name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ் (19) தமிழில் பேசுவோம் ! தமிழையே எழுதுவோம் !

சனி, அக்டோபர் 12, 2019

தமிழ் (19) தமிழில் பேசுவோம் ! தமிழையே எழுதுவோம் !

ஜ, ஷ, ஸ, க்ஷ, ஹ, ஆகிய கிரந்த எழுத்துகளை விலக்குவோம் !


தமிழில் உள்ள எழுத்துகள் மூன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. அவை உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து ஆகியவை !

”, முதல்வரையிலான  12 எழுத்துகளும் உயிரெழுத்துகள் எனப்படும். “க், ங், ச், ஞ், ட், எனத் தொடங்கி, ”ன்“ –ல் முடியும் 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் !

, கா,.......கௌஎனத் தொடங்கி .”,னா......னௌஎன முடியும் 12 X 18 = 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்!

என்பது ஆய்த எழுத்து; (ஆயுதம் அன்று ! ஆய்தம் என்பதே சரி !)

சரி ! தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்துணை ? 12 + 18 + 216 + 1 = 247. தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயமுண்டா ? இல்லை அல்லவா ?

இப்பொழுது NATARAJAN என்பதைத் தமிழில் எழுதுங்கள் ! எழுதிவிட்டீர்களா ? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் !

என்ன இது ? ”நடராஜன்என்று எழுதி இருக்கிறீர்கள் ? நீங்கள்தானே ஒப்புக் கொண்டீர்கள், தமிழ் எழுத்துகள் 247 என்று ? இந்த 247 –ல்என்னும் எழுத்து இருக்கிறதா ? இல்லை அல்லவா ? அப்புறம் எங்கிருந்து இந்தவந்தது ?

தமிழில் சில ஒலிகளுக்கு எழுத்துகள் இல்லை என்று சொல்லி, சில தமிழ்ப் பகைவர்கள்  ”, ””, “”, ”க்ஷ”, ”ஆகிய ஐந்து கிரந்த எழுத்துகளைத் தமிழ் நாட்டில் புகுத்தி விட்டனர்.  மஞ்சள்என்று உரக்கச் சொல்லுங்கள் ! இதில் வரும்என்னும் எழுத்துஎன்றுதானே ஒலிக்கிறது ? அப்புறம் எதற்குத் தனியாக ஒரு”. “மகம்என்று உரக்கச் சொல்லிப் பாருங்கள் ! இதில் வரும்என்பதுஎன்று தானே ஒலிக்கிறது ! அப்புறம் எதற்கு இந்த” ?

சமற்கிருதம், இந்தி ஆகியவற்றில்”, “ஆகிய இரண்டு ஒலிகளுக்கும் எழுத்துகள் இல்லை. ”எறும்புஎன்று வடமொழியில் எழுத முடியாது.” “ஏறும்புஎன்று தான் எழுத முடியும். “தொல்காப்பியம்என்று இந்தியில் எழுத முடியாது; “தோல்காப்பியம்என்று தான் எழுத முடியும் !

வங்காள மொழியில்என்னும் ஒலிக்கு எழுத்து இல்லை. “வைத்தியநாதன்என்று வங்காள மொழியில் எழுத முடியாது. “பைத்தியநாதன்என்றுதான் எழுத முடியும். அங்குஎன்னும் ஒலி இல்லாமையைஎன்னும் ஒலி தான் இட்டு நிரப்புகிறது !

ஆங்கிலத்தில்அன்பழகன்என்று எழுத முடியாது. ANBAZHAGAN என்று எழுதுகிறோம். “ZHA" மூன்று எழுத்துகளும்என்னும் ஒலியைக் கொண்டுவர முடியாது. ZINC, ZEBRA, ZONE, ZOO ஆகிய எந்த ஆங்கிலச் சொல்லிலும்எழுத்தின் ஒலி வருகிறதா ? இல்லையே ! ஆங்கிலத்தில்ஒலி இல்லை என்பது உண்மை அன்றோ !

உலகத்தில் எந்த மொழியை எழுத்துக் கொண்டாலும், அந்த மொழிகளில் அனைத்து ஒலிகளையும் ஒலிப்பதற்கான எழுத்துகள் இருக்கின்றன என்று யாராலும் கூற முடியாது. குறிப்பிட்ட ஒலியைப் பலுக்குவதற்கு (உச்சரிப்பதற்கு) ஏதாவதொரு எழுத்து இடத்திற்குத் தக்கவாறு அங்கு அமைகிறது !

இந்த உண்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், தமிழில் கிரந்த எழுத்துகளான”, “”, “”, “க்ஷ”, “ஆகியவற்றைப் புகுத்தியவர்களின் தமிழ்ப் பற்றை என்னவென்பது ?   அவற்றை விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் நாமும்தமிழ்ப் பகைவர்என்னும் பழிக்கல்லவா ஆளாகிறோம் !.

இனிமேல், நாம்நடராசன்”, என்றே எழுதுவோம் ! “நடராஜன்வேண்டாம். “சுரேச்குமார்என்று எழுதுவோம்; “சுரேஷ்குமார்வேண்டாம். “”இராமதாசுஎன்று எழுதுவோம்; “இராமதாஸ்வேண்டாம் !

என்ன நண்பர்களே ! கிரந்த எழுத்துகளை விலக்கிவிட்டுத் தமிழ் எழுத்துகளையே இனிப்  பயன்படுத்தலாமா ?  நீங்கள் அணியம் (READY) என்றால் நானும் அணியமே ! “அணியம்என்று பின்னீடு செய்து நமது தமிழ்ப் பற்றை உலகறியச் செய்வோமே ! இதற்கும் ஒருவிழைவு” (LIKE) தராமல்அணியம்என்று கருத்துரை (COMMENT) எழுதுங்கள் பார்க்கலாம் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, மடங்கல் (ஆவணி),09]
{26-08-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
     
  “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .