கொத்து
(01)                                                                           மலர் (004)
----------------------------------------------------------------------------------------------------------
                       வேலை வாய்ப்புப் பயிற்சித் துறை
இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கைப் பிரிவில் கண்காணிப்பாளராகப்
பணியாற்றிய திரு. இரமணி அவர்கள் புதுக்கோட்டை வந்திருந்தபோது எழுதி அளித்த கவிதை
(ஆண்டு 1968)
(ஆண்டு 1968)
---------------------------------------------------------------------------------------------------------
         அன்பைச்  சொரிந்து  வரும்  அருவி ! – எளிமை
              அழகு  ததும்புகின்ற  ஊற்று ! – ஒளிரும்
         பொன்னில் உறவுகொண்ட  மேனி ! – விழியில்
              பொங்கி  வழிந்துவரும்  நிலவு ! – எமது
         நெஞ்சில்  குடிபுகுந்த  தென்றல் ! – அழியா
              நினைவில்  வளர்ந்துவரும்  கவிதை ! – அமுதத்
         தஞ்சை    உலகளித்த  தரளம் ! – மின்னும்
               தங்க    மதுர    மணிக்    கலசம் !
-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .