name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (06) படமும் கதையும் !

செவ்வாய், அக்டோபர் 15, 2019

நிழற்படம் (06) படமும் கதையும் !

சுவடுகள் நிறைந்தது வாழ்க்கைத் தடம் ! அதன் மீது ஒளிபாய்ச்சுவது   நிழற்படம் !



ஓசூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திலிருந்து நான் பணி ஓய்வு பெறும்  நாளில் எனது இருக்கையில் அமர்ந்திருந்த போது  எடுக்கப் பெற்ற படம். அப்போது என் அகவை 57. படம் எடுக்கப்பட்ட நாள்.30-4-2001. கல்வி ஆவணங்களின் படி அன்றைய நாளில் என் அகவை 58 என்பதால், ஒரு ஆண்டு முன்னதாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.


------------------------------------------------------------------------------------------------------------
பணி ஓய்வுப் பாராட்டு விழாவின் போது எடுக்கப் பெற்ற ஒரு படம்.  எடுக்கப் பெற்ற நாள்,4-5-2001. அன்றைய நாளில் என் உண்மையான அகவை 57; ஆவணங்களின் படி , 58.




-------------------------------------------------------------------------------------------------------------

என் மூத்த மகள் கவிக்குயில் - சிவகுமார் திருமணம் 6-2-2003 அன்று  திருத்துறைப் பூண்டி மங்கை மகாலில் நடைபெற்றதை முன்னிட்டு  ஓசூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் பொது எடுக்கப் பெற்ற ஒரு குழு நிழற் படத்திலிருந்து பிரித்து உருவாக்கப் பெற்ற எனது படம். படம் எடுத்த நாள். 16-2-2003.அப்போது என் அகவை. 59.


------------------------------------------------------------------------------------------------------------

கவிக்குயில் - சிவகுமார் திருமணத்தை யொட்டி ஓசூரில் நடைபெற்ற மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியின் போது, எடுக்கப்பட்ட நிழற்படம். படம் எடுக்கப் பெற்ற நாள். 16-2-2003, அப்போது எனது அகவை 59.


-----------------------------------------------------------------------------------------------------------

தஞ்சாவூர் நகரம், நீலகிரி ஊராட்சி, கண்ணம்மாள் நகரில், மனை எண் 26 -ல் என்னால்  புதிதாகக் கட்டப் பெற்ற வீட்டில் புதுமனை புகுவிழா நடைபெற்ற போது எடுத்த படம். படம் எடுத்த நாள். 4-2-2004. அன்றைய நாளில் என் அகவை. 60.


-----------------------------------------------------------------------------------------------------------


1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .