போர்க்களத்தில் புகுந்து பகைவர்களை வெல்லும் வீரனை !
நினைத்தவுடன் பாடல் பாடும் புலமை வளம் கொண்டவர் காளமேகம் !
காளமேகம் என்றால் கரிய மழை மேகம் ! மழை போல் கவிதை சொரியும் ஆற்றலால் தானோ என்னவோ
இவருக்குக் காளமேகம் என்னும் பெயர் வழங்கலாயிற்று !
--------------------------------------------------------------------------------------------------------
பாடல்
--------------------------------------------------------------------------------------------------------
செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல – மருப்புக்குத்
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமா றே !
--------------------------------------------------------------------------------------------------------
பொருள்.
மேல்நோக்குப் பொருள்:-
செருப்புக்காக
வீரர்களைக் கொன்று ஒழிக்கும் வேலனை நான் கண்டு கட்டித் தழுவ வேண்டும்; அவனிடம்
செல்லும் வழியை விளக்குமாறாகிய
வண்டே நீ எனக்கு விளக்குவாயாக !
-------------------------------------------------------------------------------------------------------
கூர்நோக்குப் பொருள்;-
போர்க்களம் புகுந்து வீரர்களைச் சிதறடித்துப் போர் புரியும் குறிஞ்சி நிலத் தலைவனான வேலனை, நான் நேரில் கண்டு பாராட்டிக் கட்டித் தழுவும் வகைபற்றி, தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் வண்டே எனக்கு விளக்கிக் கூறுவாயாக !
-------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
செரு
= போர்க்களம்; புக்கு = புகுந்து; சென்று
உழக்கும் = வீரர்களைக் கொன்று குவித்து வெற்றி ஈட்டும்; பொருப்புக்கு நாயகனை = மலைகள் சூழ்ந்த
குறிஞ்சி நிலத்தின் தலைவனான ; வேலன் = மன்னவனாகிய
வேலன் ; புல்ல = ஆரத் தழுவிக்
கொள்ள ; மரு = மணம் ; புக்கு = புகுந்து; தண் தேன் = குளிர்ச்சியான தேன்; பொழிந்த = பொழிகின்ற ; திருத் தாமரை மேல் வீற்றிருக்கும் = அழகிய தாமரை
மலர் மேல் அமர்ந்திருக்கும்; வண்டே = அறுகாற் பறவை எனப்படும் வண்டே; விளக்கு = விளக்கிச் சொல்வாயாக !
------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப்
பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ: 2049, சிலை,
15..]
{30-12-2018}
-------------------------------------------------------------------------------------------------------