name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், மே 03, 2022

வீரராகவர் பாடல் (11) வீரம் சொரிகின்ற பிள்ளாய் உனக்குப் பெண் !

உனக்குத் திருமணம் செய்விக்கப் பெண் கிடைப்பதில்லையே !

------------------------------------------------------------------------------------------------------------

கண்பார்வையை இழந்திருந்தாலும் தமிழ்க் கல்வியைக் கசடறக் கற்று ஊர் புகழும் கவிஞராகத் திகழ்ந்தவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார்”. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பிறந்த ஊர் தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள பொன்விளைந்த களத்தூர் என்பதாகும் !

 

பல அரிய பாடல்களைப் பாடியுள்ள இவர் பத்துக்கும் மேற்பட்ட பாடல் தொகுதிகளை இயற்றியுள்ளார்அவர்து பாடல் தொகுதியிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக :--

 

-----------------------------------------------------------------------------------------------------------

 

வீரஞ்சொரி கின்றபிள்ளா யுனக்குப் பெண்வேண்டு மென்றால்

ஆருங்கொடா ருங்களப்பன் கபாலி யம்மான் திருடன்

ஊருஞ்செங் காடுநின்றன் முகம்யானை யுனக்கிளையோன்

பேருங்கடம்ப நின்றாய்நீலி நிற்கும் பெருவயிறே. 

 

----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------

வீரம் சொரிகின்ற பிள்ளாய் உனக்குப் பெண் வேண்டும் என்றால்

ஆரும் கொடார் உங்கள் அப்பன் கபாலி அம்மான் திருடன் !

ஊரும் செங்காடு நின் தன் முகம் யானை உனக்கு இளையோன்

பேரும் கடம்பன் நின் தாய் நீலி நிற்கும் பெரு வயிறே !

 

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

வீரச் செயல்கள் பல புரிகின்ற பிள்ளையே உனக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்றால் யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லையே ! காரணம் என்ன தெரியுமா உன் தந்தையோ கையில் மண்டையோட்டை ஏந்திக் கொண்டிருக்கும் கபாலியாக இருக்கிறான் ! அவன் குடியிருக்கும் இடமோ  (செங்காடுசுடுகாடு உன் அம்மானோ (மாமன்வீடு வீடாகச் சென்று வெண்ணெய் திருடித் தின்று வருபவன்  ! உன் தம்பி பெயரோ  (கடம்பன்முரடன் உன் தாய் (நீலிகருப்பி ! உனக்குப் பானை வயிறு  யானைமுகம்  யாரப்பா உனக்குப் பெண் தருவார்கள் ?

 

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

--------------------------------------

ஆரும் யாரும் கொடார் கொடுக்கமாட்டார் கபாலி கையில் மண்டையோடு வைத்திருப்பவன் அம்மான் மாமன் செங்காடு =  சுடுகாடு கடம்பன் முரடன் நீலி கறுப்பு நிறத்தவள் நிற்கும் நினக்கும் ;

 

-----------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

--------------------

பிள்ளையாரை இகழ்வது போல் புகழும் பாடல்இது வஞ்சப் புகழ்ச்சி எனப்படும் !

 

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 20]

{03-05-2022}

-----------------------------------------------------------------------------------------------------------

பிள்ளையார்