name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, மே 02, 2021

நன்னூல் விதிகள் (09) உயிரீற்றுப் புணரியல் - ஆகார ஈற்றுச் சிறப்பு விதி (ஆ,மா,மியா) (நூற்பா.171)

 

                                          உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                                    கார ஈற்றுச் சிறப்பு விதி.

 

நூற்பா.171. (ஆகார ஈற்றுச் சிறப்பு விதி.)

 

அல்வழி”, “மா’ “மியா’, முற்று முன் மிகா. (நூற்பா.171)

 

-பசு”, ”மா-விலங்குஆகிய இரு பெயர்களின் முன் வரும் வல்லினம் இயல்பாகும் (பக்.138) (நூற்பா.171)

 

+ குறிது = ஆ குறிது. (பக்.139)

+ சென்றது = ஆ சென்றது.

மா + குறிது = மா குறிது. (பக்.139)

மா + துள்ளும் = மா துள்ளும்

(அல்வழியில்”, “மாமுன் வலி இயல்பாயிற்று)

 

மியா என்னும் முன்னிலை இடைச்சொல் முன் வரும் வல்லினம் இயல்பாகும் (பக்.139) (நூற்பா.171)

 

கேண்மியா + கொற்றா = கேண்மியா கொற்றா.(பக்.139)

கேண்மியா + சாத்தா = கேண்மியா சாத்தா. (பக்.139)

(”மியாஎன்னும் முன்னிலையசை முன்  வலி இயல்பாயிற்று)

 

ஆகார ஈற்று அஃறிணை பன்மை எதிர்மறை வினை முற்றின் முன் வரும் வல்லினம் இயல்பாகும் (பக்.139) (நூற்பா.171)

 

உண்ணா +  குதிரைகள் = உண்ணா குதிரைகள்.

உண்ணா + செந்நாய்கள் = உண்ணா செந்நாய்கள்

(ஆகார ஈற்று அஃறிணை பன்மை எதிர்மறை வினை முற்றின் முன் வலி இயல்பாயிற்று)

 

உண்ணா + குதிரைகள் = உண்ணாக் குதிரைகள்

( இதை எதிர்மறைப் பெயரெச்சமெனக் கொண்டால், பொது விதிப்படி வலி மிகும்) (நூற்பா.171)


------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

--------------------------------------------------------------------------------------------------------