பொதுவகைப் பிழை சில !
நம் பேச்சிலும் எழுத்திலும்
நிலவிவரும் தவறான வழக்கு பற்றி இப்போது பார்ப்போம் !
------------------------------------------------------------------------------------------------------------
      தவறு ! -
- - - - - -  சரி !
-----------------------------------------------------------------------------------------------------------
    சிலவு.....................=
செலவு (செல்லுதல்)
    சில்லரை..............=
சில்லறை (சில்லு சில்லாக 
                                        அறுத்தல்)
    துகை.....................=
தொகை (தொகுத்தல்)
    சுவற்றில்..............=
சுவரில் (சுவர் + இல்)
    கண்டறாவி.........=
கண்ணராவி (கண்களை
                                        அராவுதல்)
    வரையரை...........=
வரையறை (வரை யறுத்தல்)
    வகையரா............=
வகையறா (வகை யறுத்தல்)
    கோர்வை..............=
கோவை (கோ + ஐ)
    கோர்த்து...............=
கோத்து (கோ + து)
    பூர்த்தல்.................=
பூத்தல் (பூ = பகுதி)
    முயற்சித்தான்...=
முயன்றான் (முயல் =பகுதி)
    சம்மந்தம்.............=
சம்பந்தம் (நல்ல உறவு)
    குடுத்தான்...........=
கொடுத்தான்
    கச்சாத்து..............=
கைச்சாற்று
    புஸ்தகம்..............=
புத்தகம்
----------------------------------------------------------------------------------------------------------
முதல் வரிசையில் உள்ளவை
தவறு; 
இரண்டாவது வரிசையில் உள்ளவையே சரியான வழக்கு ஆகும் !
---------------------------------------------------------------------------------------------------------
மேலும்
சில தவறுகள்
---------------------------------------
எள்ளிலிருந்து  எடுபடும்  நெய் 
”எண்ணெய்”  (எள் + நெய்
=  எண்ணெய்)  எனப்
பெற்றது.முதலில் நம் நாட்டில்  நெய்ப்புப்  பொருள், விதைகளிலிருந்து
எடுக்கப் பெற்றது, எள் விதையிலிருந்தே என்னும் உண்மையை இச் சொல்
விளம்பிக்  கொண்டிருக்கிறது.
இதனை “எண்ணெய்” என்று சொல்வதே  சரி.  “எண்ணை”
தவறாவதுடன், சொல்லின் வரலாற்று உண்மை ஒன்றை மறைத்து
விடுகிறது !
அருகு = நெருங்கு. அருகாமை = நெருங்காமை.
எனவே, ”அருகாமை”யில் என்பது
தொலைவில் உள்ளதையே குறிக்கும். ஆனால், அருகில்
இருப்பதைக் குறிக்க இச் சொல்லைப் பயன் படுத்துகிறோம். இது தவறு
! ”அருகில்” என்று தான் சொல்ல வேண்டுமேயன்றி
“அருகாமையில்” என்று சொல்வது பிழை !
-------------------------------------------------------------------------------------------------------------
இல்லை,  அல்ல , என்ன
வேறுபாடு ?
-----------------------------------------------------------------------------------------------------------
அவை இல்லை:- அந்தப் பொருள்கள் குறித்த இடத்தில் இல்லை என்று பொருள் !
அவை அல்ல:-  அந்தப் பொருள், நாம் எண்ணும் பொருள் அல்ல, வேறு பொருள் என்றாகும்
!
ஆனால், இவ் வேறுபாடு தெரியாமல் பயன்படுத்துவது  வழக்கமாகிவிட்டது. வேலன் எதிரே இருக்கின்றான் – அவனைப் பார்த்து,
அவர் முருகன்  அல்லன் என்று கூறுவதே பொருந்தும். அவன் முருகன் இல்லை
என்பது தவறு !
-------------------------------------------------------------------------------------------------------------
அன்று, அல்ல, அல்லன், அல்லள், அல்லர் : எதை எங்கே பயன்படுத்துவது ?
-------------------------------------------------------------------------------------------------------------
அது அன்று !
அவை அல்ல !
அவன்
அல்லன்
!
அவள்
அல்லள்
!
அவர்
அல்லர்
!
------------------------------------------------------------------------------------------------------------
இவ் வேறுபாட்டைச் சிறிதும்
உன்னாமலேயே “அல்ல” என்னும் சொல்லை
எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். அது அல்ல, அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல,
என்பன தவறு. அவை அல்ல  என்பது மட்டுமே சரி !
-----------------------------------------------------------------------------------------------------------
பிழை.................................சரி
-----------------------------------------------
அதினால்...........=
அதனால்
பேஜார்................=
பேய்சார் (பேய்ச் 
                                   சார்ந்த நிலை, பேயினால்
                                   பீடிக்கப்பட்ட நிலை)
காக்ஷி..................=
காட்சி (காண் =பகுதி)
மாக்ஷி..................=
மாண் = பகுதி)
மண்டபம்...........= மண்டகம்
(மண்டுகிற /
                                   மக்கள் பலராக 
                                   நெருங்குகிற    இடம்)
----------------------------------------------------------------------------------------------------------
கல்வெட்டில் “மண்டகம்” என்ற சொல்லே வழங்கப் பெற்றிருக்கிறது.
“மண்டகப் படி” என்னும் சொல்லையும் காண்க
!
----------------------------------------------------------------------------------------------------------
பொருத்தமான
சொற்கள் இடாமல் எழுதுவதும் தவறு :
சரி  : குழப்பம் ஏற்பட்டது
தவறு: குழப்பம் நிலவிற்று.
சரி  : தீமை செய்தான்.
தவறு: தீமை புரிந்தான்.
சரி   ; துன்பம் நேர்ந்தது.
தவறு: துன்பம் வாய்த்தது.
சரி   : நல்லது செய்ய ஊக்கினான்.
தவறு: நல்லது செய்யத்
தூண்டினான்
சரி   : தண்டனை விதித்தார்.
தவறு: தண்டனை அளித்தார்.
----------------------------------------------------------------------------------------------------------
(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய
“தமிழில் எழுதுவோம்”
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற
ஒரு பகுதி)
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[திருவள்ளுவர் ஆண்டு: 2050, மடங்கல் (ஆவணி) 01.]
{18-08-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------
மிக்க நன்று.
பதிலளிநீக்கு