name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம் பாடல் (12) தத்தித் தாதூதித் தத்துதி !

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (12) தத்தித் தாதூதித் தத்துதி !

வானம்பாடி படத்தில் ஒலித்த  “தாதி தூது ”  பாடல் !


காளமேகப் புலவர் இரட்டுற மொழிதல் என்னும் வகையில் இரு பொருள் 

படும்படிப் பாடுவதில் வல்லவர்.  இந்தப் பாடல் சற்று வேறுபட்டது !

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

தத்தித்தா    தூதுதி    தாதூதித்    தத்துதி
துத்தித்    துதைதி    துதைதத்தா    தாதுதி
தித்தித்த    தித்தித்த    தாதெது    தித்தித்த
தெத்தாதோ    தித்தித்த    தாது?

------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------

தத்தித்   தாவிப் பறந்து சென்று பூக்களில் இருக்கும் தேன் துளியாகிய 

தாதுவை  உண்கின்ற வண்டே ! ஒரு பூவினுள் உள்ள தாதுவை (தேன் 

துளிகளை) உண்ட பின்பு மீண்டும்  வேறு  ஒரு பூவினுள் சென்று தாது 

எடுத்து உண்ணுகிறாய்.  உனக்கு  எந்தப்  பூவினுள்   உள்ள  தேன்  

(எத்தாதுதித்தித்தது (இனித்தது) ?

------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு :-

இப்பாடலில் கர   வரிசை  எழுத்துகள்    மட்டுமே   பயன்படுத்தப் 

பட்டுள்ளன.
-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

தத்தி = பாய்ந்து பறந்து சென்று; தாது = பூவில் இருக்கும் தேனை; ஊதுதி 

= நுகர்கிறாய் (உண்கிறாய்);  தாது ஊதி  = அந்த மலரில் இருக்கும் தேன் 

துளிகளை   உண்டபின்;   தத்துதி   = மீண்டும்  தத்திப்  பறந்து  அடுத்த 

மலருக்குச்  செல்கிறாய்;  துத்தி =  அந்த  மலரில் உள்ள உண்பதற்குரிய 

தேனை;  துதைதி  = நீ  நெருங்கி;  துதை  தத்து = மிகுதியாக அப்பூவில் 

பரவி;       தாதுதி  =  அந்தத்  தேனை  உண்டு  வெளி  வருகிறாய்

தித்தித்தது  =  அப்படி  உண்ட தேன் உனக்கு  இனிப்பாக இருந்திருக்கும்

இத் தித்தித்த = இந்த வகையில்  இனிப்பான;  தாது  எது ? = தேன் எந்த 

மலருடையது ?  தித்தித்தது  =  இனிமை  ததும்பிய  தேன்   துளிகளில் 

மிகுதியும்  இனித்தது  ;  எத்தாதோ  =  எந்த  மலரின் தேன் துளியோ

தித்தித்தது யாது = அவ்வாறு இனித்தமைக்குக் காரணம் யாது ?

------------------------------------------------------------------------------------------------------------
       
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

                    --------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
 தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 10.]
{25-12-2018}
----------------------------------------------------------------------------------------







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .