name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நன்னூல் விதிகள் (18) பொதுப் புணர்ச்சி - எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினம், இடையினம் வரல் (நூற்பா.158)

செவ்வாய், மே 04, 2021

நன்னூல் விதிகள் (18) பொதுப் புணர்ச்சி - எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினம், இடையினம் வரல் (நூற்பா.158)

 

 

                            பொதுப்புணர்ச்சி

 

எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்) (பக்.121)

 

 

நூற்பா.158 (எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்) (பக்.121)

 

எண்மூ எழுத்து ஈற்று  எவ்வகை மொழிக்கும்

முன்வரு  , , , ,  ,க்கள் இயல்பும்

குறில்வழி த்தனிந்நொ’’துமுன்மெலி

மிகலுமாம் ண, , , ,  வழிதிரியும்.  (நூற்பா.158)

 

{உயிரெழுத்து =12 + ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ்,ள்,=11 + குற்றியலுகரம் =1,மொத்தம் 24 } (பக்.72.நன்னூல்) (நூற்பா.107)

 

 எண்மூ எழுத்து ஈற்று மொழிக்கு முன் வரும் ஞ, , , , , இயல்பாகும்.

 

{உயிரெழுத்து =12 + ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ்,ள்,=11 + குற்றியலுகரம் =1,மொத்தம் 24 } (பக்.72.நன்னூல்) (நூற்பா.107)

 

இந்த 24 எழுத்துகளையும் ஈற்றெழுத்தாகக் கொண்ட எந்தவொரு சொல்லுக்கும் முன் வரும் ஞகர, நகர, மகர, யகர, வகரங்கள், அல்வழி வேற்றுமை இரண்டிலும் இயல்பாகும். (பக்.121) (நூற்பா.158)

 

மண் + மேடு = மண்மேடு

நம் + வீடு = நம் வீடு

யாம் + நாடோம் = யாம் நாடோம்

பேய் + வீடு = பேய்வீடு

தேர் + வீதி = தேர்வீதி

கல் + வீடு = கல்வீடு

 

குறில்வழிமுன்  வரும் ஞ, , , , மிகலும் ஆம் !

குற்றெழுத்தின் பின் நிற்கும் ய்(-டு. மெய்) , முன் வரும் கார, கார, காரங்கள் மிகும். (பக்.121) (நூற்பா.158)

 

-டு) மெய் + மாண்டது = மெய்ம்மாண்டது. (பக்.123)

 

தனிம்முன் வரும் ஞ, , ,  மிகும்.

ஓரெழுத்து ஒரு மொழியாகிய தனி(-டு.கை), முன் வரும் ஞகார, நகார, மகாரங்கள் மிகும். (பக்.121) (நூற்பா.158)

 

(-டு) கை + நீண்டது = கைந்நீண்டது)

             + நூறு = ஐந்நூறு (பக்.123) (நூற்பா.158)

 

நொ’’துமுன்வரும் ஞ, , ம ஆகியவை மிகும்.

நொ’, ’துமுன் வரும் ஞகார, நகார, மகாரங்கள் மிகும். (பக்.121)

 

(-டு) நொ + மாடா = நொம்மாடா.(பக்.123) (நூற்பா.158)

 

, , , ,  வழிதிரியும்.

, , , , அகியவை முன் வரும் கரம் முன் திரியும். (ஆனால் பிற ஈற்றின் முன் இயல்பாகும்).(பக்.121) (நூற்பா.158)

 

வேற்றுமையில் வருமொழிகரம் திரியும்.(பக்.122) (நூற்பா.158)

 

மண் + நீட்சி = மண்ணீட்சி(நூற்பா.158)

முள் + நீட்சி = முண்னீட்சி

பொன் + நீட்சி = பொன்னீட்சி

கல் + நீட்சி = கன்னீட்சி

கல் + நெய் = கன்னெய்

அல்வழியில் வருமொழிகரம் திரியும்(பக்.122)

 

மண் + நீண்டது = மண்ணீண்டது. (நூற்பா.158)

முள் + நீண்டது = முன்னீண்டது

பொன் + நீண்டது = பொன்னீண்டது.

கன் + நீண்டது = கன்னீண்டது

அல்வழியில் வருமொழி நகரம் திரிந்தது.

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்

 -------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .