name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (81) - மருந்தாக்க நிறுவனங்களும் நோயாளிகள் பெருக்கமும் !

சனி, அக்டோபர் 03, 2020

சிந்தனை செய் மனமே (81) - மருந்தாக்க நிறுவனங்களும் நோயாளிகள் பெருக்கமும் !


மருந்தாக்க நிறுவனங்களும் நோயாளிகள் பெருக்கமும் !


----------------------------------------------------------------------------------------------------------

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று, வீடு தோறும் நீரிழிவு நோயாளி ஒருவராவது இருக்கிறார். அரை நூற்றாண்டுக்கு முன்பு மூட்டுவலியைப் பற்றி யாருக்கும் தெரியாது.  இன்றைய நிலைமை என்ன? ஐம்பது விழுக்காடு மக்கள் மூட்டு வலியால்  அவதிப்பட்டு  வருகிறார்கள். இத்தகைய நிலைமை ஏன் வந்தது ?

மைய அரசில் மக்கள் நலம் காக்க  ஒரு துறை இருக்கிறது. அதற்கு முதனிலை அமைச்சர் (CABINET MINISTER) இடைநிலை அமைச்சர் (DEPUTY MINISTER) என நான்கைந்து  அமைச்சர்களும்  உள்ளனர். மாநிலங்களிலும் மக்கள் நலத்துறையும் அதற்கென அமைச்சர்களும் இருக்கின்றனர். இவர்கள் தமது கடமையாகக் கருதுவது  ஒன்றைத்தான். மக்களை நோயாளி ஆகாமல் தடுப்பது அல்ல ! நோயாளி ஆன பின்பு அவர்களுக்குப் பண்டுவம் (TREATMENT) செய்திட புதிய மருத்துவ மனைகளைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குவது மட்டுமே !

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நலமுடன் திகழ்ந்த இந்தியக் குடும்பங்கள், இன்று நோயாளிக் குடும்பங்களாகிவிட்டதே என்று இந்த அமைச்சர் பெருமக்களில் யாராவது, கவலைப் படுகிறார்களா ? இல்லை ! அதற்கு அவர்களுக்கு நேரமுமில்லை ! அவர்கள் கவலை எல்லாம் வேறு விதமாக இருக்கிறது !

ஒரு குறிப்பிட்ட நோய்க்கு  ஒரு குறிப்பிட்ட மருந்தினை ஒரு மருந்தாக்க நிறுவனம் (PHARMACEUTICAL COMPANY) அறிமுகப்படுத்திச் சந்தைப்படுத்துகிறது. அம்மருந்தில் என்னென்ன பொருள்கள் (INGREDIENTS) கலக்கப் பெற்றுள்ளன, அம்மருந்து மெய்யாகவே, குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்துகிறதா, பக்க விளைவுகளேதும் ஏற்படுகிறதா  என்பதைத் துல்லியமாக ஆய்வு செய்து, அதன்பின் அதைத் தயாரிக்கவும் சந்தைப்படுத்தவும் அனுமதிக்க வேண்டிய மைய அரசு, இப்பணியைச் செய்வது இல்லை. மாநில அரசும் இதைப் பற்றிச் சிந்திப்பது இல்லை !

நம்மை ஆள்கின்ற அரசுகள், இந்தப் புலனத்தில் (விஷயத்தில்) தமது கண்களை இறுக மூடிக்கொண்டு விட்டன. இதன் விளைவாக, மருந்தாக்க நிறுவனங்கள், குறிப்பிட்ட நோய்க்கு மருந்து தயாரிப்பதாகச் சொல்லி, வேறுவகை நோய்க்கு நம்மை ஆட்படுத்தும் விதமாகக் கூட்டு மருந்தில் உள்ள ஓரிரு பொருள்களின் (INGREDIENTS)  கலவை வீத அளவைச் சிறிது கூடுதலாக்கி அம்மருந்தினை மெல்லிய நச்சுத் தன்மை உடையதாக  ஆக்கிவிடுகின்றன என ஆய்வாளர்கள் பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர் !

ஒரு கூட்டு மருந்து, 10 வகையான பொருள்கள் கலக்கப்பெற்று தயாரிக்கப் பெறுவதாக வைத்துக்கொள்வோம்., கலவைப் பொருள்களுள் ஒருசில (SOME INGREDIENTS), குறிப்பிட்ட நோயைக் குணமாக்கத் தேவையில்லாமல் (NOT NECESSARY) இருக்கலாம். என்றாலும் அவற்றையும் கலந்து, அவற்றின் மெல்லிய  நச்சுத் தன்மை (SLOW POISON)  காரணமாக நம்மை வேறு வகையான நோயாளியாக மாற்றக் கூடிய மருந்தாக அதை உருவாக்கிச் சந்தைப் படுத்தி விடுகின்றனர், என்பது ஆய்வாளர்களின் குற்றசாட்டு.  இதைப்பற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்ட மைய அரசு, ஆய்வு செய்து அனுமதிக்கும் கொள்கையைப் பின்பற்றாததால், மருந்தாக்க நிறுவனங்களின் கமுக்க (SECRET) நடவடிக்கைகளால், நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்திலும் இருக்கும் மென்மையான நச்சுப் பொருள் நம்மை நிரந்தர (PERMANENT) நோயாளி ஆக்கிவிடுகிறது !

எடுத்துக்காட்டாக,  முறைக் காய்ச்சலுக்கு (MALERIA FEVER) மருந்து சாப்பிடும், ஒரு மனிதன், 10 நாள்களில் காய்ச்சலிலிருந்து விடுபடுகிறான். ஆனால் காலப்போக்கில் அவன் நீரிழிவு நோயாளியாகவோ, மூட்டுவலி நோயாளியாகவோ, உயர் குருதி அழுத்த (HYPER TENSION) நோயாளியாகவோ, குண்டிக்காய் செயலிழப்பு (KIDNEY FAILURE) நோயாளியாகவோ மாறிவிடுகிறான் !

மருந்தாக்க நிறுவனங்கள் ஏன் இந்த கமுக்க (SECRET) நடவடிக்கைகளில் இறங்குகின்றன. நோயாளிகள் பெருகினால் தான் மருந்து விற்பனை பெருகும். விற்பனை பெருகினால் தான் கொள்ளை கொள்ளையாகப் பணம் சேர்க்க முடியும். மைய, மாநில அரசுகள் ஏன் இதைக் கண்டுகொள்வதில்லை. கண்டுகொண்டால் மருந்தாக்க நிறுவனங்களிடமிருந்து கோடி கோடியாக தேர்தல் நிதி கிடைப்பது பறிபோய்விடுமே !

மக்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரும்பான்மையோர் அவர்கள் செய்யக் கூடாததைச் செய்து, நோயாளி ஆவதில்லை. மருந்தாக்க நிறுவனங்களின் பேராசையால், நலமுள்ள மனிதனும் நோயாளி ஆக்கப்படுகிறான். இதுதான் இன்றைய நிலை !

மக்களைக் காப்பாற்ற வேண்டிய மைய, மாநில அரசுகளின் செயல்பாடின்மை, மருந்தாக்க நிறுவனங்களின் பேராசை ஆகியவற்றால் இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நீரிழிவு நோயாளியோ, ஒரு மூட்டு வலி நோயாளியோ இருக்கக் கூடிய நிலை தோன்றியுள்ளது !

ஆங்கில முறை மருத்துவராக உள்ள நம்மவரே, அவர்களையும் அறியாமல், மருந்தாக்க நிறுவனங்களின் சம்பளமில்லா முகவர்களாக மாறி, ஒரு நோய்க்கு ஏழெட்டு மருந்துகளை எழுதித் தந்து எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர் !

மைய, மாநில அரசுகளின் மக்கள் நலத்  துறை அமைச்சர்கள் இனிமேலாவது தமது கடமையை உணர்ந்து செயல்படுவார்களா ? அல்லது  வீட்டுக்கு ஓரிருவரை நிரந்தர நோயாளியாக மாற்றும் மருந்தாக்க நிறுவனங்களின் சூழ்ச்சிக்குத் துணை போவார்களா ? வாக்களிக்கும் மக்கள் தான் விழிப்படைய வேண்டும் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்,
[தி.: 2050, சுறவம், 11.]
{25-01-2019}
--------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .