name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், அக்டோபர் 15, 2019

நிழற்படம் (04) படமும் கதையும் !

ஒவ்வொரு படத்துக்குப் பின்பும் ஒரு நிகழ்வு இருக்கிறது !


நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றிய போது, நாகைக்கு வந்திருந்த தங்கை கல்யாணி இராமமூர்த்தியின் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட குழுப்  படத்திலிருந்து தனியாகப் பகுத்து உருவாக்கிய எனது படம். குழுப்படம் என்  31 -ஆம் அகவையில் (10-9-1975 அன்று ) நாகையில் உள்ள மகாலட்சுமி  நிழற்படக் கலையகத்தில் எடுக்கப்பட்டது.


----------------------------------------------------------------------------------------------------------


நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றிய போது, என் 33 - ஆம் அகவையில் (10-3-1977 அன்று) நாகையில் எடுத்துக் கொண்ட படம்.



----------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றியபோது,  எனது 36 -ஆம் அகவையில் (25-2-1980 அன்று) நாகப்பட்டினத்தின் எடுத்துக் கொண்ட படம்.


------------------------------------------------------------------------------------------------------------

சேலம், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியாற்றிய காலை, சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளின் போது, போட்டி நிகழ்ச்சிகளை நேர்முக வண்ணனை செய்த போது எடுத்த படம். அப்பொழுது  என்  அகவை  38. (படம் எடுக்கப் பெற்ற நாள் 15-5-1982)


-----------------------------------------------------------------------------------------------------------

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக்காப்பாளராகப் பணியாற்றிய காலை, சேலம் மகாதமா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் போது, நிகழ்ச்சி அறிவிப்பாளர் மற்றும் நேர்முக வண்ணனையாளராகப் பணியாற்றிய போது எடுக்கப் பெற்ற படம். அப்போது என் அகவை 39. படம் எடுக்கப் பெற்ற நாள் 16-6-1983)



------------------------------------------------------------------------------------------------------------