name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், அக்டோபர் 23, 2019

கவிதை (43) (1971) அனைவர்க்கும் வணக்கம் ! என் ! (இராசாமணி)




            கொத்து (01)                                                                  மலர் (045)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாகைக்கு இடமாற்றலாகிச் செல்லும்
இளநிலை உதவியாளர் திரு. இராசாமணிக்கு
அளித்த தேனீர் விருந்தின் போது
நான் ஆற்றிய உரை !
(ஆண்டு 1971)
-------------------------------------------------------------------------------------------------------------

            அனைவர்க்கும்   வணக்கமென்    அன்பார்ந்த       நன்றி !
            அமுதான         தமிழேநீ          அருள்தந்து       வாழ்த்து !


            பசும்புல்          நுனிவாழும்      பனித்துளியாய்    சிலகாலம்
            பழகியின்று      எமைவிட்டுப்     பறந்துசெலும்     நன்னண்ப !
            விசும்பின்        துளிவீழ்ந்த       வெண்மணலாய்  நெஞ்சமதில்
            வேதனையைத்  தூவியின்று      விரைந்துசெலும்  என்னன்ப !
            கரும்பின்         சுவைபோலக்  கற்கண்டாய்      நீர்பழகிக்
            கனிவோடு       என்னுடைய      கருத்தொத்த      துணையானீர் !
            இரும்பின்        மனவலியும்      இணையில்லாச்  செயல்திறனும்
            இணைந்திங்கு   சிலதிங்கள்       எம்முடனே       பணிபுரிந்தீர் !
            விரும்பிப்         பிரிவோலை     வேண்டியின்று    நாகைக்கு
            விரைகின்றீர்     எமக்கதுவோர்   விளம்பரிய        பேரிழப்பு !
            நரம்பின்          துணைநாடி       ஒலிகூட்டும்      வீணையென
            நானிலங்க        நீராயின்          நாகைதனை      நாடுகிறீர் !
            இல்லத்தார்       நலங்கருதி       ஏகுகின்ற         காரணத்தால் ,
            இன்முகமாய்     வாழ்த்திவிடை   கூறுகிறோம் !    போய்வருக !
            முல்லைத்தார்    சூடிமண          வாட்டிதனை      ஏற்குமடல் ,
            முத்திங்கள்       நிறையும்முன்    முறையாகத்      தந்திடுக !
            தொல்லைசூழ்    கணக்காயத்      தேர்வெழுதி      நன்னிலையில்
            தேர்வதுடன்      மேற்பதவி         ஏற்குநிலை       வரவேண்டும் !
            செல்வங்கள்      யாவையுமே      செறிந்தோங்க    வாழ்வுதனில் ,
            செம்மையுற      வாழ்த்துகிறோம் ! வாழியநீர் !       வாழியவே !

வணக்கம் !
---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

--------------------------------------------------------------------------------------------------------