name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (37) ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை !

ஞாயிறு, அக்டோபர் 06, 2019

சிந்தனை செய் மனமே (37) ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை !


அரசியல்  ஆதாயம் கருதி, கைம்முதலை  இழக்கலாமோ ?

--------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் – (குறள்.463)
-----------------------------------------------------------------------------------------------------------

எதிர்காலத்தில் பெறக் கூடிய ஆதாயங்களைக் கருதி, இப்போது கையிருப்பில் உள்ள முதலினை இழக்கக் கூடிய செயல்களை அறிவுடையார் மேற் கொள்ளமாட்டார் என்கிறார் திருவள்ளுவர் !

ஒரு நல்ல அரசுக்கு அழகு, மக்களுக்கு நீண்ட காலத்திற்கு நிலையான பயன் தரக் கூடிய உயர்பயன் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும் !

புதிய அணைகள் கட்டுதல், உயர் தரத்துடன் கூடிய சாலை வசதிகளை ஏற்படுத்துதல், ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் சீர்கெடாத பள்ளி / கல்லூரிக் கட்டடங்களைக் கட்டி கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், பாதுகாக்கப்பட்ட, நிலையான குடிநீர்த் திட்டங்களை உருவாக்குதல், வேளாண்மைக்குத் தேவையான நிலையான, தட்டுப்பாடில்லாத  நீர் வழங்கலை உறுதி செய்யும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் மேற்கொள்ளல், மழைப் பொழிவுக்கு அடிப்படைத் தேவையான வனவளத்தை 100 % விரிவு படுத்திப் பாதுகாத்தல் மற்றும் இன்னோரன்ன பயன்மிக்கத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் !

ஆனால் தமிழக மக்கள் இத்தகைய நல்வாய்ப்பைப் பெற்றிட வில்லை. 2018-19 –ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பாதீட்டின்படி (பாதீடு = BUDGET) அரசின் வருவாயில் 75,00,00,00,00,000 (75 ஆயிரம் கோடி) உருபா இலவசத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (இலவசம் என்றாலும் மானியம் என்றாலும் பொருள் ஒன்றே) இந்த 75 ஆயிரம் கோடி உருபாவை வைத்து சில  புதிய  அணைகளைக் கட்டலாம்; பழைய அணைகளைத் தூர் வாரலாம்; பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் கட்டலாம். இன்னும் எத்தனையோ பணிகளைச் செய்யலாம் !

மக்களிடம் வாக்குப் பறிப்புச் செய்யும் பாங்கிலேயே 75 ஆயிரம் கோடி உருபா இலவச / மானியத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 75 ஆயிரம் கோடி உருபாவும் விழலுக்கு நீர் பாய்ச்சுகிறதே தவிர, பயிருக்கு நீர் பாய்ச்ச வில்லை. பாவம் தமிழக மக்கள் ! பாவம் தமிழ் நாடு !

------------------------------------------------------------------------------------------------------
இலவச (மானிய)த் திட்டங்கள்தமிழகப் பாதீடு
 ( பட்ஜெட் 2019-20)
------------------------------------------------------------------------------------------------------

மின்சார மானியம்...............................................= 10,492.00 கோடி
வேளாண்மை & இதர மின்
நுகர்வோர் மின் மானியம்............................ = 08,118.25 கோடி
உணவு மானியம்..................................................= 06,643.00 கோடி
உள்ளாட்சி சிறப்பு நிதியுதவித்
திட்ட மானியம்.....................................................= 05,178.52 கோடி
நலிவடைந்தோர் பிரிவு சமூகப்
பாதுகாப்பு உதவி..................................................= 03,958.00 கோடி
தொழிற்துறை முதலீட்டு
மானியம்...................................................................= 02,500.00 கோடி
சத்துணவுத் திட்டம்............................................= 01,772.00 கோடி
இலவசப் பாடப்புத்தகம்,குறிப்பேடு,
காலணி, புத்தகப்பை வழங்கல்....................= 01,658.90 கோடி
இடைநிற்றல் தடுப்பூக்கத் தொகை
வகுப்பு 10,11,12 க்கு..............................................= 01,363.27 கோடி
முதலமைச்சர் விரிவான
காப்பீடு திட்டம் ..................................................= 01,363.00 கோடி
முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு
உதவித் திட்டம்...................................................=   ,959.21 கோடி
மாணவர் இலவச பஸ் பாஸ்
மானியம்..................................................................= 00,766.00 கோடி
திருமண நிதியுதவித்
திட்டம்.......................................................................= 00,726,00 கோடி
பயிர் காப்பீட்டுத் திட்டம்.................................= 00,621.59 கோடி
இலவச வேட்டி & சேலைத்
திட்டம்......................................................................= 00,490.20 கோடி
முதல் தலைமுறை பட்டதாரி
கல்வி மானியம்..................................................= 00,460.25 கோடி
டீசல் மானியம்....................................................= 00,280.00 கோடி
போக்குவரத்துத் துறை
இலவச டீசல் மானியம்..................................= 00,250.00 கோடி
மானிய விலை பாவை
ஊர்தித் திட்டம்.....................................................= 00,250.00 கோடி
கரும்பு உற்பத்தி ஊக்கத்
தொகை.....................................................................= 00,200.00 கோடி
இலவச வெள்ளாடு/செம்மறி
ஆடு திட்ட மானியம்........................................= 00,198.75 கோடி
நெல் கொள்முதல்
ஊக்கத் தொகை....................................................= 00,180.00 கோடி
மீனவர் மீன்பிடித்
தடைக் கால உதவி............................................= 00,170.13 கோடி
முதியோர், மாற்றுத் திறனாளி
விதவை உதவித் திட்டம்................................= 00,168.81 கோடி
பெண் மகவு பாதுகாப்புத்
திட்டம்.......................................................................= 00,140.00 கோடி
மானிய விலை நீர் ஏற்றம்
திட்டம்........................................................................= 00,084.09 கோடி
இலவச கறவைப் பசு
மானியம்....................................................................= 00,049.83 கோடி
கைத்தறி உதவித் திட்டம்................................= 00,040.00 கோடி
-------------------------------------------------------------------------------------------------------
எல்லா மானியங்களும் சேர்த்து
மொத்தம்.................................................................= ரூ 75,000 கோடி.
------------------------------------------------------------------------------------------------------
மாற்றுத் திறனாளிகளுக்கு லவச  நான்கு சக்கர
ஊர்தி & துள்ளுந்து உதவியும் உண்டு.
-----------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, மீனம்,04]
{18-03-2019}
-------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .