name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பெயர் விளக்கம் (21) காத்தமுத்து - பெயரின் பொருள் தெரியுமா ?

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

பெயர் விளக்கம் (21) காத்தமுத்து - பெயரின் பொருள் தெரியுமா ?

   முத்துக்கள் தான் எத்தனை வகை ? 


முத்து என்பது தமிழ்ச்சொல் தான். வெண்மணி, ஆரம், தரளம், நித்திலம் எனப் பல பெயர்கள் முத்துக்கு வழங்கப்படுகின்றன. முத்து என்பது முருகனையும் பிள்ளையாரையும் சிவனையும் குறிக்கும் சொல் ஆகும்.. முத்து என்ற சொல் தனியாகவும் பிற சொல்லுடன் இணைந்தும் மாந்தர்களின் பெயர்களைச் சுட்டி நிற்கின்றன. சில பெயர்களுக்கு பலருக்குப் பொருள் தெரியாது. இப்போதாவது பொருள் தெரிந்து கொள்வோமா !

------------------------------------------------------------------------------------------------------

  • ஆண்டிமுத்து (ஆண்டி =முருகன்=எழிலன்)...........= எழில்மணி
  • ஆனைமுத்து (ஆனை= யானை)........................= வேழவேந்தன்
  • ஒண்டிமுத்து (ஒண்டி=தனியாள்=பிள்ளையார்)......= வேழமுகன்
  • கருமுத்து  (கார் = கரிய முகில்)...........................= முகில்வண்ணன்
  • காத்தமுத்து (காத்தல்=காக்கும் கடவுள்) (சிவன்.........= அழல்வண்ணன்
  • சிங்கமுத்து (சிங்கம்=அரிமா).............................= அரிமாமணி
  • சுடலைமுத்து (சிவன்) (சுடலை=சுடுகாடு).............= நுதல்விழியன்
  • சோனைமுத்து  (சோனை=மழை, புனல்).............= புனல்வேந்தன்
  • தங்கமுத்து (தங்கம்=பொன்)..............................= பொன்மணி
  • நாகமுத்து (நாகம் = முகில்) )...............................= முகில்மணி
  • நாடிமுத்து (நாடி=துளை)=துளையிடப்பட்ட முத்து.........= மணியொளி
  • பச்சைமுத்து (பசுமை = இளமை).........................= இளமுருகு
  • பேச்சிமுத்து (சிவன்)........................................= சிவமணி
  • மஞ்சமுத்து (மஞ்சு =  மேகம்)...............................= மேகவண்ணன்
  • மாரிமுத்து  ( மழைத்துளி )..................................= சாரல்நாடன்
  • முத்தம்மாள் (முத்து=வெண்மணி).........................= வெண்மணி
  • முத்து (கடல் சிப்பியில் விளைவது)............................= கடல்மணி
  • முத்துக்கண்ணு (கண்ணு = விழி)........................= மணிவிழி
  • முத்துக்கிருஷ்ணன் (கிருஷ்ணன்=மாலன்)..........= மணிமாலன்
  • முத்துக்குமரன் (குமரன்=இளந்தை.......................= இளமுருகு
  • முத்துச்சாமி (சாமி = தலைவன்).............................= மணியரசன்
  • முத்துராஜ் (ராஜ் = அரசு).......................................= முத்தரசன்
  • முத்துலட்சுமி (லட்சுமி = எழில் ; செல்வி)...................= எழில்மணி
  • வைரமுத்து (வைரம்=ஒளிமணி)..............................= ஒளிமணி

-------------------------------------------------------------------------------------------------------


01.ஆண்டி = ஆண்டிக் கோலத்தில் பழனியில் இருக்கும் முருகன். 03. ஒண்டி = திருமணமே செய்து கொள்ளாது தனித்து இருக்கும் பிள்ளையார். 11. ஆரமாகக் கோப்பதற்கு துளையிடப்பட்ட முத்து = நாடிமுத்து.
---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{22-08-2018}

--------------------------------------------------------------------------------------------------------
       
  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .