name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புறநானூறு (112) அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் !

வெள்ளி, ஜனவரி 22, 2021

புறநானூறு (112) அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் !

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் !


பாடலின் பின்னணி : 

பாரி இறந்த பின்னர்,  அவரது இரு மகளிரையும் கபிலர்

பாதுகாப்பான  இடத்தில் தங்க வைத்து  அவர்களைக் காப்பாற்றி

வந்தார். பாரி இறந்து ஒரு மாதம் ஆகிய பிறகு, ஒரு நாள

முழு நிலவில் அவர்களுக்குத் தங்கள் தந்தையின்  

நினைவும் நாட்டின் நினைவும் வந்து அவர்கள வாட்டியது. 

அம்மகளிர் தம் மனவருத்தத்தை இப்பாடலில் வெளிப்  

படுத்துகிறார்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------
புறநானூறு.பாடல்.112.
-----------------------------------------------------------------------------------------------------------

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்

எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!
----------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பொருள்: 
----------------------------

ஒரு மாதத்திற்கு முன்பு, நிறைமதி நீலவானில் ஓளிவீசிக் 

கொண்டிருந்த அந்த 

நாளில் நாங்கள் எங்கள் தந்தையைப்  பெற்றிருந்தோம்; எங்கள் 

ஆட்சிக்குரிய 

(பறம்பு) மலையும்  எங்களிடம்  இருந்தது. அதேபோல், இன்றும் 

நிறைமதி 

நீலவானில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால்

இந்நாளில் எம் 

தந்தையும் இல்லை; எம் மலையும் எம்மிடம் இல்லை !

போரில் வென்ற வேந்தர்கள் 

எங்கள் மலையைக் கவர்ந்து 

கொண்டனர்

நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கிறோம் !

------------------------------------------------------------------------------------------------------------

சிறப்புக் குறிப்பு: 
-------------------------

மூவேந்தர்களும் பாரியைப் போரில் வெல்ல

 முடியவில்லை. 

ஆனால், அவர்கள் 

அவனை சூழ்ச்சியால் வென்றனர்.

வென்றெறி முரசின் வேந்தர்என்பது 

மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை

 வெல்லவில்லை என்பதைச் 

சுட்டிக் காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு.
-------------------------------------------------------------------------------------------------------------
          ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
          கட்டுரை

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.; 2050, மேழம்,14]

{27-04-2019}}
------------------------------------------------------------------------------------------------------------

அற்றைத் திங்கள்






8 கருத்துகள்:

  1. பாரி மரனத்துக்குப்பின் வந்த ஒரு வெண்ணிலா இரவில் என்பது சரியாக இருக்கும் முன்னை திங்கள் என்றோ சென்ற திங்கள் என்றோ எழுதாமல் அற்றை திங்கள் என எழுதபட்டிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்து எனக்கு உடன்பாடே ! கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி ! மிகத் தாமதமாக மறுமொழி விடுப்பதற்குப் பொறுத்தருள்க !

      நீக்கு
  2. இப் பாடப்பதி இன் முழு அர்த்தம் என்பவற்றை காட்டுக

    பதிலளிநீக்கு
  3. பாடலின் பொருள் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதே !

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. சிலர் என் பதிவைப் படி எடுத்து, தங்கள் பதிவைப் போல் வெளியிடுகின்றனர். அதைத் தவிர்ப்பதற்கே இந்த ஏற்பாடு !

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அருமை ஐயா.
    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .