கொத்து (01)                                                   
                                    மலர் (35)
-------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை நண்பர் வில்லியம் கிராசுக்கு 
ஏற்பட்ட துய்ப்பு பற்றி  அவருக்காக எழுதப்பட்ட 
ஒரு கவிதை !
(ஆண்டு 1970)
----------------------------------------------------------------------------------------------------
        செம்பரிதி         மேலையாழி     நீரிலாடும்        நேரம்
             சிந்தனையில்      மனமுழல     
மலைச்சாரல்      சென்றேன் !
        அம்புலியின்      வடிவாக          அவளங்கு        வந்தாள் !
             ஆவலுடன்         கைப்பற்றி      
முகம்பார்த்து       நின்றேன் !
        மைவிழிகள்      கண்ணீரில்       உறவாட          நின்றாள் !
             மனம்வாடும்       காணமென் ?    
விளம்பிடுக        என்றேன்!
        கைவிரலில்      முகம்பொத்தி     சிரந்தாழ          நின்றாள் !
              கவலையுடன்     முகம்பற்றி      ஏனென்று         கேட்டேன் !
        கண்ணீரில்       நான்வாட        
கவல்கொண்டு  உள்ளம்,
             கனலாக,
         எனைவிட்டுக்      கரந்ததேன் ?      என்றாள் ! 
        எண்ணங்கள்     அலைமோத      இமைமூடி        நின்றேன் !
             என்வாழ்வு        மனமேடைச்       சதிராடக்          கண்டேன் !
        பெறுகவென      உயர்பதவி        அரசினரும்       தந்தார் !
             பெருமையுடன்     உளம்மகிழ    
புதுகைநகர்     வந்தேன் !
        நறுமலரின்       சீர்த்தஉளம்       நலமழிய         எண்ணம்,
             நலிவடைய        புதியபல     
படிப்பினைகள்  கொண்டேன் !
        பணிபுரிந்து       வாழ்வியற்ற     வாழ்த்தியவர்     கண்டேன் !
             பழகுதற்கு         உரிமையுடன்  
அணுகியவர்      இல்லை !
        அணிமிகுந்து     வானுயர்ந்த      மாளிகைகள்      கண்டேன் !
             அன்புடனே       உறவுகொள்ள   
விழைந்தவர்கள்  இல்லை !
        உணவுதேடி       நாடிபல          விடுதிகளைக்     கண்டேன் !
             உவப்புடனே      அளிப்பதற்கு     
முன்வருவார்      இல்லை !
        பணத்தினையே  பெரிதுஎன        மதிப்பவர்கள்      கண்டேன் !
             பண்புதனில்       இனியவரைப்    
போற்றிடுவார்  இல்லை !
வழிமறைந்து நிலைகுலைந்து உளம்வருந்த நின்றேன் !
             வான்மழையாய் ஆங்கொருதாய்  துயர்விலக்க  வந்தாள் !
        விழிதனிலே      அருளுடனே      உணவுண்ணத்    தந்தாள் !
             விருப்புடனே   அதையுண்டு      
 நலம்பேணி     
 வந்தேன் !
        அன்புதனை      விழியிலேந்தி    
தங்கையவள்    வந்தாள் !
             அவளோடு      உறவாடி            இதயத்தை       வென்றேன் !
        கன்னிப்பூ      அவளெந்தன்   உளந்தன்னைக் கொண்டாள் !
             கவடின்றி       அன்போடு          ஒருபாதை       நின்றோம் !
        அயலார்கள்      பழிகூற           வழிமீது           வந்தார் !
             அஞ்சாது        எதிர்நின்று         போராடி         வென்றோம் !
        வெயிலாகச்      சிலபேர்கள்       எமைச்சாடி       வந்தார் !
             விரிவாகச்       சொன்னோம்பின்  
வழிமாறிச்
     சென்றார் !
எதிர்போகிப் புறங்கூறும் இழிவான சிலபேர்
             இடையூறு       விளைவிக்க       வழிதேடி          வந்தார் !
        சதிகாரர்          மறைவாகப்      பலவின்னல்      செய்தார் !
             சாய்க்கடை      மொழிபேசி       வசைபாடி        வந்தார் !
        உயிரான          உறவுக்குப்        பழிசூழச்          செய்தார் !
             உண்மைக்குத்    திரையிட்டு      விளங்காமல்     செய்தார் !
        பயிரான          பெண்மைக்குக்   களங்கத்தைப்    பெய்தார் !
             பாவமென்       உயிர்த்தங்கை  மனம்வாடி          நின்றாள் !
        சொல்லுதற்கு    இயலாத          சூழலால்         தீயோர்,
             சொல்மிக்க      மதிப்பெய்த        உயர்வாகி         நின்றார் !
        புல்லிற்கு         இணைசெல்லும் புலையர்தம்      கூற்றால்,
             பொய்யென்ற     தீயால்மெய்     புகையாகச்         செய்தார் !
தங்கைக்கு இடையூறு தவிர்க்கின்ற நோக்கில்,
             தடம்மாறி       மறைவாக         இடந்தேடி          வந்தேன் !
        மங்கையின்      உளம்பூத்த        மாசற்ற           நட்பின்
             மாண்பினை     உணராத           மதிகெட்ட         உலகம் !
        கயமையே        உருவாகப்        பணம்தேடும்      மாந்தர் !
             கரவாமல்         மெய்பேசத்      
தடுமாறும்          சுற்றம் !
        பயம்மிக்க        உணர்வோடு      மனம்வாடும்      பெண்டிர் !
             பலவுமென்       உள்ளத்தில்      
பகடையாய்ச்       சூழ,
        வெறுப்புற்று      வழிமாறி         வெளியேறி       வந்தேன் ! 
             விழிமீது           நீரேந்தி         அவள்நொந்து     
நின்றாள்
!
        அறுபட்ட         கொடியாக        உயிர்வாடி        நொந்தேன் !
             ஐந்தாறு           நாளாக          எனைத்தேடி       
நின்றாள்
!
உறுதிக்கு இடந்தந்து மறைவாக வாழ்ந்தேன் !
             உள்ளத்தில்      அவள்வந்து      உறவாடி           நின்றாள் !
        மறுத்துள்ளம்     இளைப்பாற      மலைச்சாரல்     சென்றேன் !
             மனம்நொந்த     என்தங்கை       அழுதங்கு         நின்றாள் !
        துயருக்குப்       பொருள்கேட்டு   முகம்பார்த்து     நின்றேன் !
             உயிருக்கு        முடிவெய்த      
வழிகூறச்        சொன்னாள் !
        உயர்வான        நெஞ்சத்தை      உணராத          உலகில்
             உயிர்வாழ்ந்து    பயனென்ன ?     
உரையீரோ       என்றாள் !
        அன்பிற்குத்       தடையிட்டு       அணைபோட     உலகில்,
             அரணேது
?      அறியாது !        இன்றிந்த         உலகம் !
        என்பற்ற          நாவின்று         பலவாறு          பேசும் !
             எதற்காகப்       பிரிந்தென்னை    
மறைவாக       வேண்டும் ?
முன்னைப்போல் அன்போடு உறவாடி வாழ்வோம்!
             முரணுற்று      மறைவாக       
வாழாதீர்
!          என்றாள் !
        அன்னைக்கு      நிகரான          அன்பார்ந்த       தெய்வம் !
             அறிவிற்கு       ஒளியூட்டி       
வழிகாட்டி           நின்றாள் !
        அழுக்காறு       மிகுந்தோரின்    விழிப்பார்வை      அஞ்சி,
             அன்பிற்குத்       திரையிட்டு      
உயிர்வாழ்தல்   வாழ்வா ?
        குழப்பங்கள்      தெளிவுற்றுக்     கரம்பற்றிக்   கொண்டோம் !
             கொடுமைக்கு  முடிவெய்த சூள்கொண்டோம்
! வெல்வோம் !!
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .