name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக் கடிகை (07) கல்லிற் பிறக்கும் கதிர்மணி !

வெள்ளி, பிப்ரவரி 19, 2021

நான்மணிக் கடிகை (07) கல்லிற் பிறக்கும் கதிர்மணி !


அருளிற் பிறக்கும் அறநெறி !

----------------------------------------------------------------------------------------------------------

விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் இயற்றிய நான்மணிக் கடிகை என்னும் நூல் கி.பி. 2-ஆம்  நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியம். பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற் பிரிவைச் சார்ந்தது இந்நூல். இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (07).

----------------------------------------------------------------------------------------------------------

 

கல்லிற் பிறக்குங் கதிர்மணி; காதலி

சொல்லிற் பிறக்கும் உயர்மதம்மெல்லென்று

அருளிற் பிறக்கும் அறநெறி; எல்லாம்

பொருளிற் பிறந்து விடும்.

-----------------------------------------------------------------------------------------------------------

 

கண்களைப் பறிக்கும்  ஒளிமிகுந்த மணிகள் எல்லாம் கற்களில் (கல் வடிவில்) பிறக்கின்றன !

 

ஆடவனுக்கு எழுச்சி தரும்  வீரம் அவனால் விரும்பப்படும் காதலியின் சொல்லில் பிறக்கிறது !

 

மனதில் ஊறும் மென்மையான அருளுணர்வில் பிறக்கின்றன  அறம் பொருந்திய நல்வழிகள் !

 

ஆனால்,  அவ்வறத்தோடு இன்பம் முதலிய எல்லாப் நற்பேறுகளும்  செல்வத்தினாற்  கூடப் பிறக்கின்றன !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------

 

கல்லில் = கல் வடிவில்; கதிர்மணிகள் = ஒளி பொருந்திய வைரம் முதலிய கற்கள்; உயர்மதம் = எழுச்சி மிக்க வீர உணர்வு; மெல்லென்று = மென்மையான ; அறநெறி = அறம் பொருந்திய நல்வழிகள்;  பொருளில் = செல்வத்தினால் .

-----------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, கும்பம்(மாசி),07]

{19-02-2021}

-----------------------------------------------------------------------------------------------------------------------

கல்லிற் பிறக்கும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .