name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ் (13) ஆதிச்சநல்லூர் - கி.மு.10 ஆம் நூற்றாண்டு நாகரிகம் !

வியாழன், செப்டம்பர் 05, 2019

தமிழ் (13) ஆதிச்சநல்லூர் - கி.மு.10 ஆம் நூற்றாண்டு நாகரிகம் !

 தமிழனின் நாகரிகம் மூவாயிரம் ஆண்டுத் தொமையானது !


தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுசெய்து, கண்டெடுக்கப் பெற்ற பொருள்களில் இரண்டு, அமெரிக்க நாட்டில் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு, கரிம ஆய்வின் மூலம் (CARBON -14. TEST) அகவை (AGE) கண்டுபிடிக்கும் நோக்கத்திற்காக அனுப்பி வைக்கப் பெற்றிருந்தன. ஆய்வு முடிவுகளை மைய அரசின் தொல்லியல் துறையினர், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் இன்று ஒப்படைத்தனர் !

ஆய்வு முடிவின்படி, ஒரு பொருளின் அகவை  கி.மு.905 என்றும், மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளன. அதாவது முறையே கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு ஆகும் !

இதுபற்றி நீதியரசர் குறிப்பிடுகையில், இந்தியாவிலேயே மிகப் பழமையான மொழிதமிழ்தான் என்பது உறுதியாகிறது என்று பெருமிதத்துடன் சொல்லியுள்ளார் !

தமிழர்களே ! மிகப் பழமையான மொழிக்குச் சொந்தக்காரர்களாக  இருக்கும் நாம் இனிமேலாவது நம் தாய்மொழி மீது அக்கறை கொள்வோம் ! தமிழிலேயே பேசுவோம் ! தமிழிலேயே எழுதுவோம் ! தமிழிலேயே சிந்திப்போம் ! குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டுவோம் !!

[ பின் குறிப்பு:- அகழ்ந்தெடுக்கப் பெற்ற ஒரு பொருள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதைக் கண்டு பிடிக்க அறிவியல் வல்லுநர்கள் கரிம ஆய்வு முறையைக் கையாளுகின்றனர். அந்தப் பொருளில் இருக்கும் கரிமம்- 14, (CARBON -14) துகளின் அடிப்படையில் அதன் அகவையைக் (AGE) கணிக்கின்றனர். அமெரிக்க நாட்டில் தான் இதற்கான ஆய்வகம் உள்ளது ]

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி. 2050, மீனம், 21]
{04-04-2019}

---------------------------------------------------------------------------------------------------------

        “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .