name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: இலக்கணம்
இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 11, 2019

இலக்கணம் (14) சந்திப் பிழைகள் !


பொதுவகைப் பிழைகள் சில !



                                                   முதல்வகை
---------------------------------------------------------------------------------------------------------

ஒரு சொல்லுடன் மற்றொரு சொல் சேரும்போது இடையில் புது எழுத்துத் தோன்றுவது சந்தி (-டு) கொத்தி + தின்றது = கொத்தித் தின்றது).  இன்னொரு வகைச் சந்தியில், இடையில் எழுத்துகள் உருமாறும். (-டு) முன் + பிறப்பு + முற் பிறப்பு)  இவ்விரண்டில், முதல் வகைச் சந்திகளில் பிழை நேராமல் காத்துக்கொள்வது இன்றியமையாதது !

இரண்டாவது வகைச் சந்திகளில் இடையில் மாற்றம் செய்யாமல் எழுதுவதால் குறையில்லை. (முன் + பிறப்பு = முற்பிறப்பு, இதை முன்பிறப்பு என்றும் எழுதலாம்) இதுவே தமிழறிஞர்கள் பலரின் கருத்து. இஃது அவர்கள் கையாளும் முறையும் ஆகும் !

---------------------------------------------------------------------------------------------------------

                                             இரண்டாம் வகை:

---------------------------------------------------------------------------------------------------------
              
                இயல்பாக................................................................சந்தியுடன்

---------------------------------------------------------------------------------------------------------
              
             கோயில் கணக்கு.................................................கோயிற்கணக்கு
              நகரில் இருந்து......................................................நகரிலிருந்து
              மணி அளவில்......................................................மணியளவில்
              சில ஆண்டு............................................................சிலவாண்டு
              பெறுதற்கு என்றே...............................................பெறுதற்கென்றே
              முன் பிறப்பு............................................................முற்பிறப்பு
              மலர் ஒன்று............................................................மலரொன்று
              வாழை அடி.............................................................வாழையடி
              நல் நடத்தை...........................................................நன்னடத்தை
              ஆதலால் தான்.....................................................ஆதலாற்றான்
              ஓதாது உணர்தல்.................................................ஓதாதுணர்தல்
              பருவத்தில் தானே...............................................பருவத்திற்றானே
              வேங்கடம் குமரி..................................................வேங்கடங்குமரி
              பாலும் சோறும்.....................................................பாலுஞ்சோறும்
              நாள் தோறும்..........................................................நாடோறும்
              அருள் பா..................................................................அருட்பா
              தண் தமிழ்................................................................தண்டமிழ்
              முதல் நிலை..........................................................முதனிலை
              அமைவு இன்றி.....................................................அமைவின்றி
              கள் குடி.....................................................................கட்குடி
              நமது ஊரில்............................................................நமதூரில்


--------------------------------------------------------------------------------------------------------


இவ்விரு கட்டங்களில் கண்ட சொற்களில் எந்தக் கட்டத்தில் உள்ளதை எழுதினாலும் போதும் இக்காலத்துக்கு.  முதல் கட்டத்தில் உள்ள இரு சொற்களைச் சேர்த்து ஒலிக்கும் போது, இயல்பாக, இரண்டாவது கட்டத்தில் எழுதி  இருப்பதைப் போலவே ஒலிக்கின்றோம். அப்படியே எழுதுவது நல்லதே.  இலக்கணம் இயற்கையை யொட்டி  அங்ஙனந்தான்  விதிக்கிறது. ஆனால், முதல் கட்டத்தில் இருப்பது போலப் பேசுவதும், எழுதுவதும் போதுமானது. தவறாகாது. எனவே இவ்வகைச் சந்தியைப் பற்றிய கவலை வேண்டாம் !

---------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய 
தமிழில் எழுதுவோம்
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற  பகுதி)

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கடகம்,31]
{16-08-2019}

--------------------------------------------------------------------------------------------------------
       
தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------


இலக்கணம் (13) ”கள்” விகுதிப் பிழை; இடையின வல்லினப் பிழை ! !

பொதுவகைப் பிழைகள் சில !

கள் விகுதிப் பிழைகள்;  இடையின வல்லின வேறுபாடு .


இரண்டொரு செய்திகளைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்டு என்னும் சொல் வருடத்தைக் குறிக்கும்போதுஆண்டு காலம்” ( ஐம்பது ஆண்டு காலம் ) என்று எழுதுவது சரி. “ஆண்டுக் காலம்தவறு ! (இடையில்க்வராது.).

ஆண்டு என்னும் சொல்அங்கேஎன்று பொருள்படும் இடங்களில்ஆண்டுக் கண்டதுஎன்றுக்சேர்த்து எழுத வேண்டும். “ஈண்டுஎன்னும் சொல்இங்கேஎன்னும் பொருள் உடையதால் ஈண்டுக் கேட்டனர்என்றேக்சேர்த்து எழுத வேண்டும். “ஈண்டு கேட்டனர்தவறு !


--------------------------------------------------------------------------------------------------------
                      சரி ..........................................................................தவறு
---------------------------------------------------------------------------------------------------------

                  நாள்கள்................................................................நாட்கள்
                  தாள்கள்................................................................தாட்கள்
                  கோள்கள்.............................................................கோட்கள்
                  ஆள்கள்................................................................ஆட்கள்
                  தேள்கள்...............................................................தேட்கள்
                  படைப்புகள்.......................................................படைப்புக்கள்
                  அடைப்புகள்......................................................அடைப்புக்கள்
                  உடைப்புகள்......................................................உடைப்புக்கள்
                  பெயர்களுக்கு...................................................பெயர்கட்கு 
                  அவர்களுக்கு.....................................................அவர்கட்கு 
                  இவர்களுக்கு......................................................இவர்கட்கு
                  சுவர்களுக்கு.......................................................சுவர்கட்கு
                  பள்ளிகளுக்கு.....................................................பள்ளிகட்கு


...............................................................................................................................................

மேலே முதல் வரிசையில் கண்டவண்ணம் எழுதுவது சரி. இரண்டாவது வரிசையில் கண்டிருப்பன பிழை வடிவங்கள். “கள்விகுதியாக இருக்கும் இடங்கள் இவை. எனவேமிகுதலும்’, ‘மாற்றம்அடைதலும் கூடாது. இயல்பாகவே இருக்க வேண்டும் !

( நாள் + கள் = நாள்கள்: ) (இதில் நாள் = பகுதி; கள் = விகுதி) “கள்விகுதியாக வராமல் தனிச் சொல்லாக, மதுவைக் குறிப்பதாக, நாள் என்னும் சொல்லுடன் சேர்ந்து வரும்போதுநாட்கள்என்று ஆகும். அன்று இறக்கிய கள் என்பது அச்சொல்லுக்கு இங்கே பொருள் !

இதுபற்றிப் புலவர்களுக்கு இடையே வேறுபட்ட கருத்து இருக்கின்றது என்றாலும் முதுபெரும் புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் போன்றவர்கள் மேற் கூறியதே சரி என்று ஆதாரங்களுடன் விளக்குவதைக் கேட்டிருக்கிறேன் !


---------------------------------------------------------------------------------------------------------
                   
                           இடையின வல்லின வேறுபாடு !

----------------------------------------------------------------------------------------------------------

       மதிப்புக்குரிய...................................................மதிப்புக்கு உரிய
       மதிப்புக்குரிய...................................................மதிப்புக் குறிய,
       ................................................................................(மதிப்பில் மட்டமான)
       கோருகிறேன்...................................................வேண்டிக் கொள்ளுகிறேன்
       கோறுகிறேன்....................................................(கோறல்=கொலை செய்தல்)
       ................................................................................கொலை செய்கிறேன்.
       அக்கரை..............................................................அந்தக் கரை
       அக்கறை.............................................................பற்று (Interest)


------------------------------------------------------------------------------------------------------------

இச் சொற்களின் பொருள் வேறுபாடு அறிந்து பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கு மற்றொன்றைப் பயன் படுத்தினால், பொருளே வேறுபட்டுவிடும். ஒரு மேல் அலுவலருக்கு ஒருவர்மதிப்புக்குறிய ஐய !” என்று விளித்து மடல் எழுதினால், அதன் பொருள்மட்டமான ஐயாஎன்றே ஆகும் !

இதை இந்நூலாசிரியர் ஆய்வு செய்த அலுவலகம் ஒன்றில், அவ்வலுவலருக்குச் சுட்டிக் காட்டிய போது திடுக்கிட்டார், தன் மேல் அலுவலருக்கு அப்படி எழுதிவிட்ட ஓர் அலுவலர். திருமண அழைப்புகளில் மணமக்களை  வாழ்த்தக் கோறுகிறேன் என்று எழுதுகிறார்களே ! இதன் பொருள் என்ன என்று சிந்தித்துப் பாருங்கள் !


------------------------------------------------------------------------------------------------------------

இடையின வல்லின வேறுபாட்டை மேலும் உணர, பின்வரும்
 வரிசைகளையும் கவனிக்க !

-----------------------------------------------------------------------------------------------------------
                         

                         கூரிய.........................= கூரான
                         கூறிய........................= சொன்ன
                         எரி...............................= தீப்பற்றி எரி
                         எறி..............................= வீசு
                         கரி...............................= அடுப்புக்கரி
                         கறி..............................= உண் பொருள்
                         மருப்பு.......................= கொம்பு
                         மறுப்பு.......................= எதிர்த்துக் கூறல்
                         பொருப்பு..................= மலை
                         பொறுப்பு..................= Responsibility
                         எண்ணெய்..............= எள் நெய் (OIL)
                         எண்ணை.................= Number
                         இரத்தல்...................= பிச்சை எடுத்தல்
                         இறத்தல்..................= சாதல்
                         குரங்கு......................= வானரம்
                         குறங்கு.....................= தொடை


-------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய 
தமிழில் எழுதுவோம்என்னும்
 நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கடகம்,32]
{17-08-2019}

--------------------------------------------------------------------------------------------------------
     
 ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் பகத்தில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------






இலக்கணம் (12) அல்ல; அன்று; இல்லை; அல்ல - எது எந்த இடத்தில் வரும் !


பொதுவகைப் பிழை சில !



நம் பேச்சிலும் எழுத்திலும் நிலவிவரும் தவறான வழக்கு பற்றி இப்போது பார்ப்போம் !

------------------------------------------------------------------------------------------------------------
     
      தவறு ! - - - - - - -  சரி !

-----------------------------------------------------------------------------------------------------------
    
    சிலவு.....................= செலவு (செல்லுதல்)
    சில்லரை..............= சில்லறை (சில்லு சில்லாக 
                                        அறுத்தல்)
    துகை.....................= தொகை (தொகுத்தல்)
    சுவற்றில்..............= சுவரில் (சுவர் + இல்)
    கண்டறாவி.........= கண்ணராவி (கண்களை
                                        அராவுதல்)
    வரையரை...........= வரையறை (வரை யறுத்தல்)
    வகையரா............= வகையறா (வகை யறுத்தல்)
    கோர்வை..............= கோவை (கோ + )
    கோர்த்து...............= கோத்து (கோ + து)
    பூர்த்தல்.................= பூத்தல் (பூ = பகுதி)
    முயற்சித்தான்...= முயன்றான் (முயல் =பகுதி)
    சம்மந்தம்.............= சம்பந்தம் (நல்ல உறவு)
    குடுத்தான்...........= கொடுத்தான்
    கச்சாத்து..............= கைச்சாற்று
    புஸ்தகம்..............= புத்தகம்

----------------------------------------------------------------------------------------------------------

முதல் வரிசையில் உள்ளவை தவறு
இரண்டாவது வரிசையில் உள்ளவையே சரியான வழக்கு ஆகும் !

---------------------------------------------------------------------------------------------------------

மேலும் சில தவறுகள்
---------------------------------------

எள்ளிலிருந்து  எடுபடும்  நெய் எண்ணெய்”  (எள் + நெய் =  எண்ணெய்எனப்
பெற்றது.முதலில் நம் நாட்டில்  நெய்ப்புப்  பொருள், விதைகளிலிருந்து எடுக்கப் பெற்றது, எள் விதையிலிருந்தே என்னும் உண்மையை இச் சொல் விளம்பிக்  கொண்டிருக்கிறது. இதனைஎண்ணெய்என்று சொல்வதே  சரி.  எண்ணைதவறாவதுடன், சொல்லின் வரலாற்று உண்மை ஒன்றை மறைத்து விடுகிறது !


அருகு = நெருங்கு. அருகாமை = நெருங்காமை. எனவே, ”அருகாமையில் என்பது தொலைவில் உள்ளதையே குறிக்கும். ஆனால், அருகில் இருப்பதைக் குறிக்க இச் சொல்லைப் பயன் படுத்துகிறோம். இது தவறு ! ”அருகில்என்று தான் சொல்ல வேண்டுமேயன்றிஅருகாமையில்என்று சொல்வது பிழை !

-------------------------------------------------------------------------------------------------------------

இல்லை,  அல்ல , என்ன வேறுபாடு ?

-----------------------------------------------------------------------------------------------------------
அவை இல்லை:- அந்தப் பொருள்கள் குறித்த இடத்தில் இல்லை என்று பொருள் !

அவை அல்ல:-  அந்தப் பொருள், நாம் எண்ணும் பொருள் அல்ல, வேறு பொருள் என்றாகும் !

ஆனால், இவ் வேறுபாடு தெரியாமல் பயன்படுத்துவது  வழக்கமாகிவிட்டது. வேலன் எதிரே இருக்கின்றான்அவனைப் பார்த்து, அவர் முருகன்  அல்லன் என்று கூறுவதே பொருந்தும். அவன் முருகன் இல்லை என்பது தவறு !

-------------------------------------------------------------------------------------------------------------

அன்று, அல்ல, அல்லன், அல்லள், அல்லர் : எதை எங்கே பயன்படுத்துவது ?

-------------------------------------------------------------------------------------------------------------

அது அன்று !
அவை அல்ல !
அவன் அல்லன் !
அவள் அல்லள் !
அவர் அல்லர் !

------------------------------------------------------------------------------------------------------------

இவ் வேறுபாட்டைச் சிறிதும் உன்னாமலேயேஅல்லஎன்னும் சொல்லை எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். அது அல்ல, அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, என்பன தவறு. அவை அல்ல  என்பது மட்டுமே சரி !

-----------------------------------------------------------------------------------------------------------
பிழை.................................சரி
-----------------------------------------------
அதினால்...........= அதனால்
பேஜார்................= பேய்சார் (பேய்ச் 
                                   சார்ந்த நிலை, பேயினால்
                                   பீடிக்கப்பட்ட நிலை)
காக்ஷி..................= காட்சி (காண் =பகுதி)
மாக்ஷி..................= மாண் = பகுதி)
மண்டபம்...........= மண்டகம் (மண்டுகிற /
                                   மக்கள் பலராக 
                                   நெருங்குகிற    இடம்)
                

----------------------------------------------------------------------------------------------------------

கல்வெட்டில்மண்டகம்என்ற சொல்லே வழங்கப் பெற்றிருக்கிறது. “மண்டகப் படிஎன்னும் சொல்லையும் காண்க !

----------------------------------------------------------------------------------------------------------

பொருத்தமான சொற்கள் இடாமல் எழுதுவதும் தவறு :

சரி  : குழப்பம் ஏற்பட்டது
தவறு: குழப்பம் நிலவிற்று.

சரி  : தீமை செய்தான்.
தவறு: தீமை புரிந்தான்.

சரி   ; துன்பம் நேர்ந்தது.
தவறு: துன்பம் வாய்த்தது.

சரி   : நல்லது செய்ய ஊக்கினான்.
தவறு: நல்லது செய்யத் தூண்டினான்

சரி   : தண்டனை விதித்தார்.
தவறு: தண்டனை அளித்தார்.

----------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய
தமிழில் எழுதுவோம்
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[திருவள்ளுவர் ஆண்டு: 2050, மடங்கல் (ஆவணி) 01.]
{18-08-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
       
தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------