name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பல்வகை (05) தொல்லியல் துறையில் வடமொழித் திணிப்பு !

புதன், அக்டோபர் 09, 2019

பல்வகை (05) தொல்லியல் துறையில் வடமொழித் திணிப்பு !

தொல்லியல் துறையா ? சமற்கிருத வளர்ச்சித் துறையா ?

தமிழகத்தில் பல இடங்களில் நடுவணரசின் தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. ஆனால் அவை பற்றிய அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று ஆய்வுக்கு வந்தது !

தமிழக அரசின் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் பற்றியும் அப்போது வினா எழுப்பப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகள் சில உத்தரவுகளை வழங்கினர் !

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும்போதுதமிழக தொல்லியல் துறையில் உள்ள  35 பணியிடங்களில் 25 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையில் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சமற்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது !

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துகளே உள்ளன. ஆகையால், சமற்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதை ஏற்கமுடியாது !

எனவே, (தமிழக அரசின்) தொல்லியல் துறையின் பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில், சமற்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்க வேண்டும்என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர் !

-------------------------------------------------------------------------------------------------------------

நமது வீட்டிற்குள்ளேயே நல்லபாம்பு குடியிருக்கிறதே !  தமிழக அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு சமற்கிருத வளர்ச்சிக்குத் தொண்டாற்றுவதற்கு என ஒரு துறையா ?

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்பணி மன்றம்.
[தி.: 2050, மேழம், 03]
{16-04-2019}
----------------------------------------------------------------------------------------------------------
     
 ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .