name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நன்னூல் விதிகள் (23) மெய்யீற்றுப் புணரியல் - மகரத்தின் முன் நாற்கணமும் புணர்தல் (நூற்பா.219)

செவ்வாய், மே 04, 2021

நன்னூல் விதிகள் (23) மெய்யீற்றுப் புணரியல் - மகரத்தின் முன் நாற்கணமும் புணர்தல் (நூற்பா.219)

 

                                  (04)மெய் ஈற்றுப் புணரியல்

 

                              மெய்  ஈற்றின் முன் மெய்.

 

நூற்பா.219. (மகரத்தின் முன் நாற்கணமும் புணர்தல் )

 

வ்வீறு ஒற்றழிந்து  உயிர் ஈறு ஒப்பவும்

வன்மைக்கு இனமாகத் திரியவும் ஆகும் (நூற்பா.219)

 

மகர ஈற்றுச் சொற்களின் முன் உயிர் வந்தால்,அவை உடம்படு மெய் பெறும்

வல்லினம் வந்தால் மிகும்;  மெல்லினமும் இடையினமும் வந்தால் இயல்பாகும்.

 

 

வருமொழி முதலில் உயிரெழுத்து வருகையில் , நிலைமொழி ஈற்றில் 

நிற்கும்கர ஒற்று கெட்டு, உயிர் ஈறு போல (உடம்படு மெய் பெற்றுப்

புணரும்.(பக்.177) (நூற்பா.219)

 

மரம் + அடி = மரவடி (பக்.177)

அரம் + அடி = அரவடி

(வேற்றுமையில் உயிரீறு போல் உடம்படு மெய் பெற்றுமுடிந்தன)

 

வட்டம் + ஆழி = வட்டவாழி (பக்.177)

பவளம் + இதழ் = பவளவிதழ் (பக்.177)

(அல்வழியில் உயிர் ஈறு போல் உடம்படு மெய் பெற்று முடிந்தன.)

 

 

வருமொழி முதலில் வல்லெழுத்து வருகையில் , நிலைமொழி ஈற்றில் 

நிற்கும்கர ஒற்று கெட்டு, உயிரீறு போல் (வல்லெழுத்து மிகும்) புணரும்.

(பக்.177) (நூற்பா.219)

 

மரம் + கோடு = மரக்கோடு (பக்.177)

மரம் + கிளை = மரக்கிளை

(வேற்றுமையில் உயிரீறு போல் (வல்லெழுத்து மிக்கு) முடிந்தன)

 

வட்டம் + கல் = வட்டக்கல் (பக்.177)

திட்டம் + செலவு = திட்டச் செலவு.

(அல்வழியில் உயிரீறு போல் (வல்லெழுத்து மிக்கு) முடிந்தன)

 

வருமொழி முதலில் மெல்லெழுத்து வருகையில் , நிலைமொழி ஈற்றில் 

நிற்கும்கர ஒற்று கெட்டு, உயிரீறு போல் (இயல்பாக) புணரும்.(பக்.177) 

(நூற்பா.219)

 

மரம் + நார் = மரநார் (பக்.177)

அரம் = மடி = அரமடி

(வேற்றுமையில் உயிரீறு போல் (இயல்பாக ) முடிந்தன)

 

மரம் + நெடிது = மரநெடிது

அரம் + மிகுதி = அரமிகுதி

(அல்வழியில் உயிரீறு போல் (இயல்பாக) முடிந்தன)

 

வருமொழி முதலில் இடையின எழுத்து வருகையில் , நிலைமொழி 

ஈற்றில் நிற்கும்கர ஒற்று கெட்டு, உயிரீறு போல் (இயல்பாக) புணரும்.

(பக்.177) (நூற்பா.219)

 

மரம் + வேர் = மரவேர் (பக்.177)

அரம் + வழி = அரவழி

(வேற்றுமையில் உயிரீறு போல் (இயல்பாக ) முடிந்தன)

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


வை.வேதரெத்தினம்,

[Veda70.vvQgmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .