name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக் கடிகை (22) ) மனைக்குப் பாழ் வாள் நுதல் இன்மை !

புதன், ஜூன் 30, 2021

நான்மணிக் கடிகை (22) ) மனைக்குப் பாழ் வாள் நுதல் இன்மை !

கி.பி. 2 –ஆம் நூற்றாண்டில் தோன்றிய நான்மணிக்கடிகை கடவுள் வாழ்த்து உள்பட 106 செய்யுள்களை உள்ளடக்கியது. விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் இதைப் படைத்துள்ளார். ஒவ்வொரு பாடலிலும்  நந்நான்கு மணி மணியான கருத்துளைச் சொல்வதால் இது நான்மணிக்கடிகை எனப் பெயர்பெற்றது. இதிலிருந்து ஒரு செய்யுள் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (22)

----------------------------

மனைக்குப் பாழ்  வாள்நுதல்  இன்மை; தான்  செல்லும்

திசைக்குப் பாழ்நட்டோரை இன்மைஇருந்த

அவைக்குப் பாழ்  மூத்தோரை இன்மைதனக்குப்பாழ்

கற்றறி  வில்லா உடம்பு.

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

---------------

 

மனைவி இல்லாத வீட்டில் அழகும் மகிழ்ச்சியும் துளியளவும்  இருக்காது  என்பதால் அவ்வீடு விரைவாக நலிவடைந்து  போகும் !

 

செல்கின்ற ஊர்களில் நமக்கு நண்பர்கள் இல்லாதிருந்தால், இளைப்பாற இடமின்றி நமது செலவு (பயணம்நலிவடைந்து போகும் !

 

கல்வி, கேள்விகளிற் சிறந்த மூத்தோர்கள் இல்லாத அவை, நெறிப்படுத்துவார் இன்றி விரைந்து நலிவடைந்து போகும் !

 

அதுபோல், கல்வி அறிவு இல்லாதமனிதனின்  வெறும் உடம்பினால் பயனேதுமில்லை; அவன் வாழ்வே நலிவடைந்து போகும் !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

மனைக்குப் பாழ் = இல்லத்திற்கு நலிவு என்பது; வாள் நுதல் இன்மை = மனைவி இல்லாமை; செல்லும்திசை = செல்கின்ற ஊர்; நட்டோரை = நண்பர்களை; அவை = பலர் கூடும் மன்றம்; மூத்தோர் = கல்வி கேள்விகளில் சிறந்தோர்; தனக்கு = ஒவ்வொரு மனிதனுக்கும்; கற்ற்றிவில்லா = படிப்பறிவு இல்லாத.

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, ஆடவை (ஆனி),16]

{30-06-2021}

-------------------------------------------------------------------------------------------------------------



 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .