name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக் கடிகை (04) பறைபட வாழா அசுணமா !

வெள்ளி, பிப்ரவரி 19, 2021

நான்மணிக் கடிகை (04) பறைபட வாழா அசுணமா !

களங்கம்  நேர்ந்தால் சான்றோர் உயிர் துறப்பர் !

-----------------------------------------------------------------------------------------------------------

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக் கடிகை பல கருத்தான பாடல்களைக் கொண்ட இலக்கியம் ! முத்து முத்தான 101 பாடல்களைக் கொண்ட நீதி நூல் ! அதிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------
பறைபட வாழா அசுணமா; உள்ளம்
குறைபட வாழார் உரவோர்நிறைவனத்து
நெல்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வா
சொல்பட்டால் சாவதாம் சால்பு !

-----------------------------------------------------------------------------
பொருள்
------------------------------------------------------------------------------------------------------------
அசுணமா என்னும் கேகயப் பறவைக்கு பறையொலி பிடிக்காது; பறையொலியைக் கேட்டால் அஃது உயிர் நீத்துவிடும் !

அறிவார்ந்த மக்கள் தமது மதிப்புக்கு மாசு நேர்வதை விரும்பமாட்டார்; நேர்ந்தால் உயிர் வாழத் துணியார் !

மூங்கில் தூர்களில் அதன் வாணாளில் ஒருமுறைதான் அரிசி விளையும்; விளைந்த பின் அவை உயிர் வாழாது பட்டுப் போகும் !

அதுபோல்,  நிறையுடைய சான்றோர் தம்மீது பழிச்சொல் ஏற்படுவதைப் பொறுக்க மாட்டார்; ஏற்பட்டால் அக்கணமே உயிர் துறப்பர் !

------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
---------------------------------------
அசுணமா = கேகயப் பறவை (இதை மயில் என்கின்றனர் சிலர் ) உரவோர் = அறிவுடையோர் ; நிறைவனத்து = காட்டிலுள்ள ; வெதிர் = மூங்கில்  ; சாம் = மடிந்து போகும் ;  சால்பு = நிறையுடைய சான்றோர்

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}
-------------------------------------------------------------------------------------------------------------
                  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .