name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நிழற்படம் (01) படமும் கதையும் !

திங்கள், அக்டோபர் 14, 2019

நிழற்படம் (01) படமும் கதையும் !

இளமை மீண்டும் திரும்புவதில்லை ! எனினும் பின்னோக்கிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி !


-----------------------------------------------------------------------------------------------------------

திருத்துறைப்பூண்டியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, மாமா வீட்டில் இருக்கையில், ஏதோவொரு விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டி  18 -ஆம் அகவையில் (5-01-1962 அன்று) எடுத்த படம். எங்கோ இருந்த படத்தைத் தேடி எடுத்த போது முகத்தில் சிறிது அழிந்து போயிருந்தது தெரியவந்தது ! இதைச் சீர் செய்ய       இயலாதோ ?


-------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில், கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் இளநிலை ஆய்வாளராகப் பணி புரிகையில், வன்னியர் வாடகை மாளிகை  நண்பர்கள் அம்மாப்பேட்டை திரு.சுந்தரமூர்த்தி (N.M.E.P),  திரு.சக்கரியாசு (PANCHAYAT UNION), ஊராட்சி ஒன்றியக் கணக்கர், துகிலி திரு.காசிநாதன் (N.M.E.P) ஆகியோருடன் எனது   21 -ஆம் அகவையில் (7-1-65 அன்று) எடுத்துக் கொண்ட குழுப்படத்திலிருந்து பிரித்து எடுத்து உருவாக்கப்பட்ட  படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் இளநிலை ஆய்வாளராகப் பணி புரிகையில், தமிழ்நாடு தேர்வாணைக் கழகத்திற்கு விண்ணப்பம்  அனுப்புவதற்காக 22 -ஆம் அகவையில் (20-1-1966 அன்று ) எடுக்கப் பெற்ற படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பண்டகக் காப்பாளராகப் பணி  புரிந்த போது, 24 -ஆம் அகவையில் (15-3-1968 அன்று)  பயிற்சி நிலையத்தின் நிலாமுற்றத்தில் (TERRACE)  நான் நிற்க, மேற்பார்வைப் பயிற்சி அலுவலர், திரு. ஆறுமுகம் அவர்களால் எடுக்கப் பெற்ற  படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், பண்டகக் காப்பாளராகப் பணி புரிந்த போது, எனது 24 -ஆம் அகவையில் (15-3-1968 அன்று) அங்குள்ள பெரியநாயகி அம்மன் திருக்குளப் படிக்கட்டில் நான் நிற்க, மேற்பார்வைப் பயிற்சி அலுவலர், திரு.ஆறுமுகம் அவர்களால் எடுக்கப்பட்ட படம்.


-------------------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .