தமிழ் நாட்டுக் கோயில்களில் உள்ள இறைவியர் பெயர்கள் !
--------------------------------------------------------------------------------------------------தமிழ்நாட்டுக் கோயில்களில் எழுந்தருளியுள்ள இறைவியர் பெயர்கள்
பல இனிய தமிழில் அமைந்திருந்தன. காலப் போக்கில், அவற்றுள் 
பல மறைந்து சமற்கிருதப் பெயர்கள் வழங்கலாயின. எனினும் 
இன்னும் சில கோயில்களில்
 தமிழ்ப்  பெயர்கள் நிலைத்து நிற்கவே செய்கின்றன.
உங்கள்  பார்வைக்கு அவற்றுள் சில !
   இறைவியின் பெயர்                               கோயில் உள்ள ஊர்.
----------------------------------------------------------------------------------------------
குழல்வாய் மொழி அம்மை  =  குற்றாலம் (நெல்லை)
காவியங் கண்ணி அம்மை  =  திருக்குருகாவூர் (சீர்காழி)
பெண்ணின் நல்லாள் அம்மை  =  திருக்கழுக்குன்றம்
பாகம்பிரியாள் அம்மை =  திருச்செங்கோடு
ஒப்பிலா அம்மை  =  திருச்சோற்றுத்துறை (தஞ்சை)
அருமருந்தன்ன அம்மை  =  திருந்துதேவன்குடி (குடந்தை)
பசும்பொன் மயிலம்மை  =  திருப்பராய்த்துறை (திருச்சி)
இளங்கொடி அம்மை  =  திருப்பறியலூர் (தஞ்சை)
வண்டார் பூங்குழலி அம்மை  =  திருப்பாம்புரம் (குடந்தை)
தாமரை நாயகி  =  திருப்பார்த்தன் பள்ளி (சீர்காழி)
கருந்தார் குழலி அம்மை  =  திருப்புகலூர் (நன்னிலம்)
அல்லியங்கோதை அம்மை  =  திருப்புள்ளமங்கை (நாகை)
கரும்பன்ன சொல் அம்மை  =  திருப்புறம்பியம் (குடந்தை)
மின்னனையாள் அம்மை  =  திருப்பூவனம் (மானாமதுரை)
யாழின் மொழி அம்மை  =  திருமணஞ்சேரி (மயிலாடுதுறை)
அல்லியங்கோதை அம்மை  =  திருவாரூர்
யாழைப் பழித்த மொழி அம்மை  =  வேதாரணியம்
வண்டார் பூங்குழல் அம்மை  =  திருவாளொளிப்புற்றூர் (குடந்தை)
ஏலவார் குழலி அம்மை  =  ஆலங்குடி (குடந்தை)
வேற்கண்ணி அம்மை  =  திருவெண்ணெய் நல்லூர் (விழுப்புரம்)
மின்னலொளி அம்மை  =  திருவெண்பாக்கம் (திருவள்ளூர்)
பொற்கொடி அம்மை  =  திலதைப் பதி  (திருவாரூர்)
வேயுறு தோளி அம்மை  =  நீடூர் (மயிலாடுதுறை)
ஏலவார் குழலி அம்மை   =  திருவிற்குடி  (திருவாரூர்)
இளங்கிளி அம்மை  =  அச்சிறுபாக்கம்
(அடைப்புக் குறிக்குள் அருகில் உள்ள பெரிய ஊர்ப் பெயர் தரப்பட்டுள்ளது)
--------------------------------------------------------------------------------------------------------
          ”தமிழ்ப்
பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
.[தி.ஆ:2049, நளி,14.]
(30-11-2018)
---------------------------------------------------------------------------------------------------------
கரையான் அல்ல கறையான்
பதிலளிநீக்குகறையான் = சிதல்