name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தனிப்பாடல் (518) நாலெழுத்தாம் ஏமம் ! மத்தி நண்ணும் !

வியாழன், நவம்பர் 26, 2020

தனிப்பாடல் (518) நாலெழுத்தாம் ஏமம் ! மத்தி நண்ணும் !

நான்கெழுத்துச் சொல்லை வைத்து  ஒரு புதிர் !


தமிழில்  ஈடுபாடு  மிக்க  அறிஞர் பெருமக்கள் பாடல் வாயிலாகவே விடுகதைகள்  சொல்வதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். அப்படிப்பட்ட   புலவர் ஒருவர் சொன்ன விடுகதை இதோ ! இந்தப் புலவரைப் பற்றிய வரலாறும்  கிடைத்தில !

------------------------------------------------------------------------------------------------------------

 

நாலெழுத்தா  மேமத்தி  னண்ணுமுத   னீக்கிடினோ

வேல்விழியா   மிரண்டுவிடி   னேநிசியாம்  -  காற்றலையும்

வல்லபுலி   முன்னிரண்டும்   வாளியா   நான்கி  லொன்று

நல்லமதி  யீதெனவே   நாட்டு.

 

------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரிக்காமல் எழுதிய நிலையில் பாடலின் பொருளை விளங்கிக் கொள்வது அத்துணை எளிதன்று ! எனவே உங்களுக்காக இப்பாடலைச் சந்தி பிரித்துத் தருகிறேன் !

------------------------------------------------------------------------------------------------------------

 

நாலெழுத்தாம் , ஏமம்மத்தி  நண்ணும்  முதல்  நீக்கிடினோ,

வேல்விழியாம்,   இரண்டு விடின்  நிசியாம்,  -  கால் தலையும்

வல்ல புலிமுன் இரண்டும்  வாளியாம்நான்கில்  ஒன்று

நல்ல மதி,  ஈது எனவே நாட்டு !

 

-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:-

-------------------

 

நான்கு எழுத்து உள்ள ஒரு சொல்இச்சொல்லில் உள்ள முதல் எழுத்தை நீக்கி விட்டால்மங்கைஎன்று பொருள் படும்முதல் இரண்டு எழுத்துகளை நீக்கிவிட்டால்இரவுஎன்று பொருள் ஆகும்முதலெழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்தால்  “புலிஎன்று பொருள்முதல் எழுத்தும் இரண்டாவது எழுத்தும் சேர்ந்தால்அம்புஎன்று பொருள் கிடைக்கும்நான்கு எழுத்துகளில் ஒன்றை மட்டும் கருதினோமானால்   ஒரு மாதத்தின் பெயர் வரும்; இஃது என்ன சொல் என்பதைச் சொல்லுங்களேன் !

 

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:-

-------------------------------------

நாலெழுத்தாம் = நான்கு எழுத்துகள் உள்ளஏமத்தில்  = இச்சொல்லில் ; நண்ணும் முதல் நீக்கிடினோ = அமைந்துள்ள முதல் எழுத்தை நீக்கிவிட்டால் ; வேல்விழியாம் = வேல்விழி என்று சொல்லப்படுகிறமங்கைஎன்பதாகும்இரண்டு விடின் =முதல் இரண்டு எழுத்துகளை விட்டுவிட்டால்நிசியாம் = நிசி என்று சொல்லப்படும்  இரவு என்பதைக் குறிக்கும்கால் தலையும் வல்ல புலி = இச்சொல்லில் காலாகவும் தலையாகவும் இருக்கிற முதலெழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்தால்  வருகின்ற சொல் புலியைக் குறிக்கும்; முன் இரண்டும் வாளியாம் = முதலிரண்டு எழுத்துகளைச் சேர்த்தால்  வரும் வாளிஎன்னும் சொல்லைக் குறிக்கும் (வாளி = அம்பு); நான்கில் ஒன்று = இந்த நான்கு எழுத்துகளில் ஒன்று ; நல்லமதி =  நல்ல மாதங்களில் ஒன்று ! ஈது எனவே நாட்டு = இது தான் அந்த விடை என எனக்குச் சொல்வாயாக !

 

-----------------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஐப்பசி),19]

{04-11-2020}

 

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .