name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக் கடிகை (05) மண்ணி அறிப மணி நலம் ! -

வெள்ளி, பிப்ரவரி 19, 2021

நான்மணிக் கடிகை (05) மண்ணி அறிப மணி நலம் ! -


புரவியின் இயல்பை அதில் ஏறி நடத்திச் செல்கையில்    அறியமுடியும்  !


------------------------------------------------------------------------------------------------------------

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக் கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர்.  கி.பி. 2 –ஆம் நூற்றாண்டில் தோன்றியது இவ்விலக்கியம் ! இதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்
----------------------------------------------------------------------------------------------
மண்ணி   அறிப   மணிநலம்;   பண்ணமைத்து
ஏறியபின்   அறிப    மாநலம்;   மாசறச்
சுட்டறிப,  பொன்னின்   நலம்காண்பார்;  கெட்டறிப
கேளிரான்  ஆய பயன் !
-----------------------------------------------------------------------------------------------
பொருள்:
------------------

மாணிக்கம் முதலான மணிகளின் இயல்பை ஆய்ந்து அறியும் வல்லுநர்கள், அவற்றை நீரால் கழுவி அறிவார்கள் !

குதிரையின் இயல்பை ஆய்ந்து அறியும் வல்லுநர்கள், அதன் மேல் சேணம் பூட்டி ஏறி நடத்திச் சென்று அறிவார்கள் !

பொன்னின் இயல்பை ( மாற்றினை ) அறியும் வல்லுநர்கள் அதனைப் புடமிட்டு உருக்கி அறிவார்கள் !

ஆனால்,உறவினர்களின் இயல்பினை அறிய விரும்பும் ஒரு மனிதன், அவன் வறுமைக்கு உள்ளாகித் துன்பப்படும் காலத்தில் தான் உண்மையில் அறியமுடியும் !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------
மண்ணி = நீரால் கழுவி; பண்ணமைத்து = சேணம் பூட்டி;  மா = குதிரை;  மாசற = செம்பு முதலியவற்றின் கலப்பு நீக்கி;  கெட்டறிப = கெட்டுப் போகும் காலத்தில் அறிவார்கள்;  கேளிர் = உறவினர்கள்
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}
------------------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப்பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .