறல் நாகம் (புறம்.37)

(08)      ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் (கலி.130:9)

(09)      ஐயிரு தலையின் அரக்கர் கோமான்(கலி.38:3,)

(10)      ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா

        கைபுனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு

        (கலி.25:3)

(11)      கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை (புறம்.378)

(12)      கறை மிடற்று அண்ணல் காமர் சென்னி (புறம். 55)

(13)      கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு (புறம்.361)

(14)      சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் (புறம்.23)

(15)      தாலி களைந் தன்றும்  இலனே ; பால்விட்டு (புறம்.77)

(16)      தேவர் உலகம் எய்தினன் ஆதலின் (புறம்.228)

(17)      தைஇத் திங்கள் தண் கயம் போல (புறம்.70)

(18)      நல் பனுவல் நால் வேதத்து  (புறம்.15)

(19)      நீல மணி மிடற்று ஒருவன் போல (புறம்.91)

(20)      நீல் நிற உருவின் நேமியோனும் (புறம்.58)

(21)      நெய்ம்  மலி ஆவுதி பொங்க பல் மான் (புறம்.15)

(22)      பனி பொழி சாரலும்,பார்ப்பாரும் (பரி.8:52,)

(23)      பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்த

                   (கலி.15:17)

(24)      பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய (நற். 321:5,)

(25)      பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே ! குறு. 156.

(26)      பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும் (புறம்.34)

(27)      பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது (புறம்.43)

(28)      பால் நிற உருவின் பனைக் கொடியோனும் (புறம்)

(29)      பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல (புறம்.55)

(30)      போர் தலைமிகுத்த ஈர்-ஐம்பதின் மரொடு (பதிற். 14:5)

(31)      மறம் தலைக்கொண்ட நூற்றுவர் 

            தலைவனை (கலி.52:2)

(32)      மாற்று அருங் கணிச்சி மணி மிடற்றோனும் (புறம் )

(33)      முதுபார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து (கலி. 65:20)

(34)      வடமீன் புரையும் கற்பின், மடமொழி (புறம்.122.)

(35)      வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற

       முகத்தவன் (திருதராட்டிரன்) (கலி.25:1)

(36)      வல் வேற் கந்தன் நல் இசை அல்ல (புறம்.380)

(37)      வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் (புறம்.183)

---------------------------------------------------------------------------------------------------

ஆரியர்களின் அறிமுகமான ஆலமர் கடவுள் (தெட்சணாமூர்த்தி), இந்திரன், இராமன், சீதை, தேவர் உலகம், மணிமிடற்று ஒருவன் (பரமசிவன்) நேமியோன் (திருமால்), பனைக்கொடியோன், நுதல் விளங்குமொரு கண் (பரமசிவன்), கந்தன் ஆகிய கடவுளர் பெயர்கள் புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

ஈரைம்பதின்மர் (கௌரவர்கள்), ஐந்தலை நாகம், ஐயிரு தலையின் அரக்கர் கோமான் (இராவணன்), நால்வேதம், வேள்வி அந்தணர், தாலி களைதல், நெய்ம்மலி ஆவுதி, பாம்பு சேர் மதி (சந்திர கிரகணம்), வடமீன் கற்பு ஆகிய ஆரியர்களின் கருத்துகள் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

ஆரியர்களின் கான்முளைகளாகக் கருதப்படும்  ஒரு பிரிவினரைக் குறிக்கும் வகையில்பார்ப்பனர்என்னும் சொல் ஒன்பது பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

வேறு எந்தப் பிரிவினரையும், எடுத்துக் காட்டாகசத்திரியர்”, “வைசியர்”, “சூத்திரர்ஆகியோரைக் குறிக்கும் எந்தச் சொல்லும் புறநானூற்றில் காணப்படாத போதுபிராமணர்களைக் குறிக்கும்பார்ப்பனர்என்ற சொல் மட்டும் ஒன்பது பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது எப்படி?

 

பத்துப் பாட்டு நூல்களான, திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகியவை கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. இவற்றில் ஆரியக் கலப்பு இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.


---------------------------------------------------------------------------------------------------

1).ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய (பெரும்.415.)

2).பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் (பெரும்.373)

---------------------------------------------------------------------------------------------------

 

திருமுருகாற்றுப்படை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு இலக்கியம். இதில் தான் திருமால், சிவன், இந்திரன், பிரம்மா, பார்ப்பனர்   பற்றிய குறிப்புகள் வருகின்றன !

---------------------------------------------------------------------------------------------------

 

(01) புள் அணி நீள் கொடிச் செல்வன் ( திருமால்),

(02) உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் (சிவன்),

(03) யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் (இந்திரன்),

(04) நான்முக ஒருவற் சுட்டி (பிரம்மா)

(05) ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் (பார்ப்பனர்)

----------------------------------------------------------------------------------------------------

 

சங்க கால நூல்களில் தொடங்கி இன்று வரை ஆரியர்களின் மேலாளுமை முனைப்பாக இருந்தே வருகிறது. தங்கள் மொழியையும், பண்பாட்டையும் தமிழர்கள் மீது திணிப்பதற்கு அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் ‘”கடவுள்” !

 

கடவுளின் பெயரால் தான், தமிழ் நாட்டில் மாந்தர்களின் பெயர்களெல்லாம்வடமொழி:”ப் பெயர்களாகவே இருக்கின்றன. மாந்தர்களுக்குப் பெயர் சூட்டுவதில் தமிழை அடியோடு ஒதுக்கி வைத்து விட்டது ஆரியம். இது புரியாமல் நாம் இன்னும் ஆரியத்துக்கு அடிமைப்பட்டு, வடமொழிப் பெயர்களாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம் !

 

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, கன்னி (புரட்டாசி),12]

{28-09-2020}

---------------------------------------------------------------------------------------------------------

             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

 கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------------

 

 

 

வியாழன், ஜனவரி 23, 2020

தமிழ் (30) ”ச”கரத்தை மறந்த தமிழர்கள் !

தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டும் இந்த  “” கரத்திற்கு அடிமையாகிப் போனது ஏன் ? 



தமிழ் நெடுங்கணக்கில் உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, உயிர்மெய்யெழுத்து 216, ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன என்பது தமிழ் படித்த அத்துணைப் பேருக்கும் தெரியும். படித்து முடித்தாகிவிட்டது; ஏதோவொரு பணியையும் தேடிக் கொண்டாகிவிட்டது. சிலருக்குத் திருமணமும் ஆகிவிட்டது !

இத்துணைக் காலத்திற்குப் பிறகு, ஒரு சிலருக்கு, தமிழ் நெடுங்கணக்கில் உள்ளகர வரிசை எழுத்துகள் மட்டும் பகையாகிப் போய்விட்டன. எப்படி என்று கேட்கிறீர்களா? சில நண்பர்களை அழைத்து ஆய்வு செய்வோமே ! முதலில் சண்முகம் என்பவரை அழைத்து உங்கள் பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள் என்று சொல்லுங்கள். அவர் தமிழில் ஷண்முகம்என்றும் ஆங்கிலத்தில் SHANMUGAM என்றும் எழுதி இருப்பார். அவருக்குஎழுத்து மறந்து போய்விட்டதா அல்லது அதன் மீது ஏதாவது வெறுப்பா ?

இன்னொருவரைகுறிப்பாகச் சரவணன் என்பவரை - அழைத்து அவர் பெயரை இரு மொழிகளிலும் எழுதச் சொல்லுங்கள். “SHARAVAVAN” என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார். அன்பரே, தமிழிலும் எழுதுங்கள்  என்று சொன்னால்,  I AM SORRY என்று சொல்லிவிட்டுஷரவணன்என்று எழுதுகிறார். என்ன நண்பரே ! “சரவணன்என்று தானே எல்லோரும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள், நீங்கள் மட்டும் ஷரவணன்என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா ? என்று வினவினால், பெயரியல் கலையின்படி (NAMALOGY)  எழுத்துக்குப் பதில்எழுத்துப் பயன்படுத்தினால் நான் பெரிய ஆளாக வருவேன் என்று  பெயரியல் கலைஞர் (NAMALOGIST) ஒருவர் சொன்னார். என்கிறார் !

தாய்க் குலத்திலிருந்து ஒருவரை அழைத்துசாந்திஎன்று எழுதச் சொல்லுங்கள். அவர் உங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு “SHANTHI” என்று எழுதுகிறார். தமிழில் எழுதச் சொன்னால்ஷாந்திஎன்று வரைகிறார். என்ன ஆயிற்று இந்த தமிழ்க் குலத்திற்கு ? நாம் வாழ்வது தமிழகம் தானா ? தமிழகத்தில் இன்று தாராளமாகப் புழங்கும் கரப் பெயர்களைப் பாருங்களேன் !

( (01) ஷங்கர்  (02) ஷிவா  (03) ஷிவகுமார்  (04) ஷேகர்  (05) ஷெல்வகுமார். (06) ஷரவணன்  (07) ஷாந்தி  (08) ஷண்முகம் (09) ஷம்பத் குமார் (10) ஷெல்வா (11) ஷெல்வி


தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டும் இந்தகரத்திற்கு அடிமையாகிப் போனது ஏன் ? இவர்கள் எல்லாம் தம் சொந்த அறிவை இழந்து வாழும் சிந்தனைச் சிற்பிகள்ஆகிவிட்டார்களோ ?  பித்தலாட்டக் காரர்களின் பேச்சைக் கேட்டுத் தன் பெயரைச் சிதைத்துக் கொண்டபேரறிவாளர்கள்ஆகப் பிறப்பெடுத்து விட்டார்களோ ?

பெயரியல் கலைஞன் (NAMALOGIST) என்று சொல்லிக் கொண்டு தொலைக் காட்சிகளில் கரும்பலகையும் சுண்ணக் காம்புக் (CHALK PIECE) கையுமாக காட்சிகள் நடத்தும் பித்தலாட்டக் காரர்களின் பின்னால் அணிவகுத்துச் செல்ல இவர்கள் எப்படித் துணிந்தார்கள் ? எதையும் பகுத்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டிய இந்த பளிங்குச் சிலைகள் சாக்கடைக்குள் சரிந்து கிடப்பது ஞாயந்தானா ?

உறவியல் கலைஞர் (FAMILIOLOGIST) என்று சொல்லிக் கொண்டு நாளை இன்னொரு ஏமாற்றுக்காரன் வந்து உன் தந்தையை மாற்றிவிட்டு இன்னொரு ஆளைத் தந்தையாக  ஏற்றுக் கொண்டால், ஒளிமயமான எதிர்காலம் உனக்கு உண்டு என்று சொன்னால், இந்த பேதைகள் பெற்ற தந்தையையே மாற்றி விடுவார்களா ?

கோடி கோடிச் செல்வர்களாக இந்தியாவில் உலா வந்து கொண்டிருக்கும் டாட்டா”, பிர்லா, அம்பானி, அதானி, அகர்வால் எல்லோரும் பெயரியல் கலைஞர்களின் பேச்சைக் கேட்டுப் பெயரை மாற்றிக் கொண்டு வாழ்வில் உயர்வடைந்தவர்கள் தானா ?

பெயரியல் கலைக்கு ஒரு மனிதனின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஆற்றல் உண்டு என்பது உண்மையானால்,  நாட்டில் நடமாடும் அத்துணைப்  பெயரியல் கலைஞர்களும், தங்கள் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டுடாட்டா, பிர்லா, அம்பானி, அதானி அகர்வால்ஆகிவிட வேண்டியது தானே ? எதற்காகத் தொலைக் காட்சிகளில் தோன்றி ஏமாறுபவர்கள் இருக்கிறார்களா என்று தூண்டில் போட்டுக் கேவலமான பிழைப்பை நடத்த வேண்டும் ?

ஷரவணன், ஷண்முகம், ஷாந்தி, ஷிவா, ஷேகர் எல்லோரும் சிந்தியுங்கள் ! ஏமாற்றுக்காரர்களின்  தூண்டிலுக்கு நீங்கள் இரையானது போதும். சிதைந்து போன உங்கள் பெயர்களை மீட்டெடுத்து, முன்பு போல்சரவணன், சண்முகம், சாந்தி, சிவா, சேகர்என்று மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது அழகிய தமிழில் குறிஞ்சி வேந்தன் (சரவணன்), சிலம்புச் செல்வன் (சண்முகம்), பண்பழகி (சாந்தி), சுடர்வண்ணன் (சிவா), முடியரசன்( சேகர்) என்று மாற்றி அமைத்துநான் தமிழன்என்று பறை சாற்றித் தலை நிமிர்ந்து வாழுங்கள் !


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)08]
{22-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------