name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பல்வகை (16) ”ஐக்கூ” எனச் சொல்லாதீர் !

ஞாயிறு, நவம்பர் 17, 2019

பல்வகை (16) ”ஐக்கூ” எனச் சொல்லாதீர் !

 மூன்று அடிகளால் ஆன “ஐக்கூ” பாடலை “சிந்தியல்     தேன்பா” என்போம் !


சப்பான் நாட்டு நன்கொடையாக இரண்டு சொற்களை நாம் பயன்படுத்தி வருகிறோம் ! ஒன்றுசுனாமி”, இரண்டாவதுஹைக்கூ” !

2005 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை தமிழ் நாட்டில் பேரழிவை உண்டாக்கிய போது இறக்குமதியான சொல்சுனாமி”. வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.இரமணன் அவர்கள் எத்துணையோ முறைஆழிப் பேரலைஎன்று சொல்லிச் சொல்லிப் பார்த்தார். ஆனால், செய்தித் தாள்களும் தொலைக் காட்சி ஊடகங்களும் விடாப்பிடியாகசுனாமிஎன்ற சொல்லைப் பயன்படுத்தியதால், தமிழ்நாட்டில்சுனாமிநிலைத்துவிட்டது !

அடுத்ததாக ஹைக்கூஎன்னும் சொல், தமிழர்களின் நாவில் தாண்டவமாடுகிறது ! மூன்று வரியிலான இவ்வகைப் பாடலுக்கு சில ஆன்றோர் “துளிப்பாஎன்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் ! ஆனாலும்ஹைக்கூதமிழ்நாட்டில், சில ஊடகங்களில், குறிப்பாக, முகநூலில் செழித்து வளர்ந்து வருகிறது !

தமிழில் போதிய அறிவும் ஆற்றலும் இருப்பவர்கள் தான் கவிதை எழுத முடியும் ! இந்த வகையில்ஹைக்கூகவிஞர்கள் எல்லாம் தமிழில் ஆர்வமும் ஆற்றலும்  மிக்கவர்களே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை ! 

ஒரு சமுதாயத்தை விழிப்படையச் செய்வதில் கவிஞர்களின் பங்கு அளவிட முடியாதது ! கவிஞர்களின் சொல்லாற்றலுக்கு இருக்கும் வலிமை வேந்தர்களின் வாளுக்குக் கூடக் கிடையாது !

கவிஞர்களுக்கு இரண்டு கடமைகள் இருப்பதாகச் சான்றோர்கள் சொல்கிறார்கள் ! (01) மொழியைக் கட்டிக் காப்பது (02) சமுதாயத்தைத் தட்டி எழுப்புவது ! இந்த இரண்டு கடமைகளும் கவிஞர்களுக்கு இரண்டு கண்கள் போன்றவை !

முதல் கடமையான மொழியைக் கட்டிக் காப்பது என்பதில்ஹைக்கூகவிஞர்களின் பங்களிப்பு கண்டிப்பாக வேண்டும் ! தமிழ் நம் தாய்மொழி ! தமிழில் படித்தோம்; தமிழில் எழுதினோம்; தமிழில் சிந்தித்தோம்; இன்று தமிழால் உயர்ந்திருக்கிறோம், கவிஞர்களாக !

தமிழுக்குப் பெருமை பிறமொழிக் கலப்பு இன்றித் தனித்து இயங்கும் வல்லமை உடைமை ! இந்தப் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் வல்லமை கவிஞர்களுக்கும் உள்ளது ! அழகான உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது மனம் களிநடம் புரிகிறது ! சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போது ஒரு கல் கடிபடுவதைப் போல உங்கள் அருமையான கவிதைகளைச் சுவைக்கும் நேரத்தில்ஹைக்கூஎன்னும் சொல் பற்களுக்கு இடையே புகுந்து  தொல்லை தருகிறது !

இடைக்காலத் தமிழர்கள், தமிழில் பிறமொழிச் சொல் கலப்பைத் தடுக்கத் தவறியதால் , மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம் போன்ற மொழிகள் உருவாகித் தமிழ் நிலம் சுருங்கிப் போயிற்று !

நடப்புக் காலத்தில், வடமொழிச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும், இந்திச் சொற்களும் வரைமுறையின்றித் தமிழில் கலந்து தமிழுக்குப் பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன ! இதை எதிர்கொண்டு, தமிழின் நலத்திற்குக் கேடுவிளையாமல் காக்கும் பெரும் பொறுப்பு தமிழார்வம் மிக்க ஒவ்வொருவருக்கும் உள்ளது !

தலைப்பில் குறிப்பிட்டுள்ளதைப் போல நான் உங்களுக்கு வைக்கும்  வேண்டுகோள் மிக எளியது ! இந்த வேண்டுகோள்ஹைக்கூகவிஞர்களுக்கு மட்டுமல்ல, முகநூற் கணக்கை ஆட்சிபுரிந்து நெறிப்படுத்தும் ஆட்சியர்களுக்கும் தான் ! ஏனெனில் அவர்களும் கவிஞர்களே !

யாப்பிலக்கணத்தில் மூன்று சீர்களால் ஆன அடிக்குசிந்தடிஎன்று பெயர். மூன்று அடிகளால் ஆன பாடலுக்குசிந்தியல் பாஎன்று பெயர். “அடி மூன்றில் வந்தால் சிந்தியலாகும்என்பது யாப்பருங்கலக் காரிகை நூற்பா 28. எனவே மூன்று அடிகளால் ஆனஹைக்கூபாடலைசிந்தியல் தேன்பாஎன்று அழைக்கலாம். பொருத்தமாக  இருக்கும் !

எனவே, அருள் கூர்ந்துஹைக்கூஎன்னும் சொல்லைக் கைவிட்டுசிந்தியல் தேன்பாஎன்னும் சொல்லை வழக்கிற்குக் கொண்டு வாருங்கள் ! அல்லது சிலர் வழக்கிற் கொள்வது போல துளிப்பா எனும் பழைய பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள் ! நீங்கள் ஆற்றும் தமிழ்ப் பணிக்குஹைக்கூஎன்னும் பிறமொழிச் சொல் சர்க்கரைப் பொங்கலிடையே உருளும் சிறு கல்லாக தமிழ் ஆர்வலர்களின்  மனதை உறுத்துகிறது !

உறுத்தும் கல்லை விலக்கி, இனிக்கும் பொங்கலைத் தொடர்ந்து பரிமாறுங்கள் ! சுவைத்து மகிழ்கிறோம் ! அன்னைத் தமிழுக்கு நமது நன்றிக் கடனாகஹைக்கூசொல் துறப்பு அமையட்டும் ! “சிந்தியல் தேன்பாவழக்கிற்கு வரட்டும் !

நமது பணி தமிழுக்குஅணிசேர்ப்பதாக அமையட்டும் ! “பிணிசேர்ப்பதாக அமையலாகாது !

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050:துலை (ஐப்பசி)27]
{13-11-12019}
-------------------------------------------------------------------------------------------------------
     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .