வானம்பாடி படத்தில் ஒலித்த “தாதி தூது ” பாடல் !
காளமேகப் புலவர் இரட்டுற மொழிதல் என்னும் வகையில் இரு பொருள் 
படும்படிப் பாடுவதில் வல்லவர். இந்தப் பாடல் சற்று வேறுபட்டது !
படும்படிப் பாடுவதில் வல்லவர். இந்தப் பாடல் சற்று வேறுபட்டது !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------------------------------
தத்தித்தா    தூதுதி    தாதூதித்    தத்துதி
துத்தித்    துதைதி    துதைதத்தா    தாதுதி
தித்தித்த    தித்தித்த    தாதெது    தித்தித்த
தெத்தாதோ    தித்தித்த    தாது?
------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
தத்தித்   தாவிப் பறந்து சென்று பூக்களில் இருக்கும் தேன் துளியாகிய 
தாதுவை  உண்கின்ற வண்டே ! ஒரு பூவினுள் உள்ள தாதுவை (தேன் 
துளிகளை) உண்ட பின்பு மீண்டும்  வேறு  ஒரு பூவினுள் சென்று தாது 
எடுத்து உண்ணுகிறாய். உனக்கு எந்தப் பூவினுள் உள்ள தேன்
(எத்தாது) தித்தித்தது (இனித்தது) ?
எடுத்து உண்ணுகிறாய். உனக்கு எந்தப் பூவினுள் உள்ள தேன்
(எத்தாது) தித்தித்தது (இனித்தது) ?
------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு :-
இப்பாடலில்  “த”கர   வரிசை  எழுத்துகள்    மட்டுமே   பயன்படுத்தப் 
பட்டுள்ளன.
-----------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
--------------------------
தத்தி = பாய்ந்து பறந்து சென்று; தாது = பூவில் இருக்கும் தேனை; ஊதுதி 
= நுகர்கிறாய் (உண்கிறாய்); 
தாது ஊதி  = அந்த மலரில் இருக்கும் தேன் 
துளிகளை   உண்டபின்;   தத்துதி   = மீண்டும்  தத்திப்  பறந்து  அடுத்த 
மலருக்குச்  செல்கிறாய்;  துத்தி =  அந்த  மலரில் உள்ள உண்பதற்குரிய 
தேனை;  துதைதி  = நீ  நெருங்கி;  துதை  தத்து = மிகுதியாக அப்பூவில் 
பரவி;    ஆ   தாதுதி  =  அந்தத்  தேனை  உண்டு  வெளி  வருகிறாய்; 
தித்தித்தது  =  அப்படி  உண்ட தேன் உனக்கு  இனிப்பாக இருந்திருக்கும்; 
இத் தித்தித்த = இந்த வகையில்  இனிப்பான;  தாது  எது ? = தேன் எந்த 
மலருடையது ?  தித்தித்தது  =  இனிமை  ததும்பிய  தேன்   துளிகளில் 
மிகுதியும்  இனித்தது  ;  எத்தாதோ  =  எந்த  மலரின் தேன் துளியோ ? 
தித்தித்தது யாது = அவ்வாறு இனித்தமைக்குக் காரணம் யாது ?
------------------------------------------------------------------------------------------------------------
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.
                    --------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம், 
ஆட்சியர், 
 தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2049, சிலை, 10.]
{25-12-2018}
----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .